Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs Tamil 21-22 June 2020

TNPSC Current Affairs 21-22 June 2020

தமிழ்நாடு

  • தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் குழு : நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) முதன்மை செயல் அலுவலர் அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் கூகிள் , மைக்ரோசாஃப்ட் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
  • ”பிரதம மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான சுய சார்பு நிதி திட்டத்தினை ( Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) அமல்படுத்துவதற்கான வங்கியாக இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI) ) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை அமைச்சகம் மற்றும் அவ்வங்கியிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கூ.தக. : நாடெங்கிலுமுல்ள 50 இல்டசம் தெருவோர வியாபாரிகள் பயனடைவதற்கான ”PM SVANidhi” திட்டமானது 1 ஜீன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஓராண்டில் மாதத்தவணையாக திருப்பிச் செலுத்துவதற்கான ரூ.10,000/- கடனுதவியைப் பெறலாம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
    • நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு ஏற்பது வழக்கமாக உள்ளது.கவுன்சிலின் 15 உறுப்பு நாட்டுப் பெயா்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டம் - முக்கிய தகவல்கள்:
    • புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி செலவிலான ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 20 ஜீன் 2020 அன்று பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் பொதுப்பணிகளின் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமாகும்.
    • 125 நாட்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 25 வகையான வேலைகள் , புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ரூ.1709 கோடி (200 மில்லியன் யூரோக்கள்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் வளர்ச்சி முகமை (French Development Agency) மற்றும் இந்திய அரசிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-ஆவது இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி , (சென்னையைச் சேர்ந்த) சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச யோகா தினம் (International Yoga Day) - ஜீன் 21 | மையக்கருத்து(2020) - ஆரோக்கியத்திற்கான யோகா - வீட்டில் யோகா (Yoga for Health- Yoga at Home)
    • கூ.தக. : சர்வதேச யோகா தினம் ஐ.நா. பொது சபையில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி (ஜீன் 21) 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நீர்நிலையியல் தினம் (World Hydrography Day) - ஜீன் 21
  • தந்தையர் தினம் (Fathers Day) 2020 - ஜீன் 21 (ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் (Solar Eclipse) 21-06-2020 அன்று நிகழ்ந்தது. இவ்வாண்டிற்கான அடுத்த சூரிய கிரஹணம் 14-12-2020 அன்று நடைபெறும்.
    • கூ.தக. : சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.
Share:

TNPSC Current Affairs 19,20 June 2020

TNPSC Current Affairs 19,20  June 2020

தமிழ்நாடு

  • வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” 2020 : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

  • 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 இலட்சம் கோடி) சந்தை மதிப்பை பெற்ற முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” (Reliance Industries Limited (RIL)) 19-6-2020 அன்று அடைந்துள்ளது.
  • "சத்தியபாமா” (‘Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement (SATYABHAMA)’) என்ற பெயரில் இணையதள சேவை மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி, சுரங்க துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும்.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை (I-Lab (Infectious disease diagnostic lab)) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 18-6-2020 அன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று  அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • கரிப் கல்யாண் ரோஜ்கார் ( Garib Kalyan Rojgar Abhiyaan) என்ற பெயரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி ஜீன் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக்கான உயர் நிலைக் கூட்டம் காணொலி மூலம் 18 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதற்கு தலைமை தாங்கினார்.
  • 75 வது ஐக்கிய நாடுகளவை பொதுச் சபையின் தலைவராக (75th United Nations(UN) General Assembly) துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர் (69) (Volkan Bozkir) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர். இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் 178 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15, 2020 அன்று துவங்கும் வருடாந்திர அமர்வில் வோல்கன் போஸ்கிர் தலைமையேற்பார்.
    • கூ.தக. : இதற்கு முன்னர் (2019 ஆம் ஆண்டில்) ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை நைஜீரியாவைச் சேர்ந்த டிஜ்ஜானி முகமது பாண்டே(Tijjani Muhammad-Bande) வகித்து வந்தார்.
  • கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் பிரதமராக குபாதேக் போரோனோவ் (Kubatbek Boronov) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation -EPFO) இன் ஊதிய தரவுகளின்படி, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் 28.6% அதிகரித்து 78.58 லட்சமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-20 ஆம் நிதியாண்டில் இது 61.12 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(National Institute of Public Finance and Policy (NIPFP)) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவர் இந்த பதவியில் நான்காண்டுகளுக்கு இருப்பார்.

முக்கிய தினங்கள்

  • நாடுகளுக்கிடையே மோதலின் போது பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) - ஜூன் 19
  • ஐ.நா. உலக அகதிகள் தினம் (World Refugee Day) - ஜீன் 20 | மையக்கருத்து 2020 - ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகின்றன (Every Action Counts)
  • உலக அரிவாள்செல் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease day) தினம் - ஜீன் 19
  • கர்நாட அரசு ‘ஜீன் 18’ ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day) - ஜீன் 18

விளையாட்டுகள்

  • 4 வது ஆசிய இளையோர் மாற்றுத்திறன் கொண்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Para Games ) 1-10 டிசம்பர் 2021 தினங்களில் பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “A Burning” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர் - மேலா மஜீம்தார் (Megha Majumdar)

Share:

TNPSC Current Affairs 16-18 June 2020

TNPSC Current Affairs 16-18 June 2020

தமிழ்நாடு

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
  • தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை மாண்பு மிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைப்பதற்கும், நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும், அல்லாள இளைய நாயகருக்கு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைப்பதற்கும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும் , எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்குமான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-6-2020 அன்று நாட்டினார்கள்.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட ”சிவகளையில்” நடைபெற்றுவரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் 15-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டன.

இந்தியா

  • உலக போட்டி குறியீடு 2020 (World Competitiveness Index) ல் இந்தியா 43 வது இடத்தைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் லஷானே ( Lausanne ) நகரிலுள்ள மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (Institute for Management Development (IMD)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தாக்கத்தை எதிர்த்து போராடுவதில் உதவும் வகையில் இந்தியாவிற்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 17-6-2020 அன்று அறிவித்துள்ளது.
    • கூ.தக.: 16 ஜனவரி 2016 ல் தொடங்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைமையிடம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது. இவ்வமைப்பில் தற்போது 102 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவின் முதல் வாயு பரிமாற்ற அமைப்பு (Indian Gas Exchange (IGX) ) 15-6-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை வாயுவை வர்த்தகர்கள் கொள்முதல் மற்றும் விற்பதற்கான டிஜிட்டல் சந்தையாக இருக்கும். மேலும் , ஏற்கனவே இருக்கும் ’இந்திய ஆற்றல் பரிமாற்ற அமைப்பின்’ (India Energy Exchange (IEX)) கீழ் இந்த புதிய அமைப்பு செயல்படும்.
  • அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 150 அணு ஆயுதங்களுடன் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Stockholm International Peace Research Institute (SIPRI)) மூலம் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனை குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • கூ.தக. : இந்த பட்டியலின் படி, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இந்தியாவை விட சீனா (360 அணு ஆயுதங்கள்) மற்றும் பாகிஸ்தான் (160அணு ஆயுதங்கள்) நாடுகள் அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) எனும் ஸ்டீராய்டு மாத்திரை உதவலாம் என பிரிட்டனைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council), 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை 17-6-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டன.ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
    • கூ.தக. :15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • நேபாள நாட்டிலுள்ள பசுபதிநாத் கோயில் வளாகத்தை (Pashupatinath temple) மேம்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவின் சார்பாக ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - நேபாள் இடையே 15-6-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கூ.தக. : இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள துலுங் லா பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
  • ’செயற்கை நுண்ணறிவிற்கான உலக கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence) அமைப்பின் நிறுவனர் உறுப்பினராக இந்தியா 15-6-2020 அன்று இணைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கஷகஸ்தான் நாட்டின் பிரதமர் முகமது கால்யி அபில்காஷியேவ் ( Mukhammedkalyi Abylgaziyev ) ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
  • “வெரிஃபைடு”(Verified) என்ற பெயரில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்பை இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் உதவியுடன் ஐக்கிய நாடுகளவை 21-5-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூன்று கருப்பொருட்கள் ( themes) வருமாறு,
    • அறிவியல் - உயிர்களைக் காப்பாற்ற; (science – to save lives)
    • ஒற்றுமை - உள்ளூர் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்க; (solidarity – to promote local and global cooperation)
    • தீர்வுகள் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை ஆதரிக்க.(solutions – to advocate support for impacted populations.)
  • பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீடு பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா (51 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீட்டுடன்) 9 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. உலக முதலீடுகள் அறிக்கை 2020 (UN-World Investment Report 2020) ன் படி, இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா (246 பில்லியன் டாலர்), சீனா (141 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூர் (92 பில்லியன் டாலர்) ஆகியவைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் ஐந்தாவது பொருளாதார மந்தத்தை கோவிட்-19 நெருக்கடி உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில், பொருளாதார மந்த நிலைகள் ஏற்பட்ட ஆண்டுகள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் வருமாறு,
    • 1958 - பருவ மழைப்பொழிவு பொய்த்து விவசாய உற்பத்தி வீழ்ச்சியினால் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை பிரச்சனை (balance of payments crisis)
    • 1966 - சீனாவுடன் போர் (1962) மற்றும் பாகிஸ்தானுடன் போர்(1965) மற்றும் வறட்சி (Drought)
    • 1973 - ஆற்றல் பிரச்சனை( Energy Crisis ) - OAPEC (Organisation of Arab Petroleum Exporting Countries) நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறைவினால் ஏற்பட்டது.
    • 1980: ஈரான் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் ஏற்பட்ட எண்ணெய் இறக்குமதி பிரச்சினை (Oil Shock)
  • 40 ஜி.எஸ்.டி. கவுண்சில் கூடுகை (காணொளி) 12-6-2020 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
    • கூ.தக. : ஜி.எஸ்.டி. கவுண்சில் (GST Council) 15 செப்டம்பர் 2016 ல் அரசியலமைப்புச் சட்டம் 279A பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது.
    • ஜி.எஸ்.டி வரி முறை 1 ஜீலை 2017 முதல் இந்தியா முழுவதும் (ஜம்மு காஷ்மீர் தவிர்த்து) அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் 7 ஜீலை 2017 ல் நிறைவேறியது.

முக்கிய தினங்கள்

  • உலக காற்று தினம் (Global Wind Day 2020) - ஜீன் 15
  • உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் (World Day to Combat Desertification and Drought) - ஜீன் 17 | மையக்கருத்து 2020 - உணவு, உணவளி, நாரிழை - நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு (Food, Feed Fibre-The links between consumption and land)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா ( Japan Aerospace Exploration Agency (JAXA)) உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது. இதன்படி, இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் எச்-3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
  • "கேப்டன் அர்ஜீன்” ( 'Captain Arjun - Always be Responsible and Just Use to be Nice) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ரோபோவை இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே மண்டலம் ( Central Railway zone ) அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுகள்
  • ’விளையாடு இந்தியா’ திட்டத்தின் (Khelo India Scheme) கீழ் ”கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள்” (Khelo India State Centres of Excellence) அருணாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, தெலுங்கானா மற்றும் மிஷோராம் ஆகிய எட்டு மாநிலங்களில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் முக்கிய நோக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க செய்வதாகும்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Klara and the Sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நோபல் பரிசு (2017) பெற்ற ஜப்பான் - பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகுரோ(Kazuo Ishiguro)
  • "Naoroji: Pioneer of Indian Nationalism" என்ற பெயரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ’தாதாபாய் நெளரோஜி’ (Dadabhai Naoroji) அவர்களின் வாழ்க்கை வரலாறை தின்யார் பட்டேல் (Dinyar Patel) எழுதியுள்ளார்.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language