Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Current Affairs Tamil for TNPSC Exams 7-8 July 2020

தமிழ்நாடு

  • திருக்கோயில் தொலைக்காட்சி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட ‘திருக்கோயில்’ எனும் பெயரில் ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • "அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டம்” என்ற பெயரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • அத்திட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
    • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
    • இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். (நன்றி - தினமணி)
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி 6-7-2020 அன்று புதுச்சேரியில் காலமானார்.

இந்தியா

  • உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 ல் (Global Real Estate Transparency Index (GRETI)) இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. Jones Lang LaSalle Incorporated (JLL) மற்றும் LaSalle அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன். இந்த பட்டியல் இரு ஆண்டுகளுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஹஷாரிபாக்கிலுள்ள கெளரியா கர்மாவில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural research Institute(IARI)) புதிய நிர்வாகக் கட்டடத்திற்கு பாரதிய ஜன் சங்க் கட்சி நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி (Dr.Shyama Prasad Mukherjee) யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . (6-7-2020 அன்று 120 வது பிறந்த தின அனுசரிப்பின் ஒருபகுதியாக)
  • ”இன்ஃபார்ம்” (INFORM - Index For Risk Management) எனும் இடர் மேலாண்மைக்கான பட்டியலில் இந்தியா 31 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு (United Nations Office for the Coordination of Humanitarian Affairs (UN-OCHA)) அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • “நேகர் சம்மன் யோஜனா” (‘Nekar Samman Yojane’ / 'Weaver Samman Yojana') என்ற பெயரில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு 6-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
  • 100 சதவீத வீடுகளில் எல்.பி.ஜி வாயு இணைப்பை சாதித்துள்ள முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் 6-7-2020 அன்று அடைந்துள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்துடன்’ (Pradhan Mantri Ujjwala Yojana) ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசின் ‘ஹிமாச்சல் சுவிதா யோஜனா’ திட்டமும் பெரும் பங்காற்றியது.
கூ.தக. : பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம் (பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம்) பற்றி...
  • 1-5-2016 ல் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்களின் (adult woman) பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடும்பங்களில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்பது ஒரு முக்கியமான விதிமுறை.
  • இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது, எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.
  • இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிப்ரவரி 2018 ல் இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, ஆன்லைன் நல்வாழ்வு மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality ) குறித்த பயிற்சி அளிக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE) ) மற்றும் பேஸ்புக் (Facebook) இடையே 5-7-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • கே.எஸ்.ரெட்டி குழு (Dr K S Reddy Committee) : இந்தியாவில் மனித உரிமைகளின் மீது கோவிட் - 19 நோய்ப்பரவல் சூழலின் தாக்கம் பற்றி ஆராய கே.எஸ்.ரெட்டி தலைமையில் 11 உறுப்பினர் வல்லுநர் குழுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC) ) அமைத்துள்ளது.
  • இந்தியாவில் எம்.சி.ஏ., (Master of Computer Application -MCA) படிப்பு காலம், மூன்றாண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ”நிலையான வளர்ச்சி அறிக்கை 2020” (Sustainable Development Report 2020) ல் இந்தியா 117 வது இடத்தைப் பெற்றுள்ளது. ‘ நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளும் கோவிட்-19 ம்’ ( ‘The Sustainable Development Goals and Covid-19) என்ற தலைப்பில் Cambridge University Press வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ் மற்றூம் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
  • அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • ”இந்தியா குளோபல் வீக் 2020” (India Global Week 2020) இணையவழி மாநாடு : இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ”இந்தியா குளோபல் வீக்” என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு 9-11 ஜூலை 2020 தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.பிரிட்டனில் செயல்படும் இந்தியா- இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' எனும் இந்த பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது. முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ‘டேகிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தை (Dehing Patkai Wildlife Sanctuary) “தேசிய வனவிலங்கு பூங்கா” (National Park) வாக தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவின் உதவியுடன் நேபாள நாட்டில் கட்டப்பட்ட ”ஸ்ரீ சப்த்மாய் குருகுல சமஸ்கிருத பாடசாலை” (‘Shree Saptmai Gurukul Sanskrit Vidhyalaya) 6 ஜீலை 2020 அன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 5-7-2020 அன்று கையெழுத்திட்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘ஒஃபேக் 16’ (Ofek 16) என்ற புதிய உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல்  நாடு  ஷாவிட் (Shavit rocket) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு 6-7-2020 அன்று அமெரிக்கா அனுப்பிய கடிதத்ததில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
    • கூ.தக : 7 ஏப்ரல், 1948 ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ”நெக்லேரியா பவுலேரி” (Naegleria fowleri) என்ற மிக நுண்ணிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இங்கிலாந்து - இந்தியா வர்த்தக கவுண்சிலின் (UK India Business Council(UKIBC)) தலைமையேற்கும் முதலாவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் எனும் பெருமையை ஜெயந்த் கிருஷ்ணா (Jayant Krishna) பெற்றுள்ளார். இவர் 3-8-2020 முதல் அந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) உறுப்பினராக ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ (Startup Village) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ‘Re-think Foundation’ எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிஜோ கருவில்லா ஜார்ஜ் (Sijo Kuruvilla Georg) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக : மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) தலைவர் - ஹரேஷ் மிட்டல் (Harkesh Mittal )
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (International Financial Services Centre Authority(IFSCA)) முதல் தலைவராக இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் (Injeti Srinivas) 6-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக விலங்குவழிப் பரவும் நோய்கள் தினம் (”World Zoonoses Day 2020”) - ஜீலை 6
  • சரக்கு மற்றும் சேவை வரி தினம் (Goods and Service Tax(GST) day) - ஜீலை 1 (1-7-2017 முதல் ஜி.எஸ்.டி வரி முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ”செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”) என்ற பெயரில் சீன செயலியான “கேம் ஸ்கேனருக்கு” மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் செயலியை மேற்கு வங்க மாநில அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Getting Competitive: A Practitioner’s Guide for India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - RC பார்கவா (R C Bhargava)
  • ‘Overdraft: Saving the Indian Saver’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உர்ஜித் பட்டேல் (ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்)
Share:

TNPSC Tamil Current Affairs 5-6 July 2020

தமிழ்நாடு

  • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் (Friends of Police ) போலீஸ் என்ற தன்னார்வல அமைப்பிற்கு காவல்துறை தடை விதித்தது.
    • கூ.தக. : கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த Friends of Police அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கமே போலீசாரின் அதிகாரங்களை மக்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தான். 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் விரிவடைந்தது.
  • மதுரையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது : மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • கீழடி அகழாய்வில் எடை கற்கள் கண்டுபிடிப்பு : சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 6 ம் கட்ட அகழாய்வில் 4-7-2020 அன்றூ எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத்துக்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்தியா

  • "விரிக்‌ஷாரோபன் திட்டம்- 2020” (‘Mission Vriksharopan-2020’) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 25 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 5-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • உலகிலேயே மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையமான சா்தால் படேல் கோவிட் கோ் சென்டரை ( Sardar Patel Covid Care Centre and Hospital (SPCCCH) ) தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் 5-7-2020 அன்று திறந்து வைத்தாா்.
    • தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்ற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்தோ திபேத் எல்லை போலீஸ் படை (Indo-Tibetan Border Police (ITBP) ) அமைத்துள்ளது.
  • "நிசர்கா புயல்" (Cyclonic Storm “NISARGA” ) - கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைத் தாக்கிய புயல்.
  • இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா ஒரு தமிழர்.  இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
    • இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. (நன்றி : தினமலர்)

பொருளாதாரம்

  • உலக வங்கியின் நாடுகள் மற்றும் கடன் குழுக்களில் வகைப்பாடு 2021 ல் இந்தியாவின் நிலை (India in World Bank Country and Lending Groups 2021)
    • 1 ஜீலை 2020 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருவாய் அடிப்படையிலான ( GNI per capita) உலக நாடுகளின் வகைப்பாட்டு பட்டியல் 2021 ல், இந்தியா கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக (LOWER-MIDDLE INCOME ECONOMY) ( $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita ) கொண்ட நாடுகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே வகைப்பாட்டில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிடத்தக்க மாற்றமாக , நேபாளம் குறைந்த வருவாய் பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • இலங்கை உயர் நடுத்தர வருவாய் நாடு அந்தஸ்திலிருந்து கீழ் நடுத்தர வருவாய் நாடாக இறங்கியுள்ளது.
கூ.தக. : உலக வங்கி நாடுகளின் பொருளாதார வகைப்பாட்டிற்கான அளவீடு (2019 ஆம் ஆண்டின் படி)
  • குறைந்த -வருவாய் பொருளாதாரம் (low-income economies) - $1,035 டாலருக்கு குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • கீழ் - நடுத்தர -வருவாய் பொருளாதாரம் (lower middle-income economies) - $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்-நடுத்தர - வருவாய் பொருளாதாரம் ( upper middle-income economies) -$4,046 முதல் $12,535 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்- வருவாய் பொருளாதாரம் ( upper income economies) - $12,535 டாலருக்கு அதிகமான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )

முக்கிய தினங்கள்

  • சர்வதேச கூட்டுறவு தினம் 2020 (International Day of Cooperatives) - ஜீலை 4 (ஜீலை மாதத்தின் முதல் சனிக்கிழமை) | மையக்கருத்து - பருவநிலை மாற்றத்திற்கான கூட்டுறவுகள் ( Cooperatives For Climate Action )

விளையாட்டுகள்

  • ”பிட் ஹே டு கிட் ஹே இந்தியா” (Fit Hai to Hit Hai India) என்ற பெயரில் ‘பிட் இந்தியா திட்டத்தின்’ கீழான பிரச்சாரத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ ஆகியோர் இணைந்து 3-7-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், இந்த நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணரச் செய்வதாகும்.
  • ”டாப்ஸ்” (Target Olympic Podium Scheme (TOPS)) என்ற பெயரில் 2024 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெறவுள்ள மற்றும் 2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்தியாவின் இளம் தடகள வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சக இணையமைச்சர் கிரண் ரிஜீ (Kiren Rijiju) தெரிவித்துள்ளார்.
Share:

TNPSC Current Affairs Tamil 3-4 July 2020

TNPSC Current Affairs 3-4 July 2020
தமிழ்நாடு
    •  தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் புதிய தலைவராக டிஜிபி என்.தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொதுமக்களுடன் ‘வீடியோ கால்’ மூலம் பேசி குறைகளை கேட்டறியும் புதுமையான திட்டத்தை சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 3-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தைப் பயன்படுத்தி, பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை கமிஷனரோடு வீடியோ காலில் பேசலாம். 
  • 159 வருடங்களில் முதல்முறையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  
    • கூ.தக. : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில், 1861-ல் இந்திய போலீஸ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்திய வரலாற்றில் முதல் முறையாக,  ஒரு காவல்நிலையத்தை வருவாய்த்துறை தன் கட்டுப்பாட்டில் நீதிமன்றம் கொண்டுவந்து இதுவே முதல் முறையாகும்.
  • தனியார் பள்ளிகளுக்கான, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மூன்றாண்டு காலத்துக்கு, தலைவராக பணியாற்றுவார் என, கூறப்பட்டுள்ளது.இந்த கமிட்டியில், பள்ளிக் கல்வி, மெட்ரிக், தொடக்கக் கல்வி ஆகியவற்றின் இயக்குனர்கள், பொதுப்பணி துறையின் இணை தலைமை இன்ஜினியர், பள்ளி கல்வித் துறையின் இணை செயலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். இதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி செயலர் தீரஜ்குமார் 2-7-2020  அன்று பிறப்பித்தார்.
  • சென்னை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்திற்கு (Apollo Proton Cancer Centre (APCC)) ,  ஜே.சி.ஐ., எனப்படும், 'ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல்' (Joint Commission International (JCI)) என்ற சர்வதேச அமைப்பு, சிறப்பான செயல்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறும், எட்டாவது மருத்துவமனை இது.  இந்தியாவில், இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் மருத்துவமனை என்ற, பெருமையும் கிடைத்துள்ளது.
இந்தியா
  • பதஞ்சலி நிறுவனம் தயாரித்த ”கொரோனில்” மருந்தை விற்பனை செய்வதற்கு ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கரோனா நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்யாமல், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ரெயில்வே வாரிய (Railway Board) தலைவர்  - வி.கே.யாதவ்  (VK Yadav)
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து " BBV152" என்கிற கோவிட்-19 தடுப்பூசியை நாடு முழுவதும் உள்ள 13 மருத்துவமனைகள் நேரடியாக கொரோனா பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுத்து சோதனை செய்யப்படுகிறது . தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள SRM Medical College இதற்கான சோதனையை நடத்தவுள்ளது.
  • ”கோபால் - 19” மொபைல் செயலி (“COPAL-19”app)  கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்காக   பிளாஸ்மா கொடை செய்வோருக்காக (plasma donors)   ”கோபால் - 19”  என்ற பெயரில் மொபைல் செயலியை எய்ம்ஸ்  டெல்லி (AIIMS(All India Institute Of Medical Science) )மற்றும் ஐ.ஐ.டி. டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சி குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
  • 3-7-2020 அன்று லடாக்கில் இந்திய இராணுவ வீரர்களுடனான உரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் மேற்கோள் காட்டிய திருக்குறள்(அதிகாரம்-படைமாட்சி). 
‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு’
பொருள் :  "வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்”
சர்வதேச நிகழ்வுகள்
  •  பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கூ.தக. :பிரான்ஸ் அதிபர் - இமானுவேல் மெக்ரான்
  • ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில்  நடைபெறவுள்ள உலக உணவு கூடுகைக்கு (global food summit 2021) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் உறுப்பினர்களாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட  உமா லெலீ (Uma Lele) மற்றும் ரத்தன் லால் (Rattan Lal) ஆகியோர் ஐ.நா. பொதுச்செயலர் அண்டானியோ குட்ரஸினால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதாரம்
  •  இந்தியாவின் வெளிக்கடன் (External debt) 2019-20 நிதியாண்டில்  முந்தைய நிதியாண்டை (2018-19) விட 2.8% அதிகரித்து 558.5 பில்லியன் டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவிலுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் ரூ.5,625 கோடி கடன் வழங்க உலக வங்கி முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை இந்தியாவுக்கு உலக வங்கி சாா்பில் ரூ.38,475 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும். கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்காக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவுக்கு ரூ.20,625 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விருதுகள்
  •  காமன்வெல்த் சிறுகதைப் போட்டி 2020 (Commonwealth Short Story Prize) ல் முதல் பரிசை இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பாண்டே (Kritika Pandey) வின் ’தி கிரேட் இந்தியன் ட்ரீ அண்ட் ஸ்னேக்ஸ்” (“The Great Indian Tee and Snakes) எனும் சிறுகதைப் பெற்றுள்ளது.
  • ‘பிரேரக் தவுர் சம்மான்’ என்ற புதிய விருது அறிமுகம் : வருடாந்திரத் தூய்மைப்பணிக் கணக்கெடுப்பு 2021-ஐ ஒட்டி,  மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறையின் மூலம் 'ஊக்கமளிக்கும் மரியாதை' என்ற பொருள்படும் ‘பிரேரக் தவுர் சம்மான்‘   (Prerak Dauur Samman)      எனப்படும் புதிய விருது ஒன்று அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி அறிவித்துள்ளார்.   பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றுவோர் என்ற 5 பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று  நகரங்கள் அங்கீகரிக்கப்படும்.
முக்கிய தினங்கள் 
  •  உலக ஒவ்வாமை வாரம் ( World Allergy Week )  - ஜீன் 28 - ஜீலை 4
அறிவியல் & தொழில்நுட்பம்
  •  ”சுக்ரயான் - 1 திட்டம் “ (Mission Shukrayaan-1)  வெள்ளி கிரகத்தின் (Venus )  தரைப் பகுதி மற்றும் அதன் உள்ளார்ந்த பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்கான  ”சுக்ரயான் - 1  “ எனும் திட்டத்த்தை  2023 - 2025ம் ஆண்டுவாக்கில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • ‘போபோஸ்’ ( Phobos ) என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மர்மமான நிலவை, செவ்வாய் கிரகத்தை சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மங்கள்யான் செயற்கைகோளின்  கேமரா (Mars Colour Camera (MCC))  7200 கி.மீ மற்றும்   4200 கி.மீ. தொலைவில் 1 ஜீலை 2020 அன்று  படம் பிடித்துள்ளது.
விளையாட்டுகள்
  •  சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் (International Cricket Council)  தற்காலிகத் தலைவராக இம்ரான் கவாஜா தேர்வாகியுள்ளார்.  இதற்கு முன்னர் இந்த பதவியை வகித்த   சஷாங்க் மனோகர் (பதவிக்காலம் முடிவடைந்ததால் ) விலகியுள்ளதையடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
  •  “Future of Higher Education – Nine Mega Trends”  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - CA V பட்டாபி ராம் (CA V Pattabhi Ram)

Share:

TNPSC Current Affairs Tamil 1-2 July 2020

TNPSC Current Affairs 1-2  July 2020

தமிழ்நாடு

  • உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு (world’s first online BSc Degree program in Programming and Data Science) ஐ.ஐ.டி. மெட்ராஸினால் (https://onlinedegree.iitm.ac.in/)  30 ஜீன் 2020 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் வீட்டு வசதியை வலுப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1514 கோடியையும், வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்துக்கு (Tamil Nadu Housing and Habitat Development Project) ரூ 378.6 கோடியையும் உலகவங்கி கடனாகக் கொடுக்கிறது. இந்த இரு ஒப்பந்தங்களும் தில்லியில் 29-6-2020 அன்று கையெழுத்தானது.குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவான விலையில் வீடுகளை வழங்குவதை அதிகரிக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரூ. 1,514.4 கோடி மதிப்புள்ள முதலாவது தமிழ்நாடு வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உதவி செய்வதாக அமையும்.
  • கொடுமணல் அகழ்வாய்வில் குஜராத் கல் பவளமணி கண்டெடுப்பு : ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிப் பணியில் குஜராத் கல் பவளமணி உள்பட ஏராளமான பொருள்கள் கிடைத்துள்ளன. சில நாள்களுக்கு முன் பச்சை கற்கள், பாசி மணிகள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
  • கொரோனோவைக் கட்டுப்படுத்தும் மூலிகை மருந்து “இம்ப்ரோ” : மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். இந்த சித்த மருந்து பொடியில் கிருமியை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியா

  • ”மத்ஸ்யா சம்பதா” (‘Matsya Sampada’) என்ற பெயரில் மீன்வளத்துறை மற்றும் மீன்வளர்ப்பு துறையினால் வெளியிடப்படும் பத்திரிக்கையின் முதல் பதிப்பு 30 ஜீன் 2020 அன்று வெளியிடப்பட்டது. இந்த பத்திரிக்கையானது காலாண்டிற்கு ஒருமுறை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நாகாலாந்து மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றப் பகுதியாகவும் ஆபத்து நிறைந்த பகுதியாகவும் (“disturbed area”) மத்திய அரசால் 30-6-2020 அன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் (Armed Forces (Special Powers) Act, 1958) டிசம்பர் 2020 வரையில் இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) திட்டத்தை ஜீலை 2020 லிருந்து நவம்பர் 2020 வரையில் நீட்டிப்பதாக பிரதமர் மோடி அவர்கள் ஜீன் 30, 2020 அன்று அறிவித்துள்ளார். ரூ.90,000 கோடி மதிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கூ.தக. : கொரோனா வைரசுக்கு எதிராக ஏழைகள் போராடுவதற்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் (பிரதமரின் ஏழைகள் நலத்திட்டம் ) (Pradhan Mantri Garib Kalyan Yojana) கீழ் ரூ 1.70 லட்சம் கோடி நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 26-3-2020 அன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு,
  • அடுத்த மூன்று மாதங்களுக்கு, எந்த ஒருவரும், குறிப்பாக எந்த ஏழை குடும்பமும், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் வாடுவதற்கு இந்திய அரசு அனுமதிக்காது.
  • 80 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்கு, இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள்.
  • தற்சமயம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை விட இரு மடங்கு பொருள்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இவர்களுக்கு அளிக்கப்படும்.
  • இந்தக் கூடுதல் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.

  • “பிளாட்டினா” திட்டம் ( Project Platina) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 45.8 மில்லியன் பெண்கள் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. மக்கள்தொகை நிதியம் (United Nations Population Fund (UNFPA)) வெளியிட்டுள்ள “State of World Population 2020: Against my will – Defying the practices that harm women and girls and undermine equality” எனும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • "உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும்" என்று ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே தெரிவித்துள்ளாா்.
    • கூ.தக. : 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே வறுமை ஒழிப்பு கூட்டமைப்பை அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா். அக்கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஏற்கெனவே இணைந்துள்ளது. இந்நிலையில், திஜ்ஜானி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
  • நாட்டிலேயே முதல் முறையாக, டெல்லியில் ஒரு பிளாஸ்மா வங்கியை அமைக்க உள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • ‘கோவேக்சின்’ (Covaxin) என்ற பெயரில் இந்தியாவில் கொரோனா நோய்க்கெதிரான தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு உறவுகள்

  • ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக (Ambassador and Permanent Representative of India to the United Nations at Geneva) இந்திரா மணி பாண்டே (Indra Mani Pandey) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : ஐ.நா. தலைமையகம் உள்ள நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.திருமூர்த்தி (T.S. Tirumurti) நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ’பாசெக்ஸ் கடற்படை ஒத்திகை’ (PASSEX (Passing Exercise) Naval Exercise) என்ற பெயரில் இந்தியா - ஜப்பான் நாட்டு கடற்படைகளிடையேயான 15வது கூட்டு இராணுவ ஒத்திகை 30 ஜீன் 2020 அன்று இந்திய பெருங்கடலிலுள்ள மலாக்கா ஜலசந்தி பகுதியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் இந்திய கடற்படையின் INS (Indian Naval Ship) Rana மற்றும் INS Kulish ஆகியவை கலந்துகொண்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • கார்னேஜ் ஒத்துழைப்பு அமைப்பின் (Carnegie Corporation) 2020 ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த புலம் பெயர்ந்தோர் விருது (‘2020 Great Immigrants’) இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட புலிட்சர் விருது வென்ற எழுத்தாளர் சித்தார்த்தா முகர்ஜி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ராஜ் செட்டி ஆகியோர் உட்பட 38 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ”NAFTA 2.0” (North America Free Trade Agreement (NAFTA)) என்ற பெயரில் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளுக்கிடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் 1 ஜீலை 2020 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
  • ஐ,நா, வறுமை ஒழிப்பிற்கான கூட்டமைபை (Alliance for Poverty eradication) ஐக்கிய நாடுகள் பொது சபையின் 74 வது அவையின் (74th United Nation’s General Assembly(UNGA)) தலைவர் டிஃபானி முகமது பாண்டே 23 ஜீன் 2020 அன்று தொடங்கி வைத்தார். இவ்வமைப்பில் இந்தியா நிறுவன உறுப்பினராக இணைந்துள்ளது.
    • கூ.தக. : 2006 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் 271 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development programme) அறிவித்துள்ளது.
  • சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ (G4 EA H1N1) என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வைரஸானது பன்றிகளில் கண்டறியப்பட்டுள்ளது, மனிதர்களிடமும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • ரஷ்ய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை பதவி வகிக்கும் அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளனர்.ரஷ்யாவில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி ஒருவரே தொடர்ந்து இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் இருந்த புதின், பின் 2008-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். பின்னர், கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து, விளாடிமிர் புதின் அந்நாட்டு அதிபர் பதவியை வகித்து வருகிறார்.வரும் 2024-ம் ஆண்டு வரை அவருக்கு பதவிக்காலம் உள்ளது. தற்போது, அவரது பதவிக்காலத்தை மேலும் இரு முறை, அதாவது 2036-ம் ஆண்டு வரை நீட்டிப்பது குறித்து, அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டதுடன் பொது வாக்கெடுப்பிலும் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.

பொருளாதாரம்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ( Micro, Small and Medium Enterprises (MSME) ) “உத்யம்” (Udyam) என பெயர்மாற்றத்திற்கான உத்தரவை மத்திய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தின் பின் , 1 ஜீலை 2020 முதல் MSME நிறுவனங்களுக்கு பதிவு செய்யும் முறைமை “உத்யம்” பதிவு ( Udyam Registration) என அழைக்கப்படும்.

விருதுகள்

  • முதலாவது தேசிய புள்ளியியல் தின பேராசிரியர் P. C. மகலனாபிஸ் விருது (Mahalanobis Award on National Statistics Day) முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்ரவர்த்தி ரங்கராஜன் (Chakravarthi Rangarajan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியமனங்கள்

  • இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General) தூஷர் மேத்தா (Tushar Mehta) மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக (Attorney General of India) KK வேணுகோபால் (KK Venugopal) மறுபடியும் ஒராண்டு காலத்திற்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய பட்டய கணக்காளர்கள் தினம் (National Chartered accountants day) - ஜீலை 1
    கூ.தக. : 1949 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( Institute of Chartered Accountants of India (ICAI) )தொடங்கப்பட்டது.
  • தேசிய மருத்துவர்கள் தினம் (national doctor’s day) - ஜீலை 1 (மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பிதன் சந்திர ராய் (Dr Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்த மற்றும் இறந்த தினம்)
  • உலக பாராளுமன்றவாத தினம் (International Day of Parliamentarism) - ஜீன் 30
  • சர்வதேச சிறுகோள் தினம் (International Asteroid Day) - ஜீன் 30
  • சமீபத்தில் 100 வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர் - நரசிம்மராவ் - 28 ஜீன் 2020 (பிறந்த தினம் - 28 ஜீன் 1921)
Share:

TNPSC Current Affairs Tamil 30 June 2020

TNPSC Current Affairs 30  June 2020

இந்தியா

  • இரண்டாவது தேசிய கங்கை ஆற்று வடிநில திட்டத்திற்கு (Second National Ganga River Basin Project (SNGRBP)) 400 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ”சங்கல்ப் பர்வா” ( Sankalp Parva) திட்டம் : நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி, தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை ‘சங்கல்ப பர்வா’ எனும் மரம் நடு பிரச்சாரம் நாடெங்கிலும் மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடுவதற்கு, பிரதமரால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வகையான மரங்கள் (i) “ஆலமரம்” (ii) “Awla” “நெல்லி (iii) “அரசமரம்” (iv) “அசோகா மரம்” (v) “வில்வமரம்” ஆகியவையாகும். இந்த வகை மரக்கன்றுகள் கிடைக்காவிட்டால் மக்கள் தங்கள் விருப்பப்படி வேறு எந்த மரக்கன்றுகளை வேண்டுமானாலும் நடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது. தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 29-6-2020 அன்று கையெழுத்திட்டன. இதன்படி பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் இந்த அரசு உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
  • தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உலக வா்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) தீா்வுக் குழு அமைக்க ஜப்பான், சீன அரசுகள் கோரியுள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஐசிடி சாதனங்கள் யாவும் உலக வா்த்தக அமைப்பின் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான ஒப்பந்தம்-2 ((Information Technology Agreement (ITA) -2))-இன் கீழ் வருவதாகவும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா அங்கம் வகிக்கும் ஒப்பந்தம் “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1)ஆனது இந்தச் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதை தடை செய்யவில்லை என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது.
  • கூ.தக. : “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1) 1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு , 1 ஜீலை 1997 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தமானது 2015 ல் மேலும் பல அம்சங்களுடன் மறுபடியும் நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • மாலாவி (Malawi) நாட்டின் புதிய அதிபராக லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : மாலாவி நாட்டின் தலைநகரம் ’லிலோங்க்வே’ (Lilongwe) | நாணயம் மாலாவியன் க்வாச்சா (Malawian Kwacha)
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) 36 வது கூடுகை, ‘ஒத்திசைவு மற்றூம் பொறுப்புணர்வு கொண்ட ஆசியான்’ (“Cohesive and Responsive ASEAN”) எனும் மையக்கருத்தில் காணொளி வழியாக 26 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இந்த கூடுகைக்கு 2020 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வியட்நாம் நாட்டின் பிரதமர் நூயன் ஜீவான் புக் (Nguyen Xuan Phuc) தலைமையேற்று நடத்தினார்.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ( National Aeronautics and Space Administration (NASA) ) வாசிங்க்டனில் அமைந்துள்ள தனது தலைமையக கட்டிடத்திற்கு நாஷா அமைப்பின் முதல் கறுப்பின பெண் பொறியாளரான மேரி வின்ஸ்டன் ஜாக்சன் (Mary Winston Jackson) என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு : கடந்த ஜனவரி 2020 ல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
  • ஐஸ்லாந்து (Iceland) அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் (Guðni Thorlacius Jóhannesson) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நியமனங்கள்

  • மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுனராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு (Anandiben Patel) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச வெப்பமண்டல தினம் (International Day of the Tropics) - ஜீன் 29
  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

Share:

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020

TNPSC Current Affairs 27-29 June 2020

தமிழ்நாடு

  • கொடுமணல் அகழாய்வில் 2,300 ஆண்டு பழமையான ஊது உலைகண்டுபிடிப்பு : திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது. இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.

இந்தியா

  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • "நாஷா முக்த் பாரத்” (Nasha Mukt Bharat) திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா 26-6-2020 (சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான தினத்தன்று-International Day Against Drug Abuse and Illicit Trafficking) வெளியிட்டுள்ளார். "நாஷா முக்த் பாரத்” திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறார் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் ஆயில் இந்தியா லிமிடெட் எண்ணைக் கிணறில் 27-5-2020 அன்று ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்தைக் குறித்து ஆராய முன்னாள் கவுகாத்தி உயர்நீத்மன்ற நீதிபதி BP கடாகே (BP Katakey) தலைமையில் உயர்மட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 25-6-2020 அன்று அமைத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையின் படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு (வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 / Banking Regulation (Amendment) Ordinance, 2020) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 27-06-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத் திருத்தத்தின் படி,  வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949 )ன்  பிரிவுகள் 45 மற்றும் 56 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • ”இ-பஞ்சாயத்து புரஸ்கார் 2020” ( e-Panchayat Puraskars 2020) பரிசுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது . இதன்படி, முதல் பரிசை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20
  • சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium Enterprises (MSME) Day) - ஜீன் 27
  • சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவிற்கான சர்வதேச தினம் (International Day in Support of Victims of Torture) - ஜீன் 26 | மையக்கருத்து - சித்திரவதை : மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Torture: a crime against humanity)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகின் நீளமான மற்றும் அதிக நேரம் மின்னிய மின்னல்கள் : பிரேஸிலில் 4-3-2019 அன்று ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீண்ட நேரம் மின்னிய மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16.73 விநாடிகளுக்கு மின்னிய மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

விளையாட்டுகள்

  • இந்தியாவின் பழுதூக்கும் வீராங்கனை K.சஞ்சிதா சானுவின் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு விலக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டின் காரணமாக, முன்னதாக அவருக்கு வழங்கப்படாதிருந்த அர்ஜீனா விருது 2018 (Arjuna award for 2018) மறுபடியும் வழங்கப்படவுள்ளது.
  • 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் நடத்தவுள்ளன.

Share:

TNPSC Current Affairs Tamil 25-26 June 2020


    இந்தியா

    • ”இந்திய காசநோய் அறிக்கை 2020” (“India TB (Tuberculosis) Report 2020”) ஐ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்களில் காசநோய் தொற்று அதிகமாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.
    • ஆன்லைன் வழியாக இரத்தங்களை ஆர்டர் செய்து பெறுவதற்கான ‘eBloodServices‘ என்ற பெயரிலான மொபைல் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பு (Indian Red Cross Society (IRCS)) இணைந்து தொடங்கியுள்ளன.
    • சுயசாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நலிவடைந்த நிலையில் காணப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ரூ. 20,000 கோடி கடனுதவி வழங்குவதற்காக, கடன் உறுதியளிப்புத் திட்டத்தை (Credit Guarantee Scheme for Sub-ordinate Debt) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி 24-6-2020 அன்று தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின்படி, நலிவடைந்த நிலையில் இருக்கும் மற்றும் வாராக் கடன் பட்டியலில் இருக்கும் சுமாா் 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். மேலும், இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
    • நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
    • ஐ.நா. சபையின் சார்பில் நியுயார்க் நகரில் உலக பொது சேவை தினத்தையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தலைமையில் நடந்த இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பாக கேரளாவில் சுகாதாரத்துறை பொறுப்பை கவனிக் கிற பெண் மந்திரி கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டு ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் கேரளா மாதிரி’ என்ற தலைப்பில் பேசினார்.
      • இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே வொர்க் ஜீவ்டே, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரங்கள் துணைச்செயலாளர் லியு ஜென்மின், தென்கொரிய உள்துறை மந்திரி சின் யெங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாட்டு உறவுகள்

    • இந்தியாவுக்கு வெளியே துவங்கப்பட்டுள்ள முதல் யோகா பல்கலைக்கழகம் எனும் பெருமையை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ள விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் (Vivekananda Yoga University) பெற்றுள்ளது.
    • ரஷியா - இந்தியா - சீனா (Russia-India-China (RIC)) வெளியுறவு அமைச்சர்கள் தரப்பு காணொளிக் கூடுகை 23 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இதனை ரஷியா நடத்தியது. இந்தியாவின் சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
    • ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் (‘Alliance for Poverty Eradication’) நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வறுமையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் இந்த கூட்டமைப்பை 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே(Tijjani Muhammad-Bande) 30 ஜீன் 2020-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா்.
    • ஐ.நா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)) வரும் இரண்டு ஆண்டுகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
    • 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் 24-06-2020 அன்று நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். 2-ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் கடந்த மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்து ஜூன் 24-ந் தேதி நடத்தியுள்ளது.

    பொருளாதாரம்

    • வாங்கும் சக்தியை ( purchasing power parity (PPP)) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தரவுகளை அடிப்படையிலான இந்த பட்டியலில் முதலிடத்தை சீனாவும் , இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.

    முக்கிய தினங்கள்

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse and Illicit Trafficking) - ஜீன் 26
    • சர்வதேச மாலுமிகள் தினம் (International Day of the Seafarer) - ஜீன் 25

    அறிவியல் & தொழில்நுட்பம்

    • சென்னை ஐஐடியானது ‘ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) திட்டம் மூலம் பசுமை எரிசக்தியான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஜொ்மனி ஆராய்ச்சியாளா்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
      • கூ.தக . : சா்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக’ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகின் சிறந்த நிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார். வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
      • விண்வெளி துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) , தனியார் துறைகளின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிப்பது, முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கொண்டு சுயமாக முடிவு எடுக்கும். தனியார் நிறுவனங்கள் இன்ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பு மூலம் நேரடியாக விண்வெளி துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும். அந்த அமைப்பு அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். அந்த அமைப்பு முடிவு எடுத்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதாவது இஸ்ரோ அல்லது தனியார் அமைப்புகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் ( NewSpace India Limited (NSIL)), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.

    விளையாட்டுகள்

    • ”இந்திய கராத்தே சங்கத்திற்கு” (Karate Association of India) உலக கராத்தே கூட்டமைப்பு (World Karate Federation) வழங்கியிருந்த அங்கீகாரத்தை 21-6-2020 அன்று இரத்து செய்துள்ளது.

    இதர தகவல்கள்

    • திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், 25-6-2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். 
      • கூ.தக. : திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இதனை, 1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தொடங்கினார். வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.
Share:

TNPSC Current Affairs Tamil 23-24 June 2020


தமிழ்நாடு

  • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23-06-2020 அன்று தொடங்கி வைத்தார்.
    • கூ.தக. : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐ.ஓ.டி. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கியாசில் இருந்து சி.பி.ஜி. என்ற ‘கம்பிரஸ்ட் பயோ கியாசை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் சி.பி.ஜி. மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும். 

இந்தியா

  • இந்திரா ராசோய் யோஜனா (‘Indira Rasoi Yojna / Indira Kitchen Scheme’) என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை இராஜஸ்தான் அரசு 22-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • ”கரோனில்” (Coronil) மற்றும் ”சுவாசரி” (Swasari) எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகள் 3 முதல் 7 நாள்களில் கரோனா நோயை 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியில் இருந்து (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) ) ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க இந்த ரூ.2,000 கோடி உதவும்.
  • பொது விநியோக முறைமையின் (Public Distribution System (TPDS) ) கீழ் மாநில அளவில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான செலவு குறைந்த விநியோக சங்கிலி நெட்வொர்க்குகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவிற்கான ஐ.நா. உலக உணவு திட்டம் (United Nations World Food Programme (WFP) India) மற்றும் ஐ.ஐ.டி,தில்லி (Indian Institute of Technology (IIT) Delhi ) ஆகியவை இணைந்து ஈடுபடுகின்றன.
  • “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“ (Decarbonising Transport in India) என்ற பெயரில், இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஆய்வை, நிதிஆயோக் (NITI Aayog) அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் (International Transport Forum (ITF) ) இணைந்து, 24 ஜுன், 2020 அன்று தொடங்க உள்ளது.
    • கூ.தக. : 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதும், OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பின் கீழ் இயங்குவதுமான சர்வதேச போக்குவரத்து மன்றத்தின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான இவ்வமைப்பில், 2008-ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.

விருதுகள்

  • ’ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின்’ (German Book Trade) அமைதி பரிசு 2020 (Peace Prize 2020), நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் (Amartya Kumar Sen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் (RBI Central board) பகுதி நேர அலுவல் ரீதியில் அல்லாத இயக்குநராக (Part-Time Non-Official Director) 3-3-2020 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவுள்ள நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் 2016-2020 வரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • ஐ.நா. பொது சேவைகள் தினம் (UNITED NATIONS PUBLIC SERVICE DAY - ஜீன் 23 | மையக்கருத்து - கோவிட் -19 பெருந்தொற்றுப் பணியிலுள்ள பொது சேவகர்களை மரியாதை செய்வோம் (ON THE FRONTLINES: HONOURING PUBLIC SERVANTS IN THE COVID-19 PANDEMIC RESPONSE)
  • சர்வதேச ஒலிம்பிக் தினம் (International Olympic Day) - ஜீன் 23
  • சர்வதேச விதவைப் பெண்கள் தினம் (International Widows’ Day) - ஜீன் 23 | மையக்கருத்து - கட்புலனாகா பெண்கள் , கட்புலனாகாத பிரச்சனைகள் (Invisible Women, Invisible Problems)
  • உலக இசை தினம் (World Music Day) - ஜீன் 21

அறிவியல் & தொழில்நுட்பம்

  • YUKTI 2.0 ( Young India combating COVID with Knowledge, Technology, and Innovation) என்ற பெயரில் கோவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டு படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான இணையதளத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 23-6-2020 அன்று தொடங்கி வைத்தார். YUKTI 1.0 திட்டம் 11 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ”துருவா” (‘Dhruva’) என்ற பெயரில் இடம் பெயர் தொழில்நுட்ப வழிகாட்டி சிப்பை (Chip) மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘நேவிக்’ (NAVIC (NAVigation with Indian Constellation)) இடம்பெயர் வழிகாட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த சிப்பை, ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இதர ஸ்மார்ட் கருவிகளில் இணைத்து பயன்படுத்தலாம்.
  • சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் (BeiDou Navigation Satellite System (BDS)) 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி (55ஆவது) செயற்கைக்கோள் பெய்தொவ் -3 (Beidou-3 navigation satellite) லாங்மார்ச் 3-பி (Long March 3B) ஏவூர்தியின் மூலம் 23-6-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.
  • ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது மொபைல் ஃபோன்களுக்கு ஐஒஎஸ் 14 (iOS 14) எனப்படும் புதிய இயங்குதள (Operating System) பதிப்பை 23-6-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்த, விண்வெளி வீரர்களுக்கான, ”நீர்ம குளிர் மற்றும் வெப்ப ஆடை” ( Liquid Cooling and Heating Garment (LCHG)) க்கு பேட்டண்ட் (patent ) உரிமை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

  • புகழ்பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் தி அண்டர்டேக்கர் (The Undertaker) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி அண்டர்டேக்கரின் இயற்பெயர், மார்க் காலவே.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ”Legend of Suheldev: The King Who Saved India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமிஷ் திரிபாதி (Amish Tripathi) 

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language