Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Current Affairs for TNPSC Exams 11-12 July 2020

தமிழ்நாடு

  • தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (‘Paul Harris Fellow’) என்ற கவுரவத்தை வழங்கி அமெரிக்காவின் சிகாகோ நகரின் சர்வதேச ரோட்டரி அமைப்பு சிறப்பித்துள்ளது.

இந்தியா

  • இந்தியாவின் முதல் மாநில அளவிலான ‘இ-லோக் அதாலத்’ (E-Lok Adalat’) சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்தினால் 11-07-2020 அன்று நடத்தப்பட்டது. இதனை சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராமசந்திர மேனன் தொடங்கி வைத்தார்.
  • கேமிரா மூலம் நடத்தப்படும், உலகின் மிகப் பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாக, அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2018 கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2,967 புலிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்குப்படி, உலகளவில் 75% புலிகள் இந்தியாவி்ல்தான் உள்ளன. புலிகள் எண்ணிக்கையை 2 மடங்காக அதிகரிக்கும் தீர்மானத்தையும், இந்தியா ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது.

வெளிநாட்டு உறவுகள்

  • 2019 - 2020 ஆம் நிதியாண்டில் இங்கிலாந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வெளிநாட்டு முதலீடு (Foreign Direct Investment (FDI)) செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 2,3,4 மற்றும் ஐந்தாம் இடங்களை முறையே ஜெர்மனி , பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகளும் உள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

  • கோவிட்-19 நோய்ப் பரவலினால் உலகளவில் ஏற்பட்டுள்ள தயார் நிலை மற்றும் எதிர்கொள்ளல் குறித்து ஆராய்வதற்காக ஹெலன் எலிசபத் கிளார்க் (Helen Elizabeth Clark) (முன்னாள் நியூசிலாந்து பிரதமர்) மற்றும் எல்லன் ஜான்சன் சிர்லீஃப் (Ellen Johnson Sirleaf) (முன்னாள் லிபேரியா அதிபர்) தலைமையிலான குழுவை ( (Independent Panel for Pandemic Preparedness and Response (IPPR)) ) உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) 9-7-2020 அன்று அமைத்துள்ளது.
  • சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
    • 1965-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது .

பொருளாதாரம்

  • ”பரஸ்பர நிதி” (மியூச்சுவல் பண்ட் / mutual fund) நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்கான 20 நபர் குழுவை உஷா தோரத் ( Usha Thorat ) தலைமையில் செபி ( Securities and Exchange Board of India (SEBI) ) அமைப்பு அமைத்துள்ளது.

 

முக்கிய தினங்கள்

  • தேசிய மீன் பண்ணையாளர்கள் தினம் (National Fish Farmers Day) - ஜீலை 10
    • கூ.தக . : 2019 ஆம் ஆண்டின் ஐ.நா. வின் வேளாண் மற்றும் உணவு அமைப்பின் GLOBEFISH அறிக்கையின் படி, உலகளவில் மீன்வளர்ப்பு சார் தயாரிப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்திலுள்ளது.
  • உலக மக்கள் தொகை தினம் (World Population Day) - ஜீலை 11 | மையக்கருத்து 2020 - வீட்டில் அமைதி : கோவிட்-19 காலக்கட்டத்தில் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாப்போம். (Peace in the Home: Safeguarding the Health and Rights of Women and Girls- Even During COVID-19)

விளையாட்டுகள்

  • ஹாக்கி இந்தியா (Hockey India(HI)) அமைப்பின் தலைவராக மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திர நிங்கோம்பாம் (Gyanendro Ningombam) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் 2022 வரையில் இந்த பதவியை வகிப்பார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography’ என்ற பெயரில் 14 வது தலாய் லாமாவின் வாழ்க்கை வரலாற்றை டென்சிங் கெய்செ டெதோங் (Tenzin Geyche Tethong) என்பவர் எழுதியுள்ளார்.
Share:

TNPSC Current Affairs 9-10 July 2020

தமிழ்நாடு

  • ஓய்வு பெற்ற நீதிபதி தணிகாசலத்தை தலைவராகக் கொண்டு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்தின் செயல்பாட்டுக் காலம் 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த நிலையில், புதிய உறுப்பினா்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆணையத்தின் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் டி.பிச்சாண்டி, டி.என்.ராமநாதன், வி.சந்திரசேகரன் ஆகியோா் உள்பட ஆறு போ் நியமிக்கப்பட்டுள்ளனா். அலுவல் சாரா உறுப்பினா்களாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை இயக்குநரும் இருப்பாா்கள்.மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் ஆகிய பிரிவினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்கக் கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த ஆணையம் பரிசீலிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஆணையம் செயல்பாட்டில் இருக்கும்.
  • தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பாரை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 7-7-2020 அன்று மேலும் ஒரு குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருவதால் இந்த இடம் பழங்காலத்தில் ஈமக்காடாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதுமக்கள் தாழிகள், இரும்புத் தாதுக்கள், பழைமையான ஓடுகள், கற்காலக் கருவிகள், வளையங்கள் ஆகியன கண்டெடுக்கப்பட்டன. 

இந்தியா

  • "வேளாண் உட்கட்டமைப்பு நிதியம்” (Agriculture Infrastructure Fund) எனப்படும் நாடு தழுவிய திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை 8-7-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 
    • இந்த திட்டமானது, மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் சுயசார்பு இந்தியா தொகுப்பின் (AtmaNirbhar Bharat package) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படவுள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், விவசாய கடன்  சங்கங்கள் (Primary Agricultural Credit Societies (PACS)),  சந்தைப்படுத்துதல் கூட்டுறவு சங்கங்கள் (Marketing Cooperative Societies), விவசாய தயாரிப்பு நிறுவனங்கள் (Farmer Producers Organizations (FPOs)), சுய உதவி குழுக்கள் (Self Help Group (SHG)), விவசாயிகள் (Farmers), பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (Multipurpose Cooperative Societies),  வேளாண் தொழில்முனைவோர்,வேளாண் உட்கட்டமைப்பு வழங்குநர்கள் ( Aggregation Infrastructure Providers), மத்திய / மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் அரசு - தனியார் இணைந்து செயல்படுத்தும்  திட்டங்கள் ( Central/State agency or Local Body sponsored Public Private Partnership Project) ஆகியவற்றிற்கு  மொத்தம் 1 இலட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதிய திட்டத்தின் காலம் 10 ஆண்டுகளுக்கு- 2020-21 நிதியாண்டு முதல் 2029-30 நிதியாண்டு வரையாகும்.
    • இந்த திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும், இதில் நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ .10,000 கோடி, அடுத்த மூன்று நிதியாண்டில் ரூ .30,000 கோடி அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
    • திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு மானிய வட்டி விகிதம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 3 சதவீதமாக இருக்கும். ஆண்டுக்கு 3 சதவீதம். 3 சதவீத வட்டி விகிதம் ரூ .2 கோடி வரை கடனுக்கு பொருந்தும்.
  • இந்தியாவின் முதல் மாநிலமாக, அரசுக்கு சொந்தமான நிலங்களை விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களின் உதவியுடன் கண்காணிக்கும் ”Bhubaneswar Land Use Intelligence System (BLUIS)” எனும் முன்னோடி திட்டத்தை ஒடிஷா மாநில அரசு 8-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • இ-சஞ்சீவனி இணையதளம் ((eSanjeevani OPD)) பற்றி : கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் மத்திய அரசின் சுகாதார, குடும்பநல துறையின் www.esanjeevaniopd.in இணையதளம், செயலி வழி, ஆன்லைனில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் வழங்குகிறார்கள். இந்த 'இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்' கடந்த 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டமான, மத்திய பிரதேசத்தின் ரீவா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி 10-7-2020 அன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். இந்த ரீவா சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை தில்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிா்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
  • இந்தியாவிலுள்ள இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்உ தேசிய திறன் மேம்பாட்டு கழகம் ( National Skill Development Corporation (NSDC) ) மற்றும் மைக்ரோசாஃட் இந்தியா நிறுவனம் ( Microsoft India Private Limited ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூ.தக. :
  • 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (National Skill Development Corporation (NSDC)) தலைமையிடம் புது தில்லியிலுள்ளது. இதன் தலைவராக மணிஸ் குமார் உள்ளார்.
  • Microsoft India Private Limited இன் தலைமையிடம் தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது. இதன் தற்போதைய தலைவராக ஆனந்த் மகேஸ்வரி உள்ளார்.
  • இந்தியாவின் மிகப்பெரிய “வண்ணத்துப் பூச்சி” எனும் பெயரை “கோல்டன் பேர்டுவிங்” (Golden Birdwing (Troides aeacus)) எனும் பெயருடைய இமாலயப் பகுதியிலுள்ள வண்ணத்துப்பூச்சி வகை பெற்றுள்ளது. முன்னதாக (88 ஆண்டுகளாக) இந்தியாவின் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி வகையினம் என அறியப்பட்ட ‘சதர்ன் பேர்டுவிங்’ (Southern Birdwing (Troides minos)) வகையினம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • ”Yotta NM1 Data Center” என்ற பெயரிலான ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தரவு மையம் (Data Center) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 7-7-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த தரவு மையமானது மும்பையிலுள்ள பன்வல் தரவு மைய பூங்காவில் (Panvel data centre park) ஹிராநந்தனி குழுமத்தின் (Hiranandani Group ) மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • "பிரதமரின் அன்ன யோஜனா திட்டத்தின்" (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) மூலம் நவம்பர் மாதம்வரை, குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு, நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுவதற்கு மத்திய அமைச்சரவையில் 8-7-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்மூலம் 81 கோடி ஏழைகள் பலன் அடைவார்கள். இதற்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி செலவாகும்.
  • "கோவாக்சின்" எனப்படும் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர் - மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் .
    • கூ.தக : ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்தியன் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜி மையத்துடன் இணைந்து கொரோனாவிற்கு ‘கோவாக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதற்கான அடிப்படை சோதனைகள் எல்லாம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனிதர்களிடம் இந்தமருந்தை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதஇதற்கான பணி ஒடிசா மற்றும் ஐதராபாத் அரசு மருத்துவமனைகளில் 8-7-2020 அன்று தொடங்கியது.
  • ‘சேஷ்நாக்’ என்ற பெயரில்,இந்திய ரயில்வேத் துறை முதல் முறையாக நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை நாகபுரியில் இருந்து கோா்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது. தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாகபுரி கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச்செல்ல பயன்படும் சரக்குப் பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் உருவாக்கப்பட்டது.நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 காா்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன.

 வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தவுள்ளனர். 

சர்வதேச நிகழ்வுகள்

  • ’ஆபரேஷன் நரி வேட்டை’ என்ற பெயரிலான இரகசிய உளவு நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து அவர்களை கட்டாயமாக நாடு திரும்புவதற்கு வலியுறுத்துவதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசித்துவரும் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் சீனர்கள், விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இதன் மூலம் குறிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தட்டம்மை நோயை (measles and rubella) முற்றிலுமாக ஒழித்துள்ள முதல் தென் கிழக்கு ஆசிய நாடுகளாக மாலத்தீவு மற்றும் இலங்கை நாடுகள் உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் தட்டம்மையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இலக்கு 2023 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் ஆலைகளை முழுவதுமாக மூடுவதற்கு முடிவெடுத்துள்ள முதல் வளர்ந்த நாடு எனும் பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. ஜெர்மனி அரசு வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலக்கரி மற்றும் அணு ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை முற்றிலுமாக ஒழிக்க முடிவெடுத்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காற்றில் மிதந்து மனிதா்களிடையே பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இருமல், தும்மல் ஆகியவற்றால் வெளிப்படும் நீா்த்துளிமங்கள் தரையில் படிந்து, அதனைத் தொடுவதால் மட்டுமே கரோனோ பரவி வருவதாக இதுவரை கூறி வந்த அந்த அமைப்பு, தற்போது முதல் முதலாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நியமனங்கள்

  • தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் ( National Company Law Appellate Tribunal(NCLAT)) பொறுப்பு தலைவராக செயல்பட்டு வரும் நீதிபதி பி.எல்.பட்டின் பதவிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 'அமேசானியா-1’ (‘Amazonia-1’) என்ற பெயரிலான பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (Indian Space Research Organisation (ISRO)) PSLV ராக்கெட்டின் மூலம் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஆகஸ்டு 2020 ல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
  • ”APSTAR-6D” என்ற பெயரிலான வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக் கோளை Long March-3B ராக்கெட்டின் மூலம் சீனா 9-7-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 

விளையாட்டுகள்

  • கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உள்பட விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் 117 நாள் இடைவெளிக்கு பின் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் தெற்கு இங்கிலாந்தின் சதாம்ப்டன் (Southampton) நகரிலுள்ள ரோஸ் பவுல் ( Rose Bowl ) எனுமிடத்தில் 8-7-2020 அன்று தொடங்கின.
  • 25 வருடங்களாக இந்தியத் தடகளத் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய பகதூர் சிங், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

 புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Mahaveer:The Soldier Who Never Died’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் - A.K. ஸ்ரீகுமார் (A.K. Srikumar), ரூபா ஸ்ரீகுமார் (Rupa Srikumar)
Share:

Current Affairs Tamil for TNPSC Exams 7-8 July 2020

தமிழ்நாடு

  • திருக்கோயில் தொலைக்காட்சி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட ‘திருக்கோயில்’ எனும் பெயரில் ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • "அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டம்” என்ற பெயரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • அத்திட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
    • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
    • இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். (நன்றி - தினமணி)
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி 6-7-2020 அன்று புதுச்சேரியில் காலமானார்.

இந்தியா

  • உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 ல் (Global Real Estate Transparency Index (GRETI)) இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. Jones Lang LaSalle Incorporated (JLL) மற்றும் LaSalle அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன். இந்த பட்டியல் இரு ஆண்டுகளுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஹஷாரிபாக்கிலுள்ள கெளரியா கர்மாவில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural research Institute(IARI)) புதிய நிர்வாகக் கட்டடத்திற்கு பாரதிய ஜன் சங்க் கட்சி நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி (Dr.Shyama Prasad Mukherjee) யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . (6-7-2020 அன்று 120 வது பிறந்த தின அனுசரிப்பின் ஒருபகுதியாக)
  • ”இன்ஃபார்ம்” (INFORM - Index For Risk Management) எனும் இடர் மேலாண்மைக்கான பட்டியலில் இந்தியா 31 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு (United Nations Office for the Coordination of Humanitarian Affairs (UN-OCHA)) அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • “நேகர் சம்மன் யோஜனா” (‘Nekar Samman Yojane’ / 'Weaver Samman Yojana') என்ற பெயரில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு 6-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
  • 100 சதவீத வீடுகளில் எல்.பி.ஜி வாயு இணைப்பை சாதித்துள்ள முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் 6-7-2020 அன்று அடைந்துள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்துடன்’ (Pradhan Mantri Ujjwala Yojana) ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசின் ‘ஹிமாச்சல் சுவிதா யோஜனா’ திட்டமும் பெரும் பங்காற்றியது.
கூ.தக. : பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம் (பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம்) பற்றி...
  • 1-5-2016 ல் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்களின் (adult woman) பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடும்பங்களில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்பது ஒரு முக்கியமான விதிமுறை.
  • இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது, எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.
  • இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிப்ரவரி 2018 ல் இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, ஆன்லைன் நல்வாழ்வு மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality ) குறித்த பயிற்சி அளிக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE) ) மற்றும் பேஸ்புக் (Facebook) இடையே 5-7-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • கே.எஸ்.ரெட்டி குழு (Dr K S Reddy Committee) : இந்தியாவில் மனித உரிமைகளின் மீது கோவிட் - 19 நோய்ப்பரவல் சூழலின் தாக்கம் பற்றி ஆராய கே.எஸ்.ரெட்டி தலைமையில் 11 உறுப்பினர் வல்லுநர் குழுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC) ) அமைத்துள்ளது.
  • இந்தியாவில் எம்.சி.ஏ., (Master of Computer Application -MCA) படிப்பு காலம், மூன்றாண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ”நிலையான வளர்ச்சி அறிக்கை 2020” (Sustainable Development Report 2020) ல் இந்தியா 117 வது இடத்தைப் பெற்றுள்ளது. ‘ நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளும் கோவிட்-19 ம்’ ( ‘The Sustainable Development Goals and Covid-19) என்ற தலைப்பில் Cambridge University Press வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ் மற்றூம் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
  • அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • ”இந்தியா குளோபல் வீக் 2020” (India Global Week 2020) இணையவழி மாநாடு : இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ”இந்தியா குளோபல் வீக்” என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு 9-11 ஜூலை 2020 தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.பிரிட்டனில் செயல்படும் இந்தியா- இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' எனும் இந்த பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது. முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ‘டேகிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தை (Dehing Patkai Wildlife Sanctuary) “தேசிய வனவிலங்கு பூங்கா” (National Park) வாக தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவின் உதவியுடன் நேபாள நாட்டில் கட்டப்பட்ட ”ஸ்ரீ சப்த்மாய் குருகுல சமஸ்கிருத பாடசாலை” (‘Shree Saptmai Gurukul Sanskrit Vidhyalaya) 6 ஜீலை 2020 அன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 5-7-2020 அன்று கையெழுத்திட்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘ஒஃபேக் 16’ (Ofek 16) என்ற புதிய உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல்  நாடு  ஷாவிட் (Shavit rocket) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு 6-7-2020 அன்று அமெரிக்கா அனுப்பிய கடிதத்ததில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
    • கூ.தக : 7 ஏப்ரல், 1948 ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ”நெக்லேரியா பவுலேரி” (Naegleria fowleri) என்ற மிக நுண்ணிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இங்கிலாந்து - இந்தியா வர்த்தக கவுண்சிலின் (UK India Business Council(UKIBC)) தலைமையேற்கும் முதலாவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் எனும் பெருமையை ஜெயந்த் கிருஷ்ணா (Jayant Krishna) பெற்றுள்ளார். இவர் 3-8-2020 முதல் அந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) உறுப்பினராக ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ (Startup Village) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ‘Re-think Foundation’ எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிஜோ கருவில்லா ஜார்ஜ் (Sijo Kuruvilla Georg) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக : மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) தலைவர் - ஹரேஷ் மிட்டல் (Harkesh Mittal )
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (International Financial Services Centre Authority(IFSCA)) முதல் தலைவராக இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் (Injeti Srinivas) 6-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக விலங்குவழிப் பரவும் நோய்கள் தினம் (”World Zoonoses Day 2020”) - ஜீலை 6
  • சரக்கு மற்றும் சேவை வரி தினம் (Goods and Service Tax(GST) day) - ஜீலை 1 (1-7-2017 முதல் ஜி.எஸ்.டி வரி முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ”செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”) என்ற பெயரில் சீன செயலியான “கேம் ஸ்கேனருக்கு” மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் செயலியை மேற்கு வங்க மாநில அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Getting Competitive: A Practitioner’s Guide for India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - RC பார்கவா (R C Bhargava)
  • ‘Overdraft: Saving the Indian Saver’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உர்ஜித் பட்டேல் (ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்)
Share:

TNPSC Tamil Current Affairs 5-6 July 2020

தமிழ்நாடு

  • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் (Friends of Police ) போலீஸ் என்ற தன்னார்வல அமைப்பிற்கு காவல்துறை தடை விதித்தது.
    • கூ.தக. : கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த Friends of Police அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கமே போலீசாரின் அதிகாரங்களை மக்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தான். 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் விரிவடைந்தது.
  • மதுரையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது : மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • கீழடி அகழாய்வில் எடை கற்கள் கண்டுபிடிப்பு : சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 6 ம் கட்ட அகழாய்வில் 4-7-2020 அன்றூ எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத்துக்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்தியா

  • "விரிக்‌ஷாரோபன் திட்டம்- 2020” (‘Mission Vriksharopan-2020’) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 25 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 5-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • உலகிலேயே மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையமான சா்தால் படேல் கோவிட் கோ் சென்டரை ( Sardar Patel Covid Care Centre and Hospital (SPCCCH) ) தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் 5-7-2020 அன்று திறந்து வைத்தாா்.
    • தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்ற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்தோ திபேத் எல்லை போலீஸ் படை (Indo-Tibetan Border Police (ITBP) ) அமைத்துள்ளது.
  • "நிசர்கா புயல்" (Cyclonic Storm “NISARGA” ) - கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைத் தாக்கிய புயல்.
  • இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா ஒரு தமிழர்.  இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
    • இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. (நன்றி : தினமலர்)

பொருளாதாரம்

  • உலக வங்கியின் நாடுகள் மற்றும் கடன் குழுக்களில் வகைப்பாடு 2021 ல் இந்தியாவின் நிலை (India in World Bank Country and Lending Groups 2021)
    • 1 ஜீலை 2020 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருவாய் அடிப்படையிலான ( GNI per capita) உலக நாடுகளின் வகைப்பாட்டு பட்டியல் 2021 ல், இந்தியா கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக (LOWER-MIDDLE INCOME ECONOMY) ( $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita ) கொண்ட நாடுகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே வகைப்பாட்டில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிடத்தக்க மாற்றமாக , நேபாளம் குறைந்த வருவாய் பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • இலங்கை உயர் நடுத்தர வருவாய் நாடு அந்தஸ்திலிருந்து கீழ் நடுத்தர வருவாய் நாடாக இறங்கியுள்ளது.
கூ.தக. : உலக வங்கி நாடுகளின் பொருளாதார வகைப்பாட்டிற்கான அளவீடு (2019 ஆம் ஆண்டின் படி)
  • குறைந்த -வருவாய் பொருளாதாரம் (low-income economies) - $1,035 டாலருக்கு குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • கீழ் - நடுத்தர -வருவாய் பொருளாதாரம் (lower middle-income economies) - $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்-நடுத்தர - வருவாய் பொருளாதாரம் ( upper middle-income economies) -$4,046 முதல் $12,535 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்- வருவாய் பொருளாதாரம் ( upper income economies) - $12,535 டாலருக்கு அதிகமான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )

முக்கிய தினங்கள்

  • சர்வதேச கூட்டுறவு தினம் 2020 (International Day of Cooperatives) - ஜீலை 4 (ஜீலை மாதத்தின் முதல் சனிக்கிழமை) | மையக்கருத்து - பருவநிலை மாற்றத்திற்கான கூட்டுறவுகள் ( Cooperatives For Climate Action )

விளையாட்டுகள்

  • ”பிட் ஹே டு கிட் ஹே இந்தியா” (Fit Hai to Hit Hai India) என்ற பெயரில் ‘பிட் இந்தியா திட்டத்தின்’ கீழான பிரச்சாரத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ ஆகியோர் இணைந்து 3-7-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், இந்த நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணரச் செய்வதாகும்.
  • ”டாப்ஸ்” (Target Olympic Podium Scheme (TOPS)) என்ற பெயரில் 2024 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெறவுள்ள மற்றும் 2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்தியாவின் இளம் தடகள வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சக இணையமைச்சர் கிரண் ரிஜீ (Kiren Rijiju) தெரிவித்துள்ளார்.
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language