Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 21-22 June 2020

TNPSC Current Affairs 21-22 June 2020

தமிழ்நாடு

  • தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் குழு : நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) முதன்மை செயல் அலுவலர் அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் கூகிள் , மைக்ரோசாஃப்ட் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
  • ”பிரதம மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான சுய சார்பு நிதி திட்டத்தினை ( Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) அமல்படுத்துவதற்கான வங்கியாக இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI) ) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை அமைச்சகம் மற்றும் அவ்வங்கியிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கூ.தக. : நாடெங்கிலுமுல்ள 50 இல்டசம் தெருவோர வியாபாரிகள் பயனடைவதற்கான ”PM SVANidhi” திட்டமானது 1 ஜீன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஓராண்டில் மாதத்தவணையாக திருப்பிச் செலுத்துவதற்கான ரூ.10,000/- கடனுதவியைப் பெறலாம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
    • நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு ஏற்பது வழக்கமாக உள்ளது.கவுன்சிலின் 15 உறுப்பு நாட்டுப் பெயா்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டம் - முக்கிய தகவல்கள்:
    • புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி செலவிலான ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 20 ஜீன் 2020 அன்று பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் பொதுப்பணிகளின் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமாகும்.
    • 125 நாட்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 25 வகையான வேலைகள் , புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ரூ.1709 கோடி (200 மில்லியன் யூரோக்கள்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் வளர்ச்சி முகமை (French Development Agency) மற்றும் இந்திய அரசிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-ஆவது இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி , (சென்னையைச் சேர்ந்த) சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச யோகா தினம் (International Yoga Day) - ஜீன் 21 | மையக்கருத்து(2020) - ஆரோக்கியத்திற்கான யோகா - வீட்டில் யோகா (Yoga for Health- Yoga at Home)
    • கூ.தக. : சர்வதேச யோகா தினம் ஐ.நா. பொது சபையில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி (ஜீன் 21) 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நீர்நிலையியல் தினம் (World Hydrography Day) - ஜீன் 21
  • தந்தையர் தினம் (Fathers Day) 2020 - ஜீன் 21 (ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் (Solar Eclipse) 21-06-2020 அன்று நிகழ்ந்தது. இவ்வாண்டிற்கான அடுத்த சூரிய கிரஹணம் 14-12-2020 அன்று நடைபெறும்.
    • கூ.தக. : சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.
Share:

TNPSC Current Affairs 19,20 June 2020

TNPSC Current Affairs 19,20  June 2020

தமிழ்நாடு

  • வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” 2020 : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

  • 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 இலட்சம் கோடி) சந்தை மதிப்பை பெற்ற முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” (Reliance Industries Limited (RIL)) 19-6-2020 அன்று அடைந்துள்ளது.
  • "சத்தியபாமா” (‘Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement (SATYABHAMA)’) என்ற பெயரில் இணையதள சேவை மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி, சுரங்க துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும்.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை (I-Lab (Infectious disease diagnostic lab)) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 18-6-2020 அன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று  அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • கரிப் கல்யாண் ரோஜ்கார் ( Garib Kalyan Rojgar Abhiyaan) என்ற பெயரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி ஜீன் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக்கான உயர் நிலைக் கூட்டம் காணொலி மூலம் 18 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதற்கு தலைமை தாங்கினார்.
  • 75 வது ஐக்கிய நாடுகளவை பொதுச் சபையின் தலைவராக (75th United Nations(UN) General Assembly) துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர் (69) (Volkan Bozkir) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர். இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் 178 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15, 2020 அன்று துவங்கும் வருடாந்திர அமர்வில் வோல்கன் போஸ்கிர் தலைமையேற்பார்.
    • கூ.தக. : இதற்கு முன்னர் (2019 ஆம் ஆண்டில்) ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை நைஜீரியாவைச் சேர்ந்த டிஜ்ஜானி முகமது பாண்டே(Tijjani Muhammad-Bande) வகித்து வந்தார்.
  • கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் பிரதமராக குபாதேக் போரோனோவ் (Kubatbek Boronov) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation -EPFO) இன் ஊதிய தரவுகளின்படி, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் 28.6% அதிகரித்து 78.58 லட்சமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-20 ஆம் நிதியாண்டில் இது 61.12 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(National Institute of Public Finance and Policy (NIPFP)) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவர் இந்த பதவியில் நான்காண்டுகளுக்கு இருப்பார்.

முக்கிய தினங்கள்

  • நாடுகளுக்கிடையே மோதலின் போது பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) - ஜூன் 19
  • ஐ.நா. உலக அகதிகள் தினம் (World Refugee Day) - ஜீன் 20 | மையக்கருத்து 2020 - ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகின்றன (Every Action Counts)
  • உலக அரிவாள்செல் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease day) தினம் - ஜீன் 19
  • கர்நாட அரசு ‘ஜீன் 18’ ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day) - ஜீன் 18

விளையாட்டுகள்

  • 4 வது ஆசிய இளையோர் மாற்றுத்திறன் கொண்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Para Games ) 1-10 டிசம்பர் 2021 தினங்களில் பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “A Burning” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர் - மேலா மஜீம்தார் (Megha Majumdar)

Share:

TNPSC Current Affairs 16-18 June 2020

TNPSC Current Affairs 16-18 June 2020

தமிழ்நாடு

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
  • தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை மாண்பு மிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைப்பதற்கும், நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும், அல்லாள இளைய நாயகருக்கு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைப்பதற்கும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும் , எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்குமான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-6-2020 அன்று நாட்டினார்கள்.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட ”சிவகளையில்” நடைபெற்றுவரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் 15-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டன.

இந்தியா

  • உலக போட்டி குறியீடு 2020 (World Competitiveness Index) ல் இந்தியா 43 வது இடத்தைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் லஷானே ( Lausanne ) நகரிலுள்ள மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (Institute for Management Development (IMD)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தாக்கத்தை எதிர்த்து போராடுவதில் உதவும் வகையில் இந்தியாவிற்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 17-6-2020 அன்று அறிவித்துள்ளது.
    • கூ.தக.: 16 ஜனவரி 2016 ல் தொடங்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைமையிடம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது. இவ்வமைப்பில் தற்போது 102 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவின் முதல் வாயு பரிமாற்ற அமைப்பு (Indian Gas Exchange (IGX) ) 15-6-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை வாயுவை வர்த்தகர்கள் கொள்முதல் மற்றும் விற்பதற்கான டிஜிட்டல் சந்தையாக இருக்கும். மேலும் , ஏற்கனவே இருக்கும் ’இந்திய ஆற்றல் பரிமாற்ற அமைப்பின்’ (India Energy Exchange (IEX)) கீழ் இந்த புதிய அமைப்பு செயல்படும்.
  • அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 150 அணு ஆயுதங்களுடன் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Stockholm International Peace Research Institute (SIPRI)) மூலம் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனை குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • கூ.தக. : இந்த பட்டியலின் படி, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இந்தியாவை விட சீனா (360 அணு ஆயுதங்கள்) மற்றும் பாகிஸ்தான் (160அணு ஆயுதங்கள்) நாடுகள் அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) எனும் ஸ்டீராய்டு மாத்திரை உதவலாம் என பிரிட்டனைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council), 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை 17-6-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டன.ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
    • கூ.தக. :15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • நேபாள நாட்டிலுள்ள பசுபதிநாத் கோயில் வளாகத்தை (Pashupatinath temple) மேம்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவின் சார்பாக ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - நேபாள் இடையே 15-6-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கூ.தக. : இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள துலுங் லா பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
  • ’செயற்கை நுண்ணறிவிற்கான உலக கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence) அமைப்பின் நிறுவனர் உறுப்பினராக இந்தியா 15-6-2020 அன்று இணைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கஷகஸ்தான் நாட்டின் பிரதமர் முகமது கால்யி அபில்காஷியேவ் ( Mukhammedkalyi Abylgaziyev ) ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
  • “வெரிஃபைடு”(Verified) என்ற பெயரில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்பை இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் உதவியுடன் ஐக்கிய நாடுகளவை 21-5-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூன்று கருப்பொருட்கள் ( themes) வருமாறு,
    • அறிவியல் - உயிர்களைக் காப்பாற்ற; (science – to save lives)
    • ஒற்றுமை - உள்ளூர் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்க; (solidarity – to promote local and global cooperation)
    • தீர்வுகள் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை ஆதரிக்க.(solutions – to advocate support for impacted populations.)
  • பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீடு பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா (51 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீட்டுடன்) 9 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. உலக முதலீடுகள் அறிக்கை 2020 (UN-World Investment Report 2020) ன் படி, இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா (246 பில்லியன் டாலர்), சீனா (141 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூர் (92 பில்லியன் டாலர்) ஆகியவைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் ஐந்தாவது பொருளாதார மந்தத்தை கோவிட்-19 நெருக்கடி உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில், பொருளாதார மந்த நிலைகள் ஏற்பட்ட ஆண்டுகள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் வருமாறு,
    • 1958 - பருவ மழைப்பொழிவு பொய்த்து விவசாய உற்பத்தி வீழ்ச்சியினால் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை பிரச்சனை (balance of payments crisis)
    • 1966 - சீனாவுடன் போர் (1962) மற்றும் பாகிஸ்தானுடன் போர்(1965) மற்றும் வறட்சி (Drought)
    • 1973 - ஆற்றல் பிரச்சனை( Energy Crisis ) - OAPEC (Organisation of Arab Petroleum Exporting Countries) நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறைவினால் ஏற்பட்டது.
    • 1980: ஈரான் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் ஏற்பட்ட எண்ணெய் இறக்குமதி பிரச்சினை (Oil Shock)
  • 40 ஜி.எஸ்.டி. கவுண்சில் கூடுகை (காணொளி) 12-6-2020 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
    • கூ.தக. : ஜி.எஸ்.டி. கவுண்சில் (GST Council) 15 செப்டம்பர் 2016 ல் அரசியலமைப்புச் சட்டம் 279A பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது.
    • ஜி.எஸ்.டி வரி முறை 1 ஜீலை 2017 முதல் இந்தியா முழுவதும் (ஜம்மு காஷ்மீர் தவிர்த்து) அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் 7 ஜீலை 2017 ல் நிறைவேறியது.

முக்கிய தினங்கள்

  • உலக காற்று தினம் (Global Wind Day 2020) - ஜீன் 15
  • உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் (World Day to Combat Desertification and Drought) - ஜீன் 17 | மையக்கருத்து 2020 - உணவு, உணவளி, நாரிழை - நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு (Food, Feed Fibre-The links between consumption and land)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா ( Japan Aerospace Exploration Agency (JAXA)) உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது. இதன்படி, இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் எச்-3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
  • "கேப்டன் அர்ஜீன்” ( 'Captain Arjun - Always be Responsible and Just Use to be Nice) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ரோபோவை இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே மண்டலம் ( Central Railway zone ) அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுகள்
  • ’விளையாடு இந்தியா’ திட்டத்தின் (Khelo India Scheme) கீழ் ”கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள்” (Khelo India State Centres of Excellence) அருணாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, தெலுங்கானா மற்றும் மிஷோராம் ஆகிய எட்டு மாநிலங்களில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் முக்கிய நோக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க செய்வதாகும்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Klara and the Sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நோபல் பரிசு (2017) பெற்ற ஜப்பான் - பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகுரோ(Kazuo Ishiguro)
  • "Naoroji: Pioneer of Indian Nationalism" என்ற பெயரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ’தாதாபாய் நெளரோஜி’ (Dadabhai Naoroji) அவர்களின் வாழ்க்கை வரலாறை தின்யார் பட்டேல் (Dinyar Patel) எழுதியுள்ளார்.

Share:

Tamilnadu TN New Text Books Download Free Pdf | 1st Std to 12th Std New & Old Books Pdf


Tamil Nadu State Board New Syllabus Books 1st Class to 12th Class pdf Free Download


6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here

TN New Syllabus Text Books PDF Collections

1st Std Books

2nd Std Books

3rd Std Books

Click Here
4th Std Books

5th Std Books

6th Std Books

7th Std Books

8th Std Books

9th Std Books

10th Std Books

11th Std Books

12th Std Tamil Medium Books

12th Std English Medium Books


Share:

TNPSC Current Affairs 13-15 June 2020

TNPSC Current Affairs 13-15 June 2020

இந்தியா

  • ”I-FLOWS” (Integrated Flood Warning System) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வெள்ள அபாய முறைமையை   மும்பை நகரில்    மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர். இதனை,  மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், பூனேவைச் சேர்ந்த ’இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்)’ ( Indian Institute of Tropical Meteorology (IITM))  உருவாக்கியுள்ளது.
  • “ஆரோக்கியபாத்” (Aarogyapath) என்ற பெயரில் ’தேசிய சுகாதார விநியோகச் சங்கிலி இணையதளத்தை (www.aarogyapath.in)’ (National Healthcare Supply Chain Portal)  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் வங்கிகளின் உரிமையாளர்களைப் பற்றி ஆராய பி.கே.மொகந்தி (P K Mohanty) தலைமையிலான பணிக்குழுவை ரிசர்வ் வங்கி 12-6-2020 அன்று அமைத்துள்ளது.
  • QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2021 (QS World University Rankings 2021) ல் முதல் 200 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து மூன்று பல்கலைக்கழகஙக்ள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவையாவன,
    • IIT மும்பை -  172 வது இடம் 
    • IISc பெங்களூரு - 185 வது இடம்
    • IIT டெல்லி - 193 வது இடம்
இப்பட்டியலில் உலகளவில் முதல் மூன்று இடங்களை முறையே  மாசாசூட் பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) (அமெரிக்கா), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) (அமெரிக்கா) மற்றும் Harvard University (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)  (அமெரிக்கா) ஆகியவை பெற்றுள்ளன.
  • ’ஷேகர் மித்ரா’ ( ‘Shakar Mitra’ ) என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டமானது  தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation  - NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • ”பால ஷ்ராமிக் வித்யா யோஜனா” (Bal Shramik Vidya Yojana) என்ற பெயரில், 8-18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும்  அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை    உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.   
  • பழங்குடி பள்ளி மாணவர் தங்குமிடங்களுக்கு   ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் ( ISO (International Organization for Standardization) 9001:2015 ) பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிஷா பெற்றுள்ளது.
  • ஆதார் அட்டை மூலம் ஆன்லைன் வழியாகவே சேமிப்பு வங்கி கணக்கை தொடங்குவதற்கான சேவையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக பாவித்துள்ள  புதிய வரைபடத்துக்கு  ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 13-6-2020 அன்று நேபாள  நாட்டின் நாடாளுமன்றத்தில்  நிறைவேறியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்ட , அமெரிக்காவின், மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக கேத்தி லூதர்ஸ் ( Kathy Lueders) எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, 2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம்  ‘ஓரியன் ராக்கெட்’  மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்

விருதுகள்

  • விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) (Dr Rattan Lal ) ”சா்வதேச உணவு விருது” (World Food Prize) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய அரசின்’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா பதக்கம்’ (“the Medal of the Order of Australia”) இந்திய இசை  (வீணை)  வல்லுனரும் ’கலாக்ருதி’(Kalakruthi) எனும் அமைப்பின் நிறுவனருமான சோபா சேகருக்கு ( Shobha Sekhar ) அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக முதியோர் நிந்தனை விழிப்புணர்வு தினம் ( World Elder Abuse Awareness Day   )   - ஜீன்  15 
  • உலக இரத்த தானம் செய்வோர் தினம் (World Blood Donor Day) - ஜீன் 14 | மையக்கருத்து 2020 - ‘பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது’ (Safe Blood Saves Lives)
  • சர்வதேச அல்ஃபினிஷம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) - ஜீன் 13

விளையாட்டுகள்

  • இந்தியாவின் மூத்த முதல் தர கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (100) 13-6-2020 அன்று தெற்கு மும்பை வால்கேஷ்வரில் முதுமை காரணமாக காலமானாா்.கடந்த 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சாா்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானாா். வலது கை பேட்ஸ்மேனான அவா், 1940-இல் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடினாா். மொத்தம் 277 ரன்களை குவித்தாா். அதில் அதிகபட்சம் 68 ஆகும். விஜய் மொ்ச்சண்ட் தலைமையிலான மும்பை அணி சாா்பில் 1941-இல் அறிமுகமாகி மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஆடினாா். வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.
  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (Federation Internationale de Football Association) 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 108 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியைல் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Lockdown Liaisons: Leaving and Other Stories” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஷோபா டே (Shobha De) 
Share:

TNPSC Current Affairs 10-12 June 2020

TNPSC Current Affairs 10-12 June 2020

தமிழ்நாடு

  • சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 11-6-2020 அன்று திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலுள்ள 1018  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து அரசாணையை தமிழ் வளர்ச்சித்துறை 10-6-2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன. இனி அதை விடுத்தது
    • உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் எக்மோர் என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும்.
  • இந்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான தமிழகத்தைச் சேரத முனைவர் ஏ. வைத்தியநாதன் 10-6-2020 அன்று காலமானார். இவர் , 1962 முதல் 72 வரை திட்டக் குழுவில் திட்டமிடுதலுக்கான பிரிவில் வைத்தியநாதன் செயலாற்றியுள்ளார்.
  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக)  ஜெ. அன்பழகன் காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி 10-6-2020 அன்று காலை காலமானார்.
  • 2019-2020 ஆம் கல்வியாண்டின் 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் 11ம் வகுப்பிற்கான நிலுவையில் உள்ள தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% வருகைப்பதிவுக்கு 20% கணக்கில் எடுத்துக் கொள்ளபடும் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • லாக்டவுண் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக https://tnskill.tn.gov.in என்ற இணைய தளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சம்பந்த பட்டோர் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ (Operation Desert Chase) என்ற பெயரில் வேவுபார்த்தலுக்கெதிரான நடவடிக்கையின் (anti-espionage operation) மூலமாக இந்திய இராணுவத்திலிருந்து தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்த முயன்ற இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை பணியாளர்களை இந்திய இராணுவ புலனாய்வுத் துறை அலுவல் இரகசிய சட்டம் 1923 (Official Secrets Act, 1923) இன் கீழ் கைது செய்துள்ளது. இந்த ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
  • ’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’ (Haldwani biodiversity park) உத்தரக்காண்ட் மாநிலத்தில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி (2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ”பாரத்மாலா திட்டத்தை” (Bharatmala Pariyojana) செயல்படுத்தி முடிப்பதற்கான கால இலக்கு 2021-2022 லிருந்து 2025-2026 ஆக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • கூ.தக. : பாரத்மாலா திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டமாகும். இந்த திட்டமானது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப், ஹரியானா செல்லும். பின்னர் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக சென்று சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் வழியாக இந்தியா- மியான்மர் எல்லை வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு ரூ.5.35 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
    • இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 38 ஆயிரம் கி.மீ கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2022ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐசிஆர்ஏ) தெரிவித்துள்ளது.
  • பசுக்களை பாதுகாப்பதற்கான ‘உத்தரப்பிரதேச பசுவதை தடுப்புச் சட்டத்தில்( Uttar Pradesh cow slaughter act, 1955’) உத்தரப்பிரதேச அரசு திருத்தங்களை (Cow Slaughter Prevention (Amendment) Ordinance, 2020) மேற்கொண்டுள்ளது. இதன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ5 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிருஷ்ணன் ரெட்டி (G Kishan Reddy) தலைமையில் 9 சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளடங்கிய புதிய குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
  • இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
  • தேசிய உயர்கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியல் 2020 11-6-2020 அன்று வெளியிடப்பட்டது.
    • இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்க தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில், வெவ்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வி நிறுவனங்களின் விவரம் வருமாறு,
பிரிவு : பொறியியல் கல்லுாரி
  1. சென்னை ஐ.ஐ.டி.,
  2. பெங்களூா் இந்திய அறிவியல் கழகமும்
  3. தில்லி ஐஐடி
பிரிவு: பல்கலைக்கழகங்கள்
1.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பிரிவு: மேலாண்மை
1.இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
2.இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா
பிரிவு: கல்லூரிகள்
1.மிரண்டா ஹவுஸ், புதுதில்லி
2.லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, புதுதில்லி
3.இந்து கல்லூரி, புதுதில்லி
4.புனித ஸ்டீபன் கல்லூரி, புதுதில்லி
5.பிரசிடென்சி கல்லூரி, சென்னை
பிரிவு: கட்டிடக்கலை
1.இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர்
2.இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே
3.இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு
பிரிவு: மருந்தியல்
1.ஜமியா ஹம்தர்த், புதுதில்லி
2.பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
3.தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மொஹாலி
பிரிவு: சட்டம்
1.இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, பெங்களூரு
2.தேசியசட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி
3.நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2020 ல் தமிழகக் கல்வி நிலையங்களின் நிலை
  • பல்கலைக்கழக தரவரிசையிலும் 7-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையிலும் 9-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-ஆவது இடத்தில் இருந்து 41-ஆவது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-இல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜா் பல்கலை., 69-இல் இருந்து 84-ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிா்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூா் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன
  • கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.
  • மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சென்னை மருத்துவ கல்லூரி 12-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 40 இடங்களில் 7 தனியாா் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள், தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi) என்ற பெயரில் நாடுதழுவிய நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme-UNDP) , ஹிந்துஸ்தான் கோகோகோலா நிறுவனம் (Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB)) மற்றும் ஹைதராபாத்தைச் சேரத ‘ரிசைக்கால்’ ("Recykal") ஆகியவை இணைந்து இந்தியாவில் அமல்படுத்தவுள்ளன.
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) ஒரு லட்சத்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி (NCERT) யும், ரோட்டரி இந்தியாவும் (Rotary India) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.இதன் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும்.மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவும், டென்மார்க்கும் மின்சக்தித்துறையில், சமநிலை, மறுபரிசீலனை, இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில், வலுவான, ஆழமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கா ரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 5-6-2020-ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியத் தரப்பில் மின்சக்தித் துறையின் செயலர் திரு சஞ்சீவ் நந்தன் சகாயும், டேனிஷ் தரப்பில் இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் திரு. ஃப்ரெட்டி ஸ்வேனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
    • நீண்டகால எரிசக்தி திட்டமிடல், தொலைநோக்கு, மின்சக்தி விநியோகத்தில் தளர்வு உள்ளிட்ட மின்சக்தித் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
  • லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் : கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை.
பின்னணி : லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா்.

பொருளாதாரம்

  • நடப்பு நிதியாண்டில் (2020-21) இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் 3.2 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வில் (ஜீன் 2020) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகவும், இந்த ஆண்டில் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறையும்பட்சத்தில் அடுத்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பிருப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருதுகள்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ வின் உயரிய விருதான ’நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம்’ (‘NASA Distinguished Public Service Medal’ ) இந்திய வம்சாவளி (கேரளத்தைச் சேர்ந்த) அமெரிக்க தொழிலதிபர் ரஞ்சித் குமாருக்கு ( Renjith Kumar ) வழங்கப்பட்டுள்ளது.
  • "ஆசியாவின் நோபல்" என்றழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது, கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்லாந்து தலைநகா் மணிலாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மகசேசே அறக்கட்டளை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகமே முடங்கிப் போயுள்ளதால் அந்த விருதுக்குரியவா்களைத் தோ்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விருது ரத்து செய்யப்படுவது, கடந்த 60 ஆண்டுகளில் இது முன்றாவது முறையாகும்.
    • கூ.தக. : 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் உட்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் - கீ ஆகியோரும் இந்த விருது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலக அங்கீகாரமளித்தல் தினம் (World Accreditation Day) - ஜீன் 9

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகில் முதல் முறையாக ஒரு கோள் உருவாவதை படம் பிடித்துள்ளதாக பிரான்சு நாட்டை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்கள், பூமியிலிருந்து 520 ஒளியாண்டு தொலைவில் உள்ள ‘ஆரிகா’ (Auriga) பால்வெளித் திரளிலுள்ள ‘AB Aurigae’என்ற நட்சத்திரத்தினருகில் ஒரு புதிய கோள் உருவாவதைப் European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்கள்.
  • கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை போலந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.
  • சூரியன் மற்றும் பூமியை ஒத்த, கெப்ளர் - 160 (Kepler-160) எனும் நட்சத்திரம் மற்றும் ”KOI-456” எனும் கோளையும் ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck Institute for Solar System Research (MPS) , University of Göttingen, அமெரிக்காவின் University of California, மற்றும் NASA வின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வின் படி, இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற ”பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள்” மற்றும் ”தெற்காசிய பிராந்தியங்களில்” தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.
  • "அனன்யா” (ANANYA) என்ற பெயரில் கிருமி நாசினி ஸ்பிரேயை (disinfectant spray)   பூனேவிலுள்ள  அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language