Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Tamilnadu TN New Text Books Download Free Pdf | 1st Std to 12th Std New & Old Books Pdf


Tamil Nadu State Board New Syllabus Books 1st Class to 12th Class pdf Free Download


6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here

TN New Syllabus Text Books PDF Collections

1st Std Books

2nd Std Books

3rd Std Books

Click Here
4th Std Books

5th Std Books

6th Std Books

7th Std Books

8th Std Books

9th Std Books

10th Std Books

11th Std Books

12th Std Tamil Medium Books

12th Std English Medium Books


Share:

TNPSC Current Affairs 13-15 June 2020

TNPSC Current Affairs 13-15 June 2020

இந்தியா

  • ”I-FLOWS” (Integrated Flood Warning System) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வெள்ள அபாய முறைமையை   மும்பை நகரில்    மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர். இதனை,  மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், பூனேவைச் சேர்ந்த ’இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்)’ ( Indian Institute of Tropical Meteorology (IITM))  உருவாக்கியுள்ளது.
  • “ஆரோக்கியபாத்” (Aarogyapath) என்ற பெயரில் ’தேசிய சுகாதார விநியோகச் சங்கிலி இணையதளத்தை (www.aarogyapath.in)’ (National Healthcare Supply Chain Portal)  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் வங்கிகளின் உரிமையாளர்களைப் பற்றி ஆராய பி.கே.மொகந்தி (P K Mohanty) தலைமையிலான பணிக்குழுவை ரிசர்வ் வங்கி 12-6-2020 அன்று அமைத்துள்ளது.
  • QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2021 (QS World University Rankings 2021) ல் முதல் 200 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து மூன்று பல்கலைக்கழகஙக்ள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவையாவன,
    • IIT மும்பை -  172 வது இடம் 
    • IISc பெங்களூரு - 185 வது இடம்
    • IIT டெல்லி - 193 வது இடம்
இப்பட்டியலில் உலகளவில் முதல் மூன்று இடங்களை முறையே  மாசாசூட் பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) (அமெரிக்கா), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) (அமெரிக்கா) மற்றும் Harvard University (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)  (அமெரிக்கா) ஆகியவை பெற்றுள்ளன.
  • ’ஷேகர் மித்ரா’ ( ‘Shakar Mitra’ ) என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டமானது  தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation  - NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • ”பால ஷ்ராமிக் வித்யா யோஜனா” (Bal Shramik Vidya Yojana) என்ற பெயரில், 8-18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும்  அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை    உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.   
  • பழங்குடி பள்ளி மாணவர் தங்குமிடங்களுக்கு   ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் ( ISO (International Organization for Standardization) 9001:2015 ) பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிஷா பெற்றுள்ளது.
  • ஆதார் அட்டை மூலம் ஆன்லைன் வழியாகவே சேமிப்பு வங்கி கணக்கை தொடங்குவதற்கான சேவையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக பாவித்துள்ள  புதிய வரைபடத்துக்கு  ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 13-6-2020 அன்று நேபாள  நாட்டின் நாடாளுமன்றத்தில்  நிறைவேறியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்ட , அமெரிக்காவின், மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக கேத்தி லூதர்ஸ் ( Kathy Lueders) எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, 2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம்  ‘ஓரியன் ராக்கெட்’  மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்

விருதுகள்

  • விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) (Dr Rattan Lal ) ”சா்வதேச உணவு விருது” (World Food Prize) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய அரசின்’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா பதக்கம்’ (“the Medal of the Order of Australia”) இந்திய இசை  (வீணை)  வல்லுனரும் ’கலாக்ருதி’(Kalakruthi) எனும் அமைப்பின் நிறுவனருமான சோபா சேகருக்கு ( Shobha Sekhar ) அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக முதியோர் நிந்தனை விழிப்புணர்வு தினம் ( World Elder Abuse Awareness Day   )   - ஜீன்  15 
  • உலக இரத்த தானம் செய்வோர் தினம் (World Blood Donor Day) - ஜீன் 14 | மையக்கருத்து 2020 - ‘பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது’ (Safe Blood Saves Lives)
  • சர்வதேச அல்ஃபினிஷம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) - ஜீன் 13

விளையாட்டுகள்

  • இந்தியாவின் மூத்த முதல் தர கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (100) 13-6-2020 அன்று தெற்கு மும்பை வால்கேஷ்வரில் முதுமை காரணமாக காலமானாா்.கடந்த 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சாா்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானாா். வலது கை பேட்ஸ்மேனான அவா், 1940-இல் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடினாா். மொத்தம் 277 ரன்களை குவித்தாா். அதில் அதிகபட்சம் 68 ஆகும். விஜய் மொ்ச்சண்ட் தலைமையிலான மும்பை அணி சாா்பில் 1941-இல் அறிமுகமாகி மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஆடினாா். வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.
  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (Federation Internationale de Football Association) 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 108 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியைல் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Lockdown Liaisons: Leaving and Other Stories” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஷோபா டே (Shobha De) 
Share:

TNPSC Current Affairs 10-12 June 2020

TNPSC Current Affairs 10-12 June 2020

தமிழ்நாடு

  • சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 11-6-2020 அன்று திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலுள்ள 1018  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து அரசாணையை தமிழ் வளர்ச்சித்துறை 10-6-2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன. இனி அதை விடுத்தது
    • உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் எக்மோர் என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும்.
  • இந்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான தமிழகத்தைச் சேரத முனைவர் ஏ. வைத்தியநாதன் 10-6-2020 அன்று காலமானார். இவர் , 1962 முதல் 72 வரை திட்டக் குழுவில் திட்டமிடுதலுக்கான பிரிவில் வைத்தியநாதன் செயலாற்றியுள்ளார்.
  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக)  ஜெ. அன்பழகன் காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி 10-6-2020 அன்று காலை காலமானார்.
  • 2019-2020 ஆம் கல்வியாண்டின் 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் 11ம் வகுப்பிற்கான நிலுவையில் உள்ள தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% வருகைப்பதிவுக்கு 20% கணக்கில் எடுத்துக் கொள்ளபடும் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • லாக்டவுண் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக https://tnskill.tn.gov.in என்ற இணைய தளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சம்பந்த பட்டோர் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ (Operation Desert Chase) என்ற பெயரில் வேவுபார்த்தலுக்கெதிரான நடவடிக்கையின் (anti-espionage operation) மூலமாக இந்திய இராணுவத்திலிருந்து தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்த முயன்ற இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை பணியாளர்களை இந்திய இராணுவ புலனாய்வுத் துறை அலுவல் இரகசிய சட்டம் 1923 (Official Secrets Act, 1923) இன் கீழ் கைது செய்துள்ளது. இந்த ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
  • ’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’ (Haldwani biodiversity park) உத்தரக்காண்ட் மாநிலத்தில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி (2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ”பாரத்மாலா திட்டத்தை” (Bharatmala Pariyojana) செயல்படுத்தி முடிப்பதற்கான கால இலக்கு 2021-2022 லிருந்து 2025-2026 ஆக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • கூ.தக. : பாரத்மாலா திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டமாகும். இந்த திட்டமானது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப், ஹரியானா செல்லும். பின்னர் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக சென்று சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் வழியாக இந்தியா- மியான்மர் எல்லை வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு ரூ.5.35 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
    • இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 38 ஆயிரம் கி.மீ கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2022ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐசிஆர்ஏ) தெரிவித்துள்ளது.
  • பசுக்களை பாதுகாப்பதற்கான ‘உத்தரப்பிரதேச பசுவதை தடுப்புச் சட்டத்தில்( Uttar Pradesh cow slaughter act, 1955’) உத்தரப்பிரதேச அரசு திருத்தங்களை (Cow Slaughter Prevention (Amendment) Ordinance, 2020) மேற்கொண்டுள்ளது. இதன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ5 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிருஷ்ணன் ரெட்டி (G Kishan Reddy) தலைமையில் 9 சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளடங்கிய புதிய குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
  • இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
  • தேசிய உயர்கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியல் 2020 11-6-2020 அன்று வெளியிடப்பட்டது.
    • இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்க தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில், வெவ்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வி நிறுவனங்களின் விவரம் வருமாறு,
பிரிவு : பொறியியல் கல்லுாரி
  1. சென்னை ஐ.ஐ.டி.,
  2. பெங்களூா் இந்திய அறிவியல் கழகமும்
  3. தில்லி ஐஐடி
பிரிவு: பல்கலைக்கழகங்கள்
1.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பிரிவு: மேலாண்மை
1.இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
2.இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா
பிரிவு: கல்லூரிகள்
1.மிரண்டா ஹவுஸ், புதுதில்லி
2.லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, புதுதில்லி
3.இந்து கல்லூரி, புதுதில்லி
4.புனித ஸ்டீபன் கல்லூரி, புதுதில்லி
5.பிரசிடென்சி கல்லூரி, சென்னை
பிரிவு: கட்டிடக்கலை
1.இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர்
2.இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே
3.இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு
பிரிவு: மருந்தியல்
1.ஜமியா ஹம்தர்த், புதுதில்லி
2.பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
3.தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மொஹாலி
பிரிவு: சட்டம்
1.இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, பெங்களூரு
2.தேசியசட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி
3.நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2020 ல் தமிழகக் கல்வி நிலையங்களின் நிலை
  • பல்கலைக்கழக தரவரிசையிலும் 7-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையிலும் 9-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-ஆவது இடத்தில் இருந்து 41-ஆவது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-இல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜா் பல்கலை., 69-இல் இருந்து 84-ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிா்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூா் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன
  • கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.
  • மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சென்னை மருத்துவ கல்லூரி 12-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 40 இடங்களில் 7 தனியாா் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள், தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi) என்ற பெயரில் நாடுதழுவிய நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme-UNDP) , ஹிந்துஸ்தான் கோகோகோலா நிறுவனம் (Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB)) மற்றும் ஹைதராபாத்தைச் சேரத ‘ரிசைக்கால்’ ("Recykal") ஆகியவை இணைந்து இந்தியாவில் அமல்படுத்தவுள்ளன.
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) ஒரு லட்சத்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி (NCERT) யும், ரோட்டரி இந்தியாவும் (Rotary India) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.இதன் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும்.மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவும், டென்மார்க்கும் மின்சக்தித்துறையில், சமநிலை, மறுபரிசீலனை, இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில், வலுவான, ஆழமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கா ரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 5-6-2020-ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியத் தரப்பில் மின்சக்தித் துறையின் செயலர் திரு சஞ்சீவ் நந்தன் சகாயும், டேனிஷ் தரப்பில் இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் திரு. ஃப்ரெட்டி ஸ்வேனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
    • நீண்டகால எரிசக்தி திட்டமிடல், தொலைநோக்கு, மின்சக்தி விநியோகத்தில் தளர்வு உள்ளிட்ட மின்சக்தித் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
  • லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் : கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை.
பின்னணி : லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா்.

பொருளாதாரம்

  • நடப்பு நிதியாண்டில் (2020-21) இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் 3.2 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வில் (ஜீன் 2020) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகவும், இந்த ஆண்டில் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறையும்பட்சத்தில் அடுத்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பிருப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருதுகள்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ வின் உயரிய விருதான ’நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம்’ (‘NASA Distinguished Public Service Medal’ ) இந்திய வம்சாவளி (கேரளத்தைச் சேர்ந்த) அமெரிக்க தொழிலதிபர் ரஞ்சித் குமாருக்கு ( Renjith Kumar ) வழங்கப்பட்டுள்ளது.
  • "ஆசியாவின் நோபல்" என்றழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது, கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்லாந்து தலைநகா் மணிலாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மகசேசே அறக்கட்டளை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகமே முடங்கிப் போயுள்ளதால் அந்த விருதுக்குரியவா்களைத் தோ்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விருது ரத்து செய்யப்படுவது, கடந்த 60 ஆண்டுகளில் இது முன்றாவது முறையாகும்.
    • கூ.தக. : 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் உட்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் - கீ ஆகியோரும் இந்த விருது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலக அங்கீகாரமளித்தல் தினம் (World Accreditation Day) - ஜீன் 9

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகில் முதல் முறையாக ஒரு கோள் உருவாவதை படம் பிடித்துள்ளதாக பிரான்சு நாட்டை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்கள், பூமியிலிருந்து 520 ஒளியாண்டு தொலைவில் உள்ள ‘ஆரிகா’ (Auriga) பால்வெளித் திரளிலுள்ள ‘AB Aurigae’என்ற நட்சத்திரத்தினருகில் ஒரு புதிய கோள் உருவாவதைப் European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்கள்.
  • கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை போலந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.
  • சூரியன் மற்றும் பூமியை ஒத்த, கெப்ளர் - 160 (Kepler-160) எனும் நட்சத்திரம் மற்றும் ”KOI-456” எனும் கோளையும் ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck Institute for Solar System Research (MPS) , University of Göttingen, அமெரிக்காவின் University of California, மற்றும் NASA வின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வின் படி, இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற ”பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள்” மற்றும் ”தெற்காசிய பிராந்தியங்களில்” தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.
  • "அனன்யா” (ANANYA) என்ற பெயரில் கிருமி நாசினி ஸ்பிரேயை (disinfectant spray)   பூனேவிலுள்ள  அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.

Share:

TNPSC Current Affairs 8, 9 June 2020

TNPSC Current Affairs 8, 9 June 2020

தமிழ்நாடு

  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் 8-6-2020 அன்றூ கண்டெடுக்கப்பட்டன.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மனித எலும்பு  8-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டது.
  • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ஐ.சி.சி.எஸ் சுஜய் ( Indian Coast Guard Ship ‘Sujay’ ) என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் 8-6-2020 அன்று இணைக்கப்பட்டது. இந்த ரோந்துக் கப்பல் , இதற்கு முன்னர் ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தது.
  • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) 2019-2020 ஆம் ஆண்டிற்கான  மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index (SFSI))  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில்
    • பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
    • சிறிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா  
    • யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று இடங்களை முறையே சண்டிகர், டெல்கி மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவையும் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் (online waste exchange programme) ஆந்திர மாநில அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (Andhra Pradesh Environment Management Corporation or APEMC )செயல்படுத்துகிறது.
  • ”குரோ-பாட்” (Coro-bot) என்ற பெயரில் உலகின் முதல் இணையதளம் வழியாக கட்டுப்படுத்தப்படும் ரோபோவை மகாராஷ்டிர மாநிலம் தானே வைச் சேர்ந்த பொறியாளர் பிரதிக் திரோட்கர் (Pratik Tirodkar) என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குவதுடன் , அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக இருக்கும்.
  • சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ( Environment Performance Index ) 2020ல் இந்தியா 168 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களை முறையே, டென்மார்க், லக்‌ஷம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பருவநிலை மாற்ற பிரிவில் இந்தியா உலகளவில் 106 ஆவது இடத்தையும் தெற்காசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
    • கூ. தக. 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 177 வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • BS-6 மாசு நெறிமுறைகளுடன் வெளிவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்துவமான வண்ணங்கள் கொண்ட இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த எரிபொருள் வகையினதும் BS -6 மாசுக் கட்டுபாட்டு நெறிமுறை வாகனங்களுக்கான பதிவு விவரங்களை எடுத்துச் செல்லும் தற்போதைய ஸ்டிக்கரின் மேல் 1 செ.மீ அகலமுள்ள பச்சை நிறத்துண்டு ஒன்றைக் கட்டாயமாக்குகிறது, அதாவது பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயு (CNG)வில் இயங்கும் வாகனங்களுக்கு வெளிர் நீல வண்ண ஸ்டிக்கர் மற்றும் டீசல் வாகனம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இப்போது BS – 6 வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் மீது 1 செ.மீ மேலே பச்சை நிறத் துண்டு இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
    • கூ.தக. : BS-6 மாசு கட்டுப்பாடுத் தரநிலைகள் ஏப்ரல் 1, 2020 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • ’மிஷன் சாகர்’ (Mission Sagar) எனும் திட்டத்தின் கீழ் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு தீவு நாடுகளான மாலத்தீவு, மெளரிசியஸ் , மடகாஸ்கர், காமரோஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மே 2020 தொடங்கியது.
    • கூ.தக : SAGAR - Security and Growth for All in the Region
  • இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை 3-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பரஸ்பர நலன், அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன், பத்தாண்டு காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும்.

முக்கிய தினங்கள்

  • உலக மூளை இரத்தக்கட்டு  நோய் தினம் (World Brain Tumor Day) 2020 –  ஜீன் 8
  • உலக பெருங்கடல்கள் தினம் (World Oceans Day) - ஜீன் 8 | மையக்கருத்து 2020 - நீடித்த பெருங்கடல்களுக்கான கண்டுபிடிப்பு (Innovation for a Sustainable Ocean)


Share:

TNPSC Current Affairs 6,7 June 2020

TNPSC Current Affairs 6,7 June 2020

தமிழ்நாடு

  • ”ஒளிரும் தமிழ்நாடு” மாநாடு :  தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) சாா்பில் நடைபெறும்  ஒளிரும் தமிழ்நாடு  எனும் காணொலி மாநாட்டை முதல்வா் பழனிசாமி  06-06-2020  அன்று தொடக்கி வைத்தார்.
  • பிரதமர் மோடி அவர்களால் மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நித்ரா 'ஐக்கிய நாடுகளவை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சங்கத்தின் (United Nations Association for Development and Peace (UNADAP) )ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஊக்கத் தொகையாக ரூ.1 லட்சம் சிறுமி நேத்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
    • நேத்ராவின்  உயர் கல்வி செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • ஜம்மு-காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலால் வீரமரணமடைந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
  • கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 125-வது பிறந்தநாள்  5-6-2020 அன்று அனுசரிக்கப்பட்டது.  கூ.தக.  :இவர் 5 ஜீன் 1896 ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.    பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
    • 1947 இல் பாகிஸ்தான் உருவானபோது அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத்தில் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு “காயிதே மில்லத் நாகைப்பட்டினம் மாவட்டம்” என்று பெயர் சூட்டியது. பின்னர் 1996ல் அரசு பேருந்துக் கழகங்கள், மாவட்டங்களிலிருந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபின்னர் அதன் பெயர் நாகப்பட்டினம் மாவட்டம் என்று மாற்றப்பட்டு விட்டது. (நன்றி : விக்கிபீடியா)
  • சென்னையில் கொரானா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் அமைத்துள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடருங்கள்https://www.facebook.com/groups/tamilcurrentaffairs/

இந்தியா

  • ’நன்றி அம்மா’ (”Thank Mom") என்ற பெயரில் மரம் நடும் இயக்கத்தை மத்திய பிரதேச அரசு 5-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையை கணக்கிட, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா (Ig-ELISA) 'பரிசோதனையை, இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.நோயைக் கண்டறிய தற்போது, பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது. இது, ஒருவர் உடலில், தொற்று ஏற்பட்ட ஏழு - எட்டு நாட்களில் தான், 'பாசிட்டிவ்' எனக் காட்டும்.இதை விட, உடலில், 'ஆன்டிபாடி' அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிந்தால், நோய்க்கான வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டும் இன்றி, யாருக்கெல்லாம் அறிகுறி இன்றி கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அறிகுறிகள் இல்லாமலேயே குணமடைந்தனர் என்பதையும் கண்டறிந்து விடலாம். இதற்காக தற்போது, 'இம்யூனோகுளோபுலின் ஜி எலிசா' பரிசோதனையை, மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
  • "நகர் வன்” திட்டம் (‘Nagar Van’ scheme) என்ற பெயரில்  இந்தியாவில் 200 நகர்புற காடுகளை (Urban forests) உருவாக்குவதற்கான திட்டத்தை  மத்திய அரசு, உலக சுற்றுசூழல் தினம் 2020 கொண்டாட்டத்தின் போது அறிவித்துள்ளது.
  • தாய்மை அடையும் வயது குறித்து ஆராய 10 உறுப்பினர் கொண்ட சிறப்பு  குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயா ஜேட்லி தலைமையில்  மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் பெண்கள் தாய்மை அடையும் வயது, பிரசவ காலத்தில் கர்ப்பிணிகள் மரணம் அடைவதை குறைப்பதற்கான வழிமுறைகள், ஊட்டச்சத்து அளவை அதிகரித்தல் ஆகியவற்றை குறித்து பெண்கள் நலனை மேம்படுத்த  வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
  • "மேரா விதான்" (MeraVetan) என்ற பெயரில் அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கான மொபைல் செயலி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச ஆளுநர் கிரீஸ் மர்மு (Girish Chandra Murmu) வெளியிட்டுள்ளார்.
  • விவசாயிகள் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை களையும் வகையில், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை செயல்படுத்த வழிவகுக்கும் இரு அவசர சட்டங்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 5-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 , விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 ; ஆகிய அந்த இரு அவசர சட்டங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
    • வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், 2020 மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தடைகளின்றி விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.
    • மொத்த மற்றும் சில்லறை வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோருடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம், 2020 கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவது தடுக்கப்படும். இந்த சீா்திருத்தத்தின்படி, வேளாண் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • கேரள மாநிலம் மலப்புரம் அருகே கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தினுள் வெடிமருந்து வைத்து கொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • புகழ்பெற்ற ‘பிரிட்டிஷ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கலை அகதமியின்’ (British Academy of Film and Television Arts(BAFTA)) தலைமைப் பொறுப்பிற்கு இந்திய வம்சாவளி ’கிரிஷ்னேண்டு மஜூம்தார்’ (Krishnendu Majumdar) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் இவராவர்.

பொருளாதாரம்

  • கடன் செலுத்த தவறியவர்களுக்கு சலுகையாக, திவால் சட்டத்தை திருத்தி மத்திய அரசு அவசர சட்டம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா தொடர்பாக ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25 அல்லது அதற்கு பிறகு ஓராண்டுவரை கடனை திருப்பி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது.

நியமனங்கள்

  • உலக வர்த்தக நிறுவனத்திற்கான இந்தியாவிற்கான நிரந்தர திட்டத்தின் தூதுவராக(Ambassador to the Permanent Mission for India (PMI) at the WTO in Geneva) ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர நவ்நீத் ( Brajendra Navnit) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான மூத்த ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank) பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) - ஜீன் 7 | மையக்கருத்து 2020 - உணவு பாதுகாப்பு, அனைவரின் கடமை (Food Safety, Everyone’s Business)
    • கூ.தக. : ஐக்கிய நாடுகளவையின் உலக உணவு திட்டம் (World Food Programme) 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ளது.
  • உலக பூச்சிகள் தினம் (World Pest Day) - ஜீன் 6
  • ஐ.நா. ரஷிய மொழி தினம் - ஜீன் 6
  • சட்டத்திற்கு புறம்பான மீன்பிடித்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing ) - ஜீன் 5
  • உலக சுற்றுசூழல் தினம் ( World Environment Day) ஜூன் 5 | மையக்கருத்து 2020- இயற்கைக்கான நேரம் ( 'Time for Nature')

அறிவியல் & தொழில்நுட்பம்

  • "சோடார்"( ‘Sodar’) என்ற பெயரில் சமூக இடைவெளியை (Social distancing) பேணுவதற்கான மொபைல் செயலியை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • "சுமேரு பாக்ஸ்" (SUMERU-PACS) என்ற பெயரில் தனிநபர் பாதுகாப்பு உபகரண உடை ( Personal Protective Equipment (PPE)) அணிவோர் வியர்வை பிரச்சனை இன்றி இலகுவாக உணர்வதற்கான கருவியை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( Defence Research Development Organisation (DRDO)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ( Asian Football Confederation(AFC) ) ஆசிய பெண்கள் கால்பந்து கோப்பை போட்டி 2022  (AFC Women’s Asian Cup 2022)   இந்தியாவில் நடக்கவுள்ளது.  கடைசியாக 1980 ஆம் ஆண்டில் இந்தியாவில் (கோழிக்கோட்டில்) இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share:

TNPSC Current Affairs 4,5 June 2020

TNPSC Current Affairs 4,5 June 2020

தமிழ்நாடு

  • தமிழக தலைமைச் செயலர் திரு K சண்முகம் அவர்களுக்கு  மூன்று மாதம் (1 ஆகஸ்டு 2020 முதல் 31 அக்டோபர் 2020) பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம் : ‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேசிய அளவில் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், அவை சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதன் தரத்தை நிர்ணயித்து, பட்டியலிடுகிறது.
  • அகஸ்தியன், கடுகு என்கிற புனைப்பெயா்களில் எழுதிய பிரபல நகைச்சுவை எழுத்தாளா் பி.எஸ்.ரங்கநாதன் (88) 2-6-2020 அன்று அமெரிக்காவில் உள்ள நியூஜொ்சியில் காலமானாா்.இவரது சொந்த ஊா் செங்கல்பட்டு. கணினி மீது ஆா்வம் கொண்ட இவா், எழுத்துருக்களை உருவாக்கி அதற்கு கதைகளின் கதாபாத்திரப் பெயா்களையே சூட்டினாா்.
  • முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 25% படுக்கைகளை காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ15000 மட்டுமே வசூலிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இந்தியா

  • ’இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித  உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்’  எனும் பெருமையை கேரளா பெற்றுள்ளது.  அம்மாநிலத்தில்  பாரத் மின்னணு நிறுவனத்தின் உதவியுடன் அமலாக்கப்படும் ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வர்க்’ (Kerala Fiber Optic Network(K-FON) ) திட்டத்தின் மூலம் டிசம்பர் 2020 க்குள் அனைத்து குடிமக்களுக்கும் இணைய சேவை உறுதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'விமல் ஜீல்கா குழு’ (Bimal Julka Committee) : திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக விமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 2-6-2020 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
  • பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் இறுதி தவணையாக ரூ.500 செலுத்தும் பணிகள் 5-6-2020 அன்று முதல் தொடங்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் விதமாக, பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாா்ச் 26-ஆம் தேதியன்று அறிவித்தன் படி இந்த தொகை வழங்கப்படுகிறது.
  • கரோனா பொது முடக்க காலத்தில் விசா விதிமுறைகளை மீறி இந்தியாவுக்குள் தங்கியிருந்த வெளிநாடுகளைச் சோ்ந்த 2,550 தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டவா்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரே சமயத்தில் இத்தனை பேரை இந்தியா கருப்புப் பட்டியலில் வைப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ரஷியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்பட 40 நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
  • ”துலிப்” (TULIP - The Urban Learning Internship Programme) என்ற பெயரில் புதிதாக தொழிற்கல்வி  பயின்ற பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு  ‘ஸ்மார்ட் சிட்டி’  திட்டங்களில்  ‘இண்டர்ன்ஷிப்’ எனும் உள்ளிருப்புப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,  அனைத்திந்திய தொழிற்கல்வி கவுண்சில் ( All India Council for Technical Education (AICTE)) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
  • ’ஸ்வதேஷ்’ (Skilled Workers Arrival Database for Employment Support(SWADES)) என்ற பெயரில், வேலை வாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்கள் தரவு தளம் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் (Vande Bharat Mission)  கீழ் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், மத்திய உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது. 
    • கூ.தக. : வந்தே பாரத் திட்டம் என்பது, கொரோனாவையொட்டி, சர்வதேச ஊரடங்கினால், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை விமானங்களின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டமாகும்.

வெளிநாட்டு உறவுகள்

  • உலக தடுப்பூசி கூடுகையில் ( மெய்நிகர்) (Global Vaccine Summit ) பிரதமர் மோடி அவர்கள் 4-6-2020 அன்று கலந்து கொண்டார்கள். இங்கிலாந்து நாட்டினால் கூட்டப்பட்ட இந்த கூடுகையில், இந்தியாவின் சார்பாக ‘உலக தடுப்பூசி கூட்டமைப்பு அமைப்பிற்கு’ (GAVI - Global Alliance for Vaccines and Immunization) 15 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமாா் ரூ.113.13 கோடி)  வழங்குவதாக இந்தியாவின் சார்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ’GAVI’ எனப்படும் உலக தடுப்பூசி கூட்டமைப்பு  2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
  • இந்தியா, ஆஸ்திரேலியாவிலுள்ள ராணுவப் படைத்தளங்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் 4-6-2020 அன்று கையெழுத்தானது. இதுபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூா் ஆகிய நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும் என பார்க்கப்படுகிறது.
    • இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு முதன்முறையாக மெய்நிகர் மாநாடாக 4-6-2020 அன்று நடைபெற்றது.இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து பொது சீர்திருத்தங்கள், பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பம் தொடர்பான இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. 
  • இந்தியாவுக்கு நன்கொடையாக 100 வென்டிலேட்டர்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

விருதுகள்

  • இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே (Indian writer Kritika Pandey) ஆசியாவிற்கான காமன்வெல்த் சிறு கதை  பரிசை (Asia in 2020 Commonwealth short story prize) அவரது  “The Great Indian Tee and Snakes” என்ற சிறுகதைக்காக வென்றுள்ளார்.

நியமனங்கள்

  • இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக (Confederation of Indian Industry (CII)) கோட்டக் மகிந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் 3-6-2020 அன்று  பொறுப்பேற்றாா்.
  • பின்லாந்துக்கான இந்திய தூதராக ரவீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) உலக வங்கியின்  செயல் இயக்குநருக்கான மூத்த   ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank)  நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய தினங்கள்

  • உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) - ஜீன் 3
  • சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் (International Sex Workers Day) - ஜீன் 2

அறிவியல் & தொழில்நுட்பம்

  • சரிகம இந்தியா நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் சா்வதேச அளவிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஃபேஸ்புக் பயனாளா்கள் தாங்கள் இடும் பதிவுகளில் பல்வேறு தரப்பட்ட இசையையும் பாடல்களையும் இணைக்க முடியும். சரிகம செயலியில் 25 இந்திய மொழிகளைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. திரையிசைப் பாடல்கள் முதல் பக்திப் பாடல்கள் வரை பலதரப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language