Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs in Tamil for 2-3 June 2020

தமிழ்நாடு
  • இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன.
  • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (47) நியமிக்கப்பட்டுள்ளார்
  • திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில்துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு 1-6-2020 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்தியா

  • ’கிஷான் கடனட்டை திட்டத்தின்’ (Kisan Credit Cards(KCC)) கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (ஜூன் - ஜூலை 2020) நாடெங்கிலுமுள்ள பால் தயாரிப்பு தொழிலாளர் ஒன்றியங்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைச் சேர்ந்த 1.5 கோடி பால் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டம் மத்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் (Atma Nirbhar Bharat) ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுகிறது.
  • கொரோனாவுக்கு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் ( Remdesivir) மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
  • ”ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” (One Nation One Card Scheme) திட்டத்தில் சிக்கிம் , ஒடிஷா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் 1 ஜீன் 2020 ல் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். இதன் மூலம் இத்திட்டத்தில், 1-6-2020 வரையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்” (Pradhan Mantri SVANidhi - PM Street Vendors Atmanirbhar Nidhi) என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி நகர்புற மற்றும் ஊர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
  • "நிஷார்கா புயல்” (NISARGA Cyclonic Storm) அரபிக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி 3-6-2020 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் வட பகுதி மற்றும் குஜராத் மாநிலத்தின் தென் பகுதிகளைக் கடக்கவுள்ளது.
    • கூ.தக. : நிஷார்கா புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - வங்காளதேசம்
  • பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளா் வாஜித் கான் 1-6-2020 அன்று கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
வெளிநாட்டு உறவுகள் 
  • ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.ஜி-7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அடுத்தடுத்து நடத்தும்.அதன்படி இந்த ஆண்டுக்கான (2020) மாநாடு செப்டம்பர் மாதத்தில் (ஜீன் மாதத்தில் நடைபெறவிருந்தது) நடத்த முடிவு செய்வதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
  • தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. StartupBlink நிறுவனம் வெளியிட்டுள்ள Ecosystem Rankings 2020 எனும் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
நியமனங்கள்
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small & Medium Enterprises(MSME)) அறிவிக்கப்பட்டிருந்த ரூ.3 இலட்சம் கோடி கடனுதவி திட்டத்தை அமல்படுத்துவதற்கான சிறப்பு குழுவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பிரதமர் மோடி 31-5-2020 அன்று அமைத்துள்ளார்.

புத்தகங்கள்
  • ‘One Year of Modi 2.0 – Towards A Self-Reliant India’ என்ற பெயரிலான பிரதமர் மோடி அவர்களின் இரண்டாம் ஆட்சி காலத்தின் முதலாண்டு சாதனைகளை உள்ளடக்கிய மின் - புத்தகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு 

  • ”கேலோ இந்தியா இ-பாத்ஷாலா” ( ‘Khelo India e-Pathshala‘) என்ற பெயரில் இந்தியாவில் முதல் தேசிய அளவிலான ஆன்லைன் விளையாட்டுக் கல்வி பயிற்சி திட்டத்தை இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India (SAI)) மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ( National Sports Federations (NSF)) ஆகியவை இணைந்து 1 ஜீன் 2020 அன்று தொடங்கியுள்ளன.
Share:

Current Affairs in Tamil for TNPSC Exams - 01 June 2020

தமிழ்நாடு
  • பிரதமரின் பாராட்டைப் பெற்ற தமிழக சலூன் கடைக்காரர் சி.மோகன்  : தனது மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை   கொரோனா காலத்தில் பாதிப்படைந்த ஏழைகளுக்கு வழங்கிய மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் சி.மோகன் என்பவரின் சேவையை   பிரதமர் மோடி அவர்கள்   31-5-2020 அன்றைய தனது மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டியுள்ளார். 
  • தமிழக அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
  •  ”எனது வாழ்க்கை எனது யோகா” (“My Life My Yoga”) என்ற பெயரில்  வீடியோ போட்டியை   பிரதமர் மோடி அவர்கள் 31-5-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்.  இந்த போட்டியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுண்சில் (ICMR (Indian Council of Cultural Research) ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 

உலகம்
  • ஜூன் மாதம்  10 ஆம் தேதி  நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் 2020 மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
    • கூ.தக. : அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • ஜியார்ஜ் பிளையாட் (George Floyd) எனும் ஆப்பிரிக்க அமெரிக்க மனிதர்  அமெரிக்காவின் மின்னசோடா மகாணத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரால் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. 

நியமனங்கள்
  • இந்தியா உட்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் (India Infrastructure Finance Company Limited (IIFCL))  மேலாண் இயக்குநராக PR ஜெய்சங்கரை மத்திய நிதி அமைச்சகம் நியமித்துள்ளது. 
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) முதன்மை செயல் அதிகாரியாக அருண் சிங்கால் (Arun Singhal) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்பின் தலைவராக ரீட்டா டியோடியா(Rita teotia ) உள்ளார். 

புத்தகங்கள்
  • ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ ("Narendra Modi – Harbinger of Prosperity & Apostle of World Peace") என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

விளையாட்டு 
  • இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை  கிரண்ஜீத் கவுர் (Kiranjeet Kaur)  ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக  நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். 

Share:

TNPSC Current Affairs 11-20 May 2020

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 11-20 மே 2020 

தமிழ்நாடு

  • மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
  • திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு வட்டத்தில்  உள்ள நல்லூர் கிராமப்பகுதியில்   ரூ.337 கோடியில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19-5-2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, பெரம்பலூர் மாவட்ட அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இத்துடன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சோகாரி கோவார் வண்ணங்கள் (Sohrai Khovar painting ) மற்றும் தெலுங்கானாவின்  தெலியா ரூமால் ஆடைகள் (Telia Rumal cloth )  ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம்  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • மன்னாா் வளைகுடாவில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை (60 எம்எல்டி) செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.இந்தத் திட்டமானது, ராமநாதபுரம் கடலாடி தாலுகாவில் உள்ள குதிரைமொழி கிராமத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.
  • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான க.மீனாட்சிசுந்தரம்14-5-2020 அன்று காலமானார்.  இவர், வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்னார்.
  • ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில் அர்ச்சர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த 8.39 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ.1,000 வழங்க தமிழக அரசு 13-5-2020 அன்று நிதி ஒதுக்கியுள்ளது.தமிழகத்தில் மீனவா் நல வாரியம், பட்டாசு தொழிலாளா், சிறு வணிகா்கள் நல வாரியம், பழங்குடியினா் நலவாரியம், பூஜாரிகள் நல வாரியம், திரைப்படத் தொழிலாளா் நல வாரியம் உள்ளிட்ட 14 வகையான நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது போன்றே, இந்தத் தொழிலாளா் நல வாரியங்களைச் சோ்ந்தோருக்கும் நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

  • ”சரண் படுகா” (Charan Paduka) என்ற பெயரில் தனது மாநிலத்தினூடாக நடந்து செல்லும்  புலம் பெயர் தொழிலாலர்களுக்கு  இலவசமாக  காலணி வழங்கும் திட்டத்தை மத்திய பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
  • விசாகப்பட்டிணம் எல்.ஜி.பாலிமர்  நிறுவனத்தின் , ஸ்டைரின் (styrene)  விஷவாயு  கசிவு தொடர்பாக விசாரிக்க ‘நீரப் குமார் பிரசாத்’ (Neerabh Kumar Prasad ) தலைமையில் 5 நபர் குழுவை ஆந்திரப்பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.
  • இந்தியாவின் குழந்தைகள் இறப்பு வீதம் (infant mortality rate (IMR) )  2018 ஆம் ஆண்டில் 32 ஆக உள்ளது.  இதற்கு முந்தைய ஆண்டில் (2017) இந்த வீதம் 33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் , 2009 ஆம் ஆண்டில்  50 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு வீதம் 2018 ல் 32 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது.
  • இந்தியாவில் முதல் மாநிலமாக, முதல் தகவல் அறிக்கையை (First Information Report(FIR)) பொது மக்கள் இல்லங்களிலிருந்தே 100 என்ற எண்ணை அழைப்பதன்  மூலம் விண்ணப்பிப்பதற்கான ’ஆப்கே திவார் யோஜனா’  (Aapke Dwar Yojana‘(FIR at your doorstep) )  திட்டத்தை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • பிரதமர் வய வந்தனா திட்டத்தை (‘Pradhan MantriVayaVandanaYojana’ ) 2020 மார்ச் 31-க்கு பின்னரும் மேலும் மூன்றாண்டு காலத்துக்கு 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பிரதம மந்திரியின் மத்ஸய சம்ப்பட திட்டத்தை (Pradhan Mantri Matsya Sampada Yojana) – நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை  20-5-2020 அன்று  அனுமதி அளித்துள்ளது.
    • இந்தியாவில் மீன்வளத் தொழிலில் நீடித்த மற்றும் பொறுப்புடைமையான வளர்ச்சி மூலம் நீலப்புரட்சியை ஏற்படுத்துவதற்கான இந்தத் திட்டத்தில் இரண்டு முக்கியமான கூறுகள் உள்ளன: அவை மத்திய பிரிவுத் திட்டம் (Central Sector Scheme) மற்றும் மத்திய நிதி உதவித் திட்டம் (Centrally Sponsored Scheme) ஆகும்.  இந்தத் திட்டத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.20,050 கோடி ஆகும்.  இதில்
      • மத்திய அரசின் பங்கு ரூ. 9,407 கோடி
      • மாநில அரசின் பங்கு ரூ.4,880 கோடி மற்றும்
      • பயனாளிகளின் பங்கு ரூ.5,763 கோடி ஆகும்.
    • இந்தத் திட்டத்தின் செயலாக்க காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதாவது இந்தத் திட்டமானது 2020-2021 நிதியாண்டில் இருந்து 2024-2025 நிதியாண்டு வரை நடைமுறைப்படுத்தப்படும்.
பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டத்துக்கு கீழ்வரும் முறையில் நிதி அளிப்பு இருக்கும்:
  • மத்திய பிரிவுத் திட்டம்
    • அ. செயல்திட்டம் / அலகு முழுமைக்குமான செலவை மத்திய அரசு ஏற்கும் (அதாவது 100% மத்திய அரசு நிதியுதவி)
    • ஆ. திட்டமானது பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருந்தால் அதாவது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (National Fisheries Development Board - NFDB) போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தனிநபர் / குழு சார்ந்த நடவடிக்கைகளுக்கு பொதுப்பிரிவில் அலகு / செயல்திட்ட செலவில் 40 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும். எஸ்சி / எஸ்டி / மகளிர் பிரிவுக்கு 60 சதவீதம் வரை மத்திய அரசு நிதியுதவி கிடைக்கும்.
  • மத்திய நிதி உதவித் திட்டம்
    • சிஎஸ்எஸ் பிரிவின் கீழ் பயனாளியை நேரடியாகச் சார்ந்து இருக்காத துணைக்கூறுகள் / நடவடிக்கைகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நடைமுறைப்படுத்தும். செயல்திட்டம் / அலகின் மொத்த செலவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையில் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம்.
  • பயனாளியைத் சார்ந்த திட்டங்களுக்கு அதாவது சிஎஸ்எஸ் கூறின் கீழ் தனிநபர் / குழு நடவடிக்கைகள் தொடர்பான துணைக்கூறுகள் / செயல்பாடுகள் மாநில / யூனியன் பிரதேசங்களால் நடைமுறைப்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவி மொத்தமாகச் சேர்ந்து பொதுப்பிரிவில் செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 40 சதவீதம் என்ற அளவுடன் இருக்கும்.  எஸ்சி / எஸ்டி / பெண்கள் ஆகிய பிரிவுக்கு செயல்திட்டம் / அலகின் செலவுத் தொகையில் 60 சதவீதம் என்று இருக்கும்.  அரசு நிதி உதவி என்பது மத்திய அரசு மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு இடையில் கீழ்வரும் விகிதங்களில் பகிரப்படும்:
    • அ. வடகிழக்கு, இமாலயப்பகுதி மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 90 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 10 சதவீதம்.
    • ஆ. ஏனைய மாநிலங்கள்: மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம்.
    • இ. யூனியன் பிரதேசங்கள் (சட்டமன்றம் உள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை): மத்திய அரசின் பங்கு 100 சதவீதம் (யூனியன் பிரதேசத்தின் பங்கு ஏதும் இல்லை.
(ஆதாரம் : https://pib.nic.in/PressReleasePage.aspx?PRID=1625314)
  • ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special Trains) மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  • எல்லைப்புறக் கட்டமைப்பு தொடர்பாக லெப். ஜெனரல் டி.பி. ஷேக்கட்கர் (ஓய்வு) தலைமையிலான நிபுணர்கள் கமிட்டி (Shekatkar Committee) அளித்த மூன்று முக்கியப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு அமல் படுத்தியுள்ளது. எல்லைப்புறப் பகுதிகளில் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துதல், தொடர்பான பரிந்துரைகளாக இவை உள்ளன.
    • எல்லைப்புறக் கட்டமைப்பு உருவாக்குதல் தொடர்பான விஷயத்தில், எல்லைப்புற சாலைகள் அமைப்பின் (Border Roads Organisation – BRO) அதிகபட்சத் திறனுக்கும் அதிகமான சாலை அமைக்கும் பணிகளை வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் செயல்படுத்தலாம் என்று, கமிட்டி அளித்த பரிந்துரையை அரசு அமல் செய்துள்ளது. ரூ.100 கோடிக்கும் மேலான மதிப்புள்ள அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துவதற்கு பொறியியல் கொள்முதல் ஒப்பந்த (ஈ.பி.சி.) நடைமுறையைk கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
    • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்முதல்கள் மூலம், பி.ஆர்.ஓ.வுக்கு ரூ.7.5 கோடி முதல் ரூ.100 கோடி வரையில் கொள்முதல் செய்ய அதிகாரத்தை உயர்த்தி, நவீன கட்டுமானத் தளங்கள், சாதனம் மற்றும் இயந்திரங்கள் அறிமுகம் தொடர்பான பரிந்துரை அமல் செய்யப் பட்டுள்ளது.  சாலைகள் அமைத்தலை விரைவுபடுத்த Hot-Mix Plant 20/30 TPH வசதியை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு பெற்றுள்ளது. கடினமான பாறைகளை அறுப்பதற்கு தொலைவில் இருந்து ரிமோட் மூலம் இயக்கக் கூடிய hydraulic Rock Drills DC-400 R  இயந்திரத்தையும், பனிக் கட்டிகளை வேகமாக அகற்றுவதற்கு, தானே முன்னேறிச் சென்று பனிக்கட்டியை அறுத்தல் மற்றும் தள்ளுதலுக்கான எப்-90 வகை இயந்திரங்களும் வாங்கப் பட்டுள்ளன.
    • சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த, துல்லியமாக வெடி வைப்பதற்கு புதிய வெடி வைப்புத் தொழில்நுட்பம், மண்ணை உறுதிப்படுத்த ஜியோ-டெக்ஸ்டைல்ஸ், நடைபாதைகளுக்கு சிமெண்ட் பிடிமானப் பலகைகள், மேற்பரப்புக்கு பிளாஸ்டிக் பூச்சு கொண்ட கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. கள அதிகாரிகளுக்கு நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை அதிகரித்துக் கொடுத்திருப்பதன் மூலம், பணிகளுக்கான நிதி வழங்கும் பணிகள் வேகமாக மேம்பட்டுள்ளன.
  • ”பிரதமர் மின்-கல்வி” (”PM e-VIDYA”) என்ற பெயரில் டிஜிட்டல்/இணையம்/காற்றில் வரும் கல்வி உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஒன்று சேர்க்கும் ஒருங்கிணைந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மிஷன் சாகர்” (Mission Sagar)  எனும் திட்டத்தின் கீழ்,  கோவிட் 19 பெருந்தொற்று  பாதிப்பான  , இந்தியாவிடம் நட்புறவு கொண்ட  5 தீவு நாடுகளுக்கு (மாலத்தீவு, மொரிசியஸ், செஷல்ஸ்,  மடகாஸ்கர் மற்றும் காமரோஸ்)   இந்திய அரசு  உதவியளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்  ஐ என் எஸ் கேசரி, 580 டன் உணவுப் பொருட்களுடன், மாலத்தீவின் மாலே துறைமுகத்துக்கு  மே  12 ம் தேதி அன்று சென்று சேர்ந்தது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனடைந்த ஒரு கோடியாவது நபர் -  பூஜா தாபா (Pooja Thapa) , மேகாலயா
    • கூ.தக. : 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி ஆயுஷ் மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அரசு சுகாதார காப்பீடு திட்டமாக கருதப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சையை ஏழைகள் இலவசமாக பெற முடியும். 
  • இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19-5-2020 அன்று ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.
  • 'அம்பான்' ('Amphan')  புயல் :  வங்கக் கடலில் உருவாகியுள்ள, 'அம்பான்'  ('Amphan') புயல் ஒடிசா   மற்றும் மேற்கு வங்கம் இடையில் 20ம் தேதி கரையை கடந்தது.
    • கூ.தக. : ஆம்பன் புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - தாய்லாந்து .  (2004 ஆம் ஆண்டில் 8 நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட 64  பெயர்களின் பட்டியலில் , இதுவே கடைசி பெயராகும்.
புயல்களுக்கு பெயரிடும் முறை பற்றி...
  • வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம் 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது. வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன. இதில் இந்தியா கொடுத்த பெயர்கள் அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல் (நான்கு பூதங்கள் லெஹர் (அலை),மேக், சாஹர், வாயு ஆகியவையாகும்.
  • 2000 ல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய சபை பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் படி மாநாட்டில் 8 நாட்டினர் 64 பெயர்களைக் கொண்ட புயல் பட்டியலை தயாரித்தன. 8 நாடுகளின் புயல் பட்டியல் சுழற்சி முறையில் பெயர் வைக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. 5 முறை புயல் ஏற்பட்டது.
  • ’ஸ்நேகர் போரோஷ்’ (‘Sneher Porosh’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையால் புலம் பெயர் தொழிலாளருக்கு ஏற்படுட்டுள்ள  துயர் நீக்க திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’ப்ரோசெஸ்டா” ( ‘Prochesta’ ) என்ற பெயரில் கோவிட்-19 சூழ்நிலையில் அமைப்புசாரா தொழிலாளருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டத்தை மேற்கு வங்காள மாநில அரசு அறிவித்துள்ளது.
  • ’மதிர் சம்ரிஷ்டி’ (‘Matir Smristi’) என்ற பெயரில் 50,000 ஏக்கர் தரிசு நிலங்களை  அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்புடன்   தோட்டக்கலை மற்றும்  மீன்வளர்ப்பு ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான திட்டத்தை மேற்கு வங்க அரசு 14-5-2020 அன்று அறிவித்துள்ளது.
  • ’உலக ஆற்றல் மாறுநிலை பட்டியல் 2020’ (global Energy Transition index(ETI) 2020) ல் இந்தியா 74 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum(WEF)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • GOAL’ (Going Online As Leaders Programme) என்ற பெயரில்  மலைவாழின இளைஞர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு திட்டத்தை மத்திய  பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும்  ஃபேஷ்புக் (Facebook)  நிறுவனம் இணைந்து  15-5-2020 அன்று தொடங்கியுள்ளன.
  • ”சமர்த்” (SAMARTH) என்று பெயரிடப்பட்டுள்ளநிறுவனங்கள் வள திட்டமிடல் என்ற இணைய தள செயல்பாட்டை ,  மனிதவளத் துறை அமைச்சகம்,  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் தேசிய கல்வித் திட்டத்தின் (NMEICT - National Mission of Education in Information and Communication Technology Scheme ) கீழ் உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரமான திறந்த ஆதாரக் கட்டமைப்பாகும்.இது பல்கலைக்கழகம் / உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரிய, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த திட்டமானது, குருக்ஷேத்ராவிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின்(NIT Kurukshetra)  மூலம்  செயல்படுத்தப்படுகிறது.
  • கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” (Indian Coast Guard Ship ‘Sachet’ -  ICGS)  மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் ( interceptor boats (IBs))  சி -450 (C-450) மற்றும் சி -451(C-451)  ஆகியவற்றை கோவாவில் இருந்து 15-5-2020 அன்று  காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும்.  முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் தரம் வாய்ந்த திசைகாட்டும் மற்றும் தொடர்பியல் உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • 105 மீட்டர் நீளமுள்ள ”சாஷே” கப்பல் தோராயமாக 2350 டன் பாய்பொருளை இடம்பெயர்க்கிறது மற்றும் 26 நாட் என்ற அதிகபட்ச வேகத்தை அடைவதற்காக இரண்டு 9,100 கிலோ டீசல் எஞ்சின்கள் மூலம் உந்து சக்தி தரப்படும். இதன் தாங்கும் ஆற்றல் 6,000 நாட்டிகல் மைல் ஆகும்.
  • நாட்டிலேயே முதல் மாநிலமாக அரியானா மாநிலம் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை அரியானா மாநிலம் 15-5-2020 அன்று  தொடங்கியுள்ளது.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் சாம்பியன்ஸ் (www.Champions.gov.in) இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும்.சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிக்கிறது. சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்

வெளிநாட்டு உறவுகள்

  • கரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்வதற்காக இந்தியாவுக்கு 200 செயற்கை சுவாசக் கருவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
  • 73வது உலக சுகாதாரக் கூட்டத்தில் (73rd World Health Assembly) 18-5-2020 அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
  • உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், காலாபாணி உள்ளிட்ட பகுதிகள் தொடா்பாக இந்தியா-நேபாளம் இடையே பிரச்னை காணப்படும் சூழலில், அப்பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் நேபாளம் இணைத்துள்ளது.
    • இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அப்பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்திய அரசு தெரிவித்து வருகிறது. அதேபோல், அப்பகுதிகள் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தைச் சோ்ந்தவை என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது.
    • இந்தச் சூழலில், திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்வதற்கான நேரத்தைக் குறைக்கும் வகையில் லிபுலேக் கணவாய் வழியாக இந்திய அரசு சாா்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு நேபாள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தது.
    • இந்நிலையில், காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகளைத் தங்கள் நாட்டின் அதிகாரபூா்வ வரைபடத்தில் இணைக்க நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவை 20-5-2020 அன்று ஒப்புதல் வழங்கியது.
  • உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் 22-05-2020 அன்று பதவியேற்றார். தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்தயொட்டி, இவ்வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 
  • பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் பணியில் உள்ள ஈடுபட்டுள்ள ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்புக்கு இந்தியா 2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.15.13 கோடி) நிதியுதவி அளித்துள்ளது. ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் குழுவுக்கு இந்தியா அளித்து வரும் நிதி ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு 1.25 மில்லியன் டாலா் அளிக்கப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு இதுவே 5 மில்லியன் டாலா் நிதியுதவியாக அதிகரிக்கப்பட்டது. இப்போது 2 மில்லியன் டாலா் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 மில்லியன் டாலா் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருந்துகளையும் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க இருக்கிறது.
  • இரவீந்திர நாத் தாகூரின் 159 வது பிறந்ததினத்தையொட்டி(7 May 1861) , அவரின் பெயரை இஸ்ரேல் நாட்டின், டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு தெருவிற்கு அந்நாட்டு அரசு சூட்டியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘iFeel-You’ என்ற பெயரில் சமூக இடைவெளியை பேணுவதற்கான கையில் அணியும் கருவியை  இத்தாலி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Italian Institute of Technology (IIT)  ) தயாரித்துள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் 11 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புகூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, புகையிலை புரதத்தில் இருந்து கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் 2-வது இடத்திற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருந்தனர்.
  • இஸ்ரேலுக்கான சீனத் தூதா் டூ வெய் (58), டெல் அவிவ் நகரிலுள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு 17-5-2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டது. ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ அண்ட் ஒயிட் கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் துணைப் பிரதமா் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆட்சி அதிகாரத்தைப் பகிா்ந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, 18 மாதங்களுக்குப் பிறகு பென்னி கான்ட்ஸ் பிரதமராகப் பொறுப்பேற்பாா்.
  • உலக சுகாதார சபையில் தைவான் இடம் பெறுவதற்கு நியூஸிலாந்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும், அந்த நாட்டை தங்களது அங்கமாக சீனா கருதி வருகிறது. இதன் காரணமாக, உலக சுகாதார அமைப்பின் ஒரு பிரிவான உலக சுகாதார சபையில் தைவானுக்கு இடமளிக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தி வருகிறது. எனினும், அந்த சபையில் இடம் பெற்றால்தான் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முடியும் என்று தைவான் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு, நியூஸிலாந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார சபைக் கூட்டத்துக்கு தைவானை அழைக்க வலியுறுத்தி 205 அமெரிக்க எம்.பி.க்கள் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனா்.
  • ஜொ்மனியில் பயன்பாடு நிறுத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் இரு குளிரூட்டு கோபுரங்கள் அழிக்கப்பட்டன.மின்சாரத்துக்காக அணு மின் நிலையங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த ஜொ்மனி முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நாட்டு அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் அனைத்தையும் மூட ஜொ்மனி அரசு திட்டமிட்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் மாநாடு 13-5-2020 அன்று காணொலி முறையில் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாட்டை மாஸ்கோவில் ஜூன் 9, 10 தேதிகளில்தான் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், இப்போதைய சூழ்நிலை கருதி, முன்னதாகவே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. 26 ஏப்ரல் 1996 ல்  நிறுவப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 2017-ஆம் ஆண்டில்தான் இந்த அமைப்பில் இணைந்தன.
  • பல்வேறு அகராதிகளின் 2019 இன் சிறந்த ஆங்கிலச் சொற்கள் :
    • கிளைமேட் எமர்ஜென்சி (Climate emergency) - ஆக்ஸ்போர்டு
    • அப்சைக்கிளிங் (upcycling) - கேம்பிரிட்ஜ்
    • தே (they) - மெரியம் வெப்ஸ்டர்
    • கிளைமேட் ஸ்ட்ரைக் (Climate strike) - காலின்ஸ்
    • எக்சிஸ்டென்சியல் (existential) - டிக் ஷனரி இணையதளம்
    • ’சம்விதான்’ (Samvidhan) - ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்திச் சொல்

விருதுகள்

  • இங்கிலாந்து அரசின் ‘அலெக்சாண்டர் தால்ரிம்பிள் விருது 2019’ (Alexander Dalrymple Award 2019)  இந்திய அரசின் தேசிய ஹைட்ரோகிராபர்   (National Hydrographer to the Government of India)  வைஸ் வினய் பாட்வர் (Vice Admiral Vinay Badhwar) க்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (International Hockey Federation(FIH) ) தலைவராக இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் துருவ் பத்ரா (Narinder Dhruv Batra)  மே 2021 வரையில் தொடர்வதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக எயிட்ஸ் தடுப்பூசி தினம் (World AIDS Vaccine Day) - மே 18
  • சர்வதேச அருங்காட்சியக தினம் (International Museum Day) - மே 18
  • உலக உயர் இரத்த அழுத்த தினம் (World Hypertension Day) - மே 17
  • உலக தொலைதொடர்பு மற்றும் தகவல் சமுதாய தினம் (World Telecommunication and Information Society Day) - மே 17
  • சர்வதேச அமைதியாக இணைந்து வாழும் தினம் (International Day of Living Together in Peace)  - மே 16
  • சர்வதேச ஒளி தினம் (International Day of Light) - மே 16
  • தேசிய டெங்கு தினம் (National dengue day) - மே 16
  • தேசிய அருகிவரும் விலங்கின தினம் (National Endangered Species Day) - மே 15
  • சர்வதேச குடும்ப தினம் (International Day of Families) - மே 15
  • சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day) - மே 12  | மையக்கருத்து 2020 - செவிலியர் :  தலைமைக்கான ஒரு குரல் -  உலகின் ஆரோக்கியத்திற்கான சேவை (Nurses: A voice to lead - Nursing the World to Health)
  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day) - மே 11
    • கூ.தக. : 11-5-1998 அன்று பொக்ரான் அணு குண்டு சோதனை நடைபெற்ற தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

 அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ரெயில் பாட்” (“RAIL-BOT” (R-BOT)) என்ற பெயரில் இரயில்வே மருத்துவமனை மருத்துவர்களுக்கு உதவிடும் ரோபோவை தென் மத்திய இரயில்வே மண்டலம் (South Central Railway) உருவாக்கியுள்ளது.
  • ”ட்ரோக்லோமைசிஸ் டிவிட்டரி” ( ‘Troglomyces Twitteri’ ) என்ற பெயரில் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையை (parasitic fungus) டென்மார்க்கைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் அனா சோஃபியா ரெபோலேய்ரா (Ana Sofia Reboleira) கண்டுபிடித்துள்ளார்.
  • ”ஸ்வஸ்த் வாயு” (‘Swasth Vayu’) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெண்டிலேட்டரை பெங்களூரிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர்.  - தேசிய  விண்வெளி ஆய்வகம் (Council of Scientific & Industrial Research – National Aerospace Laboratories(CSIR-NAL)) உருவாக்கியுள்ளது.
  • ’ஜிங்யுன்-2 01, 02’ (Xingyun-2 01, 02) எனும் இரண்டு தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை சீனா   தனது குயாஷோ -1 A (Kuaizhou-1A) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது.
  • “போஸ்கியூ” (Bosque) என்ற பெயரில், மேகக் கணினியின் (cloud computing) செயற்கை நுண்ணறிவு  நிரல்களை வடிவமைப்பதற்கான புதிய  நிரலாக்க மொழியை (programming language)  மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய இரண்டு செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
  • ”செவிலி ரோபோ” என்ற பெயரில்,  நேரடி மருத்துவ பணியாளர்களை நோய் தொற்றிலருந்து காத்திடும் நோக்கில்  இந்துஸ்தான் (HITS) பல்கலைகழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வு மையம் (Centre for Automation and Robotics-ANRO)  ஒரு ரோபோவை வடிவமைத்து உருவாக்கி உள்ளது. நோயாளிகளுக்கு நேரடி உதவி, கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பணிகளை மேற்கொள்வதால் 'செவிலி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பல்கலைக்கழகம் வழங்கிய ஒரு ரோபோட் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், மேலும் 4 ரோபோட்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரி & மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது இந்த முயற்சிக்கு ரெனால்ட் நிஸ்ஸான் துணை நின்றது

விளையாட்டுகள்

  • சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் , ’ஃபெட் கப் ஹார்ட் விருது 2020’ (Fed Cup Heart Award 2020) பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையை சானியா மிர்ஷா (Sania Mirza) பெற்றுள்ளார்.
  • 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக் கோப்பை (U-17 Women’s World Cup) கால்பந்து போட்டி 17 பிப்ரவரி 2021 முதல் 7 மார்ச் 2021 வரையில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
  • கோவிட்-19 ஊரடங்கிற்க்குப் பின்னர்  விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி கட்டுப்பாடுகளுக்கான  வரையறைகளை வகுப்பதற்காக   இந்திய விளையாட்டு ஆணையத்தின்  செயலர் ரோகித் பரத்வாஜ் (Rohit Bharadwaj) தலைமையில்  6 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • உமிழ்நீரை பயன்படுத்தி கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்வதை தடை செய்ய வேண்டும் என சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் குழு (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது. கிரிக்கெட் பந்தை பளபளக்கச் செய்ய உமிழ்நீரை பயன்படுத்துவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என டாக்டா் பீட்டா்ஹாா்கோா்ட் தலைமையிலான மருத்துவக் குழு எச்சரித்தது. இதனால் உமிழ்நீரை பயன்படுத்தி பளபளக்கச் செய்ய தடை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • Wuhan Diary: Dispatches from a Quarantined City” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஃபங்க் ஃபங்க் (Fang Fang)
  • “Fear of God” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வதான் (Vadhan)   எனும் புனைப்பெயரைக் கொண்ட  பொம்ம தேவரா சாய் சந்த்ரவதன் (Bomma Devara Sai Chandravadhan) 

பொருளாதாரம்

  • ”தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு” ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
    • முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி
      • சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி
      • பி.எப். நிறுவனத்துக்கு - ரூ.2,800 கோடி
      • பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி
      • நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி - ரூ 30,000 கோடி
      • என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி
      • மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி
      • டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி
    • இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி
      • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி
      • முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி
      • சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி
      • CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி
      • நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி
      • கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி
    • மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி
      • குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி
      • பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி
      • ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி
      • விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி
      • கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி
      • மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி
      • தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி
    • நான்காம் , ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி
      • நம்பகத்தன்மை, இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி
      • ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி
    • பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை (PM CARES (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations) Fund Trust), கோவிட்-19-க்கு எதிராகப் போராடுவதற்காக ரூ.3,100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ரூ.3,100 கோடியில் செயற்கை சுவாசக் கருவிகளை வாங்குவதற்கு சுமார் ரூ.2,000 கோடியும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.1,000 கோடியும், தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணிகளுக்கு ஆதரவு அளிக்க ரூ.100 கோடியும் பயன்படுத்தப்படும்.
      • கூ.தக. : பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை அறக்கட்டளை மார்ச் 27, 2020-இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக (அலுவல்சாரா) பிரதமரும், மற்ற உறுப்பினர்களாக (அலுவல்சாரா) (ex officio) பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரும் இருப்பர்.
    • கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்வதற்காக ”பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளா்ச்சி வங்கி” இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி அளித்தது.


கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுகட்டமைப்பு செய்ய ரூ.20 இலட்சம் கோடியில் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இணையான வகையில்)  சுயசார்பு பாரதம் திட்டம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் ) (“Atmanirbhar Bharat Abhiyaan” / self-reliant India Movement))  என்ற பெயரில்  விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி 12-05-2020 அன்று அறிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான ஐந்து தூண்களாக  பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம்,  துடிப்புள்ள ஜனநாயகம் மற்றும் தேவைகள் ஆகியவற்றை பிரதமர் அறிவித்துள்ளார்.  இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் வருமாறு. Click here to Read in details


Share:

TNPSC Current Affairs 1-10 மே 2020

TNPSC Current Affairs 1-10 மே 2020

தமிழ்நாடு

  • சி.ரங்கராஜன் குழு  நியமனம் :  கொரோனா நோய்த் தாக்குதலால்  பாதிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தில் எப்படி மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் 2-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் , தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை (Dalit Ezhilmalai)   6-5-2020 அன்று காலமானார்.

இந்தியா

  • “NSafe” என்ற பெயரில் மறுபடியும் பயன்படுத்தக் கூடிய  நுண்ணுயிர்க் கொல்லி  மாஸ்க்கை (antimicrobial mask) ஐ.ஐ.டி .டெல்லி  ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
  • ” பிரவாசி ராகத் மித்ரா“ (Pravasi Raahat Mitra) என்ற பெயரில் தமது மாநிலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  அரசின் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கான மொபைல் செயலியை  உத்தரப்பிடதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • ”மதிய உணவு ரேசன் திட்டத்தை” (Mid-Day Meal ration) அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.  இத்திட்டத்தின் மூலம், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் அவர்களுக்கான மதிய உணவிற்கான செலவுத் தொகை மாநில அரசினால் அனுப்பி வைக்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கோவிட்-19 சோதனை பேருந்து ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் குழுவின் மூலம்  தயாரிக்கப்பட்டு மும்பையில்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
  • அறிவியல் ஆராய்ச்சி வெளியீடுகளில் 2018 ஆம் ஆண்டில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் மேலாண்மை முறைமை (National Science and Technology Management Information Sysytem (NSTMIS)) தெரிவித்துள்ளது.
  • ”கோவிட் கதா” ( “COVID KATHA- A Multimedia Guide for Mass Awareness”) எனும்  பல்லூடக  கோவிட்-19 விழிப்புணர்வு  கையேட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ்வர்த்தன் வெளியிட்டுள்ளார்.
  • காஷ்மீர் குங்குமப்பூ (Kashmir saffron) விற்கு புவிசார் குறியீடு   வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் குங்குமப்பூ ஜம்மு காஷ்மீரின்   கரீவா (Karewa) உயர்நிலப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.  மேலும்,  மணிப்பூரின் கருப்பு அரிசி (Manipur black rice) மற்றும் கோரக்பூரின்  டெரகோட்டா (Gorakhpur terracotta) ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
    • கூ.தக. : 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புவிசார் குறியீடு  டார்ஜிலீங் தேயிலைக்கு (Darjeeling Tea) வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ’தேசிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கான” (National Infrastructure Pipeline (NIP))  உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை  மத்திய நிதியமைச்சரிடம்  29 ஏப்ரல் 2020 அன்று சமர்ப்பித்தது.   மத்திய பொருளாதார விவகார  துறை செயலர் அதானு சக்ரவர்த்தி (Atanu Chakraborty) தலைமையில்  கடந்த டிசம்பர் 2019 ல் அமைக்கப்பட்ட இந்த உயர்மட்ட குழுவின் நோக்கம்,  இந்திய அரசின் இலக்கான 2025 ஆம் ஆண்டிற்குள்  இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக   உயரத்துவதற்கான  உட்கட்டமைப்பு  வசதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு   ரூ.102 இலட்சம் கோடி செலவி ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதாகும். தேசிய நில மேலாண்மை நிறுவனம் (National Land Management Corporation) எனும் அமைப்பை உருவாக்க இந்த குழு  பரிந்துரை செய்துள்ளது. 
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (Mahatma Gandhi National Rural Employment GuaranteeScheme (MGNREGS))  அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடத்தை சட்டிஷ்கர் மாநிலம் பெற்றுள்ளது.  2,34 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.
  • 2019 ஆம் காலண்டர் ஆண்டில்   மொத்தம் 7.3 ஜிகா வாட் சூரிய ஆற்றலை நிறுவி  உலகளவில் இந்தியா மூன்றாவது சூரிய ஆற்றல் சந்தையாக உருவெடுத்துள்ளது.   Mercom India Research எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உள்ளன.
  • ”ஜனாசாதி சுகம் செயலி” (Janaushadhi Sugam app) என்ற பெயரில் ஜெனரிக் மருந்து கடைகள் அமைந்திருக்கும் இடங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிவதற்கான மொபைல் செயலியை  மத்திய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • ”கிசான் சபா செயலி” (Kisan Sabha App) : விநியோகச் சங்கிலி மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை முறையுடன் விவசாயிகளை இணைக்கும் கிசான் சபா செயலியை புதுதில்லி அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர்- மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்(CSIR-Central Road Research Institute (CSIR-CRRI))  உருவாக்கியுள்ளது.

பயன்பாடுகள் : 

  • விவசாயிகள், போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குவோர் பூச்சி மருந்துகள், விற்பனையாளர்கள், பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு உரிமையாளர்கள், மண்டி விற்பனையாளர்கள், நுகர்வோர் பெரிய சில்லரை விற்பனை கடைகள், ஆன்லைன் கடைகள், நிறுவன வாங்குவோர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களை இந்தச் செயலி இணைக்கிறது.
  • தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை தேவைப்படும் விவசாயிகள் அல்லது அதிக விவசாயிகளின் தொடர்பை விரும்பும் மண்டி விற்பனையாளர்கள் அல்லது பல நேரங்களில் காலியாகவே மண்டிக்குச் செல்லும் லாரி உரிமையாளர்கள் என விவசாயத்துடன் தொடர்புள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒற்றைத் தளமாக இது செயல்படுகிறது.
  • உரங்கள், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் போன்ற விவசாய சேவைகள் துறைச் சேர்ந்தவர்கள், தங்கள் சேவைக்கு அதிக விவசாயிகளை அடையக்கூடிய வகையில் கிசான் சபா செயலி பயன்படுகிறது.
  • பதனப்படுத்தும் கிடங்குகள் அல்லது சேமிப்பு கிடங்குகளுடன் தொடர்புடையவர்களுக்கும் இது பயனுடையதாக இருக்கும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் கிசான் சபா செயலி ஒரு தளமாக விளங்குகிறது.
  • ” ஆயுஷ் சஞ்சீவனி செயலி” ("Ayush Sanjivani") என்ற பெயரில் பொது மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வுகள் மற்றும் கோவிட்-19 பற்றிய தகவல்களடங்கிய செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 7-5-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” (Dekho Apna Desh) என்ற பெயரில்  15 வது இணையதள காட்சி தொடரை  'பஞ்சாப்- கையேட்டுக்கு அப்பால்' என்ற பெயரில்  சுற்றுலா அமைச்சகம்  வெளியிட்டுள்ளது.
  • “ஆபரேஷன் சமுத்திர சேது” (Operation Samudra Setu) : வெளிநாடுகளிலிருந்து இந்திய குடிமக்களை அழைத்துவருவதற்காக தேசிய அளவிலான முயற்சியின் ஒரு அங்கமாக “சமுத்ர சேது”, அதாவது கடல் பாலம் செயல்பாட்டை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது.  முதற்கட்டமாக  ஐ.என்.எஸ். ஜலஸ்வா (INS Jalashwa) மற்றும் ஐ.என்.எஸ். மாகர் (INS Magar) ஆகிய  இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் மாலத்தீவிலுள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  • GARUD - Government Authorisation for Relief Using Drones
  • ‘CMAPP (Comprehensive Monitoring of Agriculture, Price, and Procurement)’ என்ற பெயரில் விவசாயிகளின் தேவைகளை கண்காணிப்பதற்கான  மொபைல் செயலியை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஆயுா்வேத மருந்தான அஸ்வகந்தாவை கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
  • ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்   7-5-2020 அன்று அதிகாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டதில்  10 க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் விபத்திற்கு காரணமான வாயுவின் பெயர் ஸ்டைரீன் (styrene)  என்பதாகும். இவ்வாயு  எத்தனைல் பென்சீன் எனவும் அழைக்கப்படுகிறது.   கூ.தக. :  இந்த  விபத்திற்கு அபராதமாக, எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • ஹிஸ்புல் முஜாஹிதீன் பங்கரவாத அமைப்பின் தலைவர் ரெயாஸ் நைக்கூ -வை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவனது கிராமத்தில் பாதுகாப்பு படையினா் 6-5-2020 அன்று  சுட்டுக் கொன்றனா்.
  • ”வந்தே பாரத் திட்டம்” (Vande Bharat Mission) என்ற பெயரில் கரோனா நோய்த்தொற்று சூழலில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வரும் நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது.அமெரி்க்காவின் முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ், 2020ம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 36.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில் முதலிடத்தையும், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் தமனி, 13.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் மூன்றாம் இடத்திலும், உதய் கோட்டாக், 10.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் நான்காம் இடத்திலும், கௌதம் அதானி 8.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.மேலும், பார்தி ஏர்டெல் சுனில் மிட்டல் 6 வது இடத்திலும், சைரஸ் பொன்னவாலா, 7-வது இடத்திலும், குமார் பிர்லா, 8-ம் இடத்திலும், லஷ்மி மிட்டல்,9-ம் இடத்திலும், அசிம் பிரேம்ஜி, 10-வது இடம் என 10 பேர் பணக்கார இந்தியராக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லோக்பால் உறுப்பினரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அஜய்குமாா் திரிபாதி (62) 2-5-2020 அன்று  மாரடைப்பால் காலமானார்.
  • உலகிலேயே அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை ராமாயணம்  தொடா் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் 7.7 கோடி மக்கள் இந்தத் தொடரைப் பாா்த்துள்ளனா்.
  • "மிஷன் சாகர்” (“Mission Sagar”) என்ற பெயரில் கோவிட்-19 பேராபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு    நாடுகளான மாலத்தீவு, மடகாஸ்கர், செஷல்ஸ் மற்றும் காமரோஸ் ஆகியவற்றிற்கு  உணவுப் பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள், HCQ மாத்திரைகள்  ஆகியவற்றை கடல்வழியாக  இந்திய கடற்படைக் கப்பல்  ஐ.என்.எஸ். கேசரி  (Indian Naval Ship Kesari) மூலம்  அனுப்பி வைப்பதற்கான திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட செகாதர் குழுவின் (Shekatar Committee) பரிந்துரையின் படி இந்திய இராணுவ பொறியியல் சேவைகளிலுள்ள  9,304 பதவிகளை ஒழிப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நிதி அயோக் மற்றும்  பிரிமால் பவுண்டேசன் (Primal Foundation) இணைந்து   தாத்தா - பாட்டி திட்டம்(Surakshit Dada-Dadi and Nana-Nani Abhiyan)   எனும் திட்டத்தை 5-5-2020 அன்று தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்  நாடு முழுவதிலுமுள்ள  மூத்த குடிமக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களைக் குறித்த பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • ”யாஷ்” (YASH - Year of Awareness on Science & Health) என்ற பெயரில் கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான திட்டத்தை   தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  தகவல் தொடர்பு கவுண்சில் (National Council for Science & Technology Communication (NCSTC) )  மற்றும்  மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை ( Department of Science & Technology (DST)) இணைந்து தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ஆவது தினத்தையொட்டி, ஆங்கிலேய ராணுவத்துக்காகப் போரிட்டு உயிா்த்தியாகம் செய்த 87,000 இந்திய வீரா்களுக்கு பிரிட்டனில் 8-5-2020 அன்று மரியாதை செலுத்தப்பட்டது.
  • ” தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” எனும் புதிய பயங்கரவாத அமைப்பை  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் , பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  மூன்று உயர் தலைவர்களால் இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது  என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஈராக் நாட்டின் 6வது பிரதமராக முஸ்தஃபா அல் காதிமி (Mustafa Al Kadhimi) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய வம்சாவழி அமெரிக்க பெண்மணி மனிஷா சிங் (Manisha Singh) பொருளாதார ஒத்துழைப்பு மற்றூம் வளர்ச்சிற்கான அமைப்பின் (Organization for Economic Cooperation and Development(OECD)) அமெரிக்க பிரதிநிதியாக ( US envoy) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கிக்கான ( International Bank for Reconstruction and Development (IBRD)) அமெரிக்க பிரதிநிதியாக  இந்திய அமெரிக்க வழக்கறிஞர்  அசோக் மைக்கேல் பிண்டோ (Ashok Michael Pinto) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் (President of the European Council) -  E. சார்லஸ் மைக்கேல்  (H.E. Charles Michel)
  • இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சீனாவின் லாங் மார்ச் 5-பி ஏவூர்தி 5-5-2020  அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ரூ.61,500 கோடி வழங்க சம்மதித்து உள்ளன. கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 5-5-2020 அன்று நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.61 ஆயி ரத்து 500 கோடி) வழங்க முன் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தேவையான நிதி திரட்டும் இந்தக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கரான சரிதா கோமட்டிரெட்டியை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
  • முதல்முறையாக பாகிஸ்தான் விமானப்படையில் தேர்வு செய்யப்பட்ட ‘இந்து’ விமானி எனும் பெருமையை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின்  இந்து இளைஞரான ராகுல் தேவ் பெற்றுள்ளார்.
  • கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது.இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 
  • இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை  தன்னுடைய மகனுக்கு   (வில்ஃபிரெட் லாரி நிக்கோலஸ் என) சூட்டியுள்ளார் .
  • பிரிட்டன் ராயல் சொஸைட்டியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட   விக்ரம் தேஷ்பாண்டே சோ்க்கப்பட்டுள்ளாா்.  மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்ற விக்ரம் தேஷ்பாண்டே, தனது ஆராய்ச்சிகள் மூலம் இயந்திரப் பொறியியலுக்குப் பல்வேறு முக்கியப் பங்களிப்புகளை நல்கியுள்ளாா்.
    • கூ.தக. : அறிவியல் சாா்ந்த பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கான கூட்டமைப்பான பிரிட்டன் ராயல் சொஸைட்டி 1660-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பிரிட்டன் மற்றும் அந்நாட்டின் ஆளுகையின் கீழிருந்த காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள் ஆகியோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்களாக உள்ளனா்.
    • புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சாா்லஸ் டாா்வின், ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீநிவாச ராமானுஜன் உள்ளிட்டோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்கள் ஆவா்.
  • கொரோனாவுக்கான சிகிச்சைக்கு அமெரிக்காவின் கைலீட் சயன்சஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ (remdesivir) மருந்தை பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
  • அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
  • ஈரான் நாட்டில் ‘தோமான்’ (Toman) என்ற புது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தோமானின் மதிப்பு  10,000 ஈரானிய ரியால் (Rial) ஆக இருக்கும்.

பொருளாதாரம்

  • 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை மூடிஸ் நிறுவனம் (Moody's)   தனது முந்தைய கணிப்பான 2.6% த்திலிருந்து  பூஜ்ஜியமாக குறைத்து கணித்துள்ளது.
  • ”பாரத்மார்க்கெட்” (‘bharatmarket’) என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து வியாபாரிகளுக்குமான மின் வணிக சந்தை (e-commerce marketplace)  வசதியை  bharatemarket.in எனும் இணையதளத்தின் மூலமாக  ஏற்படுத்துவதாக   அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT) )  அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் ’ENCORE’ எனப்படும்  கடலோர மற்றும் கடல் வள திறன் மேம்பாட்டு’ (‘ Enhancing Coastal and Ocean Resource Efficiency  - ENCORE ) திட்டத்திற்கு  உலக வங்கி  400 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் ’ஓபன் பட்ஜெட் சர்வே 2019’ (Open Budget Survey 2019) எனப்படும் நிதியறிக்கை வெளிப்படைத்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில்   இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது.  International Budget Partnership (IBP) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு உதவும் 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்திய அரசு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 8-5-2020 அன்று கையெழுத்திட்டுள்ளன.

விருதுகள்

  • புலிட்சர் பரிசு 2020 (Pulitzer Prize) ல் தனிசிறப்பு புகைப்படப் பிரிவில்  (feature photography)  இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த   தார் யாசின், முக்தர் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஜப்பான் நாட்டின் ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’ (‘Order of Rising Sun’ ) விருது மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தன்ஞம் தபாலி சிங்கிற்கு (Thangjam Dhabali Singh) வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • ”ஐ.நா. சுற்றுசூழல் திட்டத்தின்” ( United Nations Environment Programme (UNEP) ) அடுத்த இரண்டாண்டுகளுக்கான  தேசிய  நல்லெண்ண தூதுவராக  (National Goodwill Ambassador)   பாலிவுட் நடிகை  ‘தியா மிர்ஷா” (Dia Mirza) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 5 ஜீன் 1972 ல் தொடங்கப்பட்ட ஐ.நா.  சுற்றுசூழல் திட்டத்தின் (United Nations Environment Programme)  தலைமையிடம் கென்யா நாட்டிலுள்ள நைரோபி (           Nairobi )  நகரில் உள்ளது.  இவ்வமைப்பின் தற்போதைய  செயல்  இயக்குநராக டென்மார்க்கை சேர்ந்த இங்கர் ஆண்டர்ஸன் (Inger Andersen) உள்ளார்.
  • பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் (Parliament’s Public Accounts Committee(PAC)) தலைவராக  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ( Adhir Ranjan Chowdhury) மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிசர்வ் வங்கியின் மைய வாரியத்தின் (Central Board of the Reserve Bank of India(RBI)) இயக்குநராக தருண் பஜாஜ் (Tarun Bajaj) 6-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day ) - மே 11
  • சர்வதேச அன்னையர் தினம் - மே 10
  • இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோரின் சர்வதேச நினைவு தினம் (Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during World War II)  - மே 8,9
  • உலக வலசை போகும் பறவைகள் தினம் (World Migratory Bird Day) - மே 9 | மையக்கருத்து 2020 - ‘பறவைகளே, எங்கள் உலகை இணையுங்கள்’ (“Birds Connect Our World”)
  • உலக ரெட் கிராஸ் / ரெட் கிரசண்ட் தினம் (World Red Cross and Red Crescent Day) - மே 8
    • கூ.தக. : 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச ரெட் கிராஸ் குழுவின் (International Committee of the Red Cross(ICRC))  தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
  • உலக தாலசீமியா நோய் தினம் (World Thalassaemia day)  - மே 8
  • உலக தடகள தினம் (World Athletics Day) - மே 7
  • உலக கை சுகாதார தினம் (World Hand Hygiene)  - மே 5
  • உலக ஆஸ்துமா நோய் தினம் (World Asthma Day) - மே 5 | மையக்கருத்து 2020 - போதும், ஆஸ்துமா இறப்புகள் (Enough Asthma Deaths)
  • சர்வதேச மருத்துவச்சிகள் தினம் (International Day of the Midwife) - மே 5
  • உலக தீயணைப்புப்படை வீரர்கள் தினம் (International Firefighters’ Day) - மே 4
  • உலக ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day ) - மே  3
  • உலக சிரிப்பு தினம் (World Laughter Day) - மே 3
  • உலக சூரைமீன் தினம் (World Tuna Day) - மே 2
  • சர்வதேச வானியல் தினம் (International Astronomy Day) - மே 2
  • சர்வதேச தொழிலாளர் தினம் (International Labour Day) - மே 1
  • ஆயுஷ்மான் பாரத் தினம் (Ayushman Bharat Diwas) - ஏப்ரல்  30

அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ Luhman 16A” என்று பெயரிடப்பட்டுள்ள வியாழன் கோளையொத்த  குறுங்கோள் (dwarf) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • “UV blaster” என்ற பெயரில் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமி ஒழிப்பு கோபரத்தை (Ultraviolet Disinfection Tower)  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி  மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது.
  • ”ஆர்க்டிகா-எம்” ( ‘Arktika-M’ ) என்ற பெயரில்  ஆர்டிக்  பருவநிலை மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சிக்கான ரஷியாவின்  முதல் செயற்கைக் கோள் Soyuz-2.1b  ராக்கெட்டின் மூலம் டிசம்பர் 2020 ல் அனுப்பப்படவுள்ளது.
  • “eCovSens” என்ற பெயரில்  கோவிட்-19  கொரோனா வைரஸை 30 நொடிகளில் கண்டறிவதற்கான  ‘உயிரி உணர்வி’ (biosensor)  தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியை  ஹைதராபாத்திலுள்ள, தேசிய  விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Animal Biotechnology(NIAB))  உருவாக்கியுள்ளது.
  • முதல் முறையாக “ஸ்பைனோசரஸ் ஆகிப்டியாகஸ்” ( ‘Spinosaurus aegyptiacus’)  ‘நீரில் வாழும் தகவமைப்புடைய  , இறைச்சி உண்ணும் டைனோசர் (meat-eating aquatic Dinosaur) வகை  வாழ்ந்ததற்கான ஆதாரங்களை   வட ஆப்பிரிக்காவின் மொரோக்கா சகாரா பகுதியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த டைனோசர்கள் வகை  வாழ்ந்த காலம் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • “அதுல்யா” ( ‘Atulya’ ) என்ற பெயரில் , கொரோனா வைரஸ் கிருமியை 30 நொடிகளில் ஒழிக்கவல்ல, மைக்ரோ வேவ் தொற்றுநீக்கியை ( microwave steriliser)  பூனேவைச் சார்ந்த   அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT))  தயாரித்துள்ளது.
  • நாசாவின் முதல் செவ்வாய் கிரக ஹெலிகாப்டருக்கு   இந்திய வம்சாவளி இந்திய சிறுமி வனீஷா ரூபானி    (Vaneeza Rupani) பரிந்துரைத்த “இஞ்செனிட்டி” (Ingenuity)  என்ற பெயரி சூட்டப்பட்டுள்ளது.
  • ”HCARD - Hospital Care Assistive Robotic Device” என்ற பெயரில் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிபுரியும் ரோபோவை  மேற்குவங்க மாநிலம் துர்க்காப்பூரிலுள்ள  சி.எஸ்.ஐ.ஆர். - மத்திய எந்திரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR- Central Mechanical Engineering Research Institute (CMERI)) உருவாக்கியுள்ளது.
  • "நோட்ஸ்கிளீன்” (NOTESCLEAN) என்ற பெயரில் ரூபாய் நோட்டுகளிலுள்ள தொற்றுக் கிரிமிகளை அகற்றுவதற்கான  கருவியை   ஹைதராபாத்திலுள்ள  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI))  உருவாக்கியுள்ளது.
  • ”துருவ்ஸ்” (Defence Research Ultraviolet Sanitiser (DRUVS)) என்ற பெயரில் புற ஊதாக்கதிர்கள் மூலம்  செயல்படும்  கிருமி நாசினி  கருவியை  ஹைதராபாத்திலுள்ள   மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI)) உருவாக்கியுள்ளது.
  • கோவிட் கவாச் எலைஷா” (COVID KAVACH ELISA) என்ற பெயரில் கோவிட்-19 க்கு எதிரான உடலிலுள்ள நோயெதிர்ப்பு ஆண்டிபாடியை சோதனை செய்வதற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட   எலைஷா ( IgG ELISA test)   சோதனைக் கருவியை   பூனேவிலுள்ள     தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Medical Research (ICMR)-National Institute)  தயாரித்துள்ளது.
  • பூமியின் வட துருவத்தில் ஏற்பட்டிருந்த 620,000 சதுர மைல்கள்  பரப்புள்ள மிகப்பெரிய ஓஷோன்  ஓட்டை அடைபட்டுள்ளதாக   ஐரோப்பிய ஒன்றியத்தின்   கோப்பர்நிக்கஸ்  வானியல் ஆராய்ச்சி சேவைகள் மையம் (Copernicus Atmosphere Monitoring Service (CAMS)) அறிவித்துள்ளது.

விளையாட்டுகள்

  • 2020 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் (Badminton World Championship) போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு,    29 நவம்பர் 2021 முதல் 5 டிசம்பர் 2021 வரை ஸ்பெயின் நாட்டின் ஹீல்வா எனுமிடத்தில் நடைபெறவுள்ளதாக  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் இளையோர் விளையாட்டுகள் (Commonwealth Youth Games)   2023 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • டென்னிஸ் விளையாட்டிற்கான ‘ஃபெட் கோப்பை இதய விருது’ (Fed Cup Heart Award) பெறும்  முதல் இந்தியர் எனும் பெருமையை  சானியா மிர்ஷா பெற்றுள்ளார்.  இந்த விருதை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (International Tennis Federation(ITF) ) வழங்கியுள்ளது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது . சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Shivaji in South Block: The Unwritten History of a Proud People” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கிரிஷ் கூபர் (Girish Kuber)
  • “The Room Where It Happened: A White House Memoir” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஜான் போல்டன் (John Bolton)
  • ’Vijyant at Kargil: The Life of a Kargil War Hero’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்கள் - வி.என்.தாபர், நேகா திவேதி

  Download as PDF

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language