Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label July Current Affairs. Show all posts
Showing posts with label July Current Affairs. Show all posts

TNPSC Monthly Current Affairs July 2021 | நடப்பு நிகழ்வுகள் ஜீலை 2021

 TNPSC Monthly Current Affairs July 2021 | நடப்பு நிகழ்வுகள் ஜீலை 2021

Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

TNPSC Monthly Current affairs – July 2021

English

Tamil



Share:

TNPSC Monthly Current affairs – July 2020

நடப்பு நிகழ்வுகள் - ஜீலை 2020

Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

TNPSC Monthly Current affairs – July 2020

English

Tamil


Read Online


 

Share:

TNPSC Current Affairs 25 July 2020

இந்தியா

  • இந்தியாவில் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR) 2016-2018 ஆம் ஆண்டுகளில்  113 ஆக குறைந்துள்ளது (இந்த விகிதம் இந்தியாவில், 2014-2016 ஆம் ஆண்டில் 130 ஆகவும்,  2015-17-ம் ஆண்டில்   122 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது).  இந்திய பதிவாளர் ஜெனரலின் மாதிரி பதிவு முறைமை (Registrar General’s Sample Registration System (SRS)) இந்த தகவலை வழங்கியுள்ளது. 
கூ.தக. :
  • 2016-18 ஆண்டுகளில் தமிழகத்தின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio -MMR)  60 ஆக உள்ளது.
  • இந்தியாவிலேயே அதிக இறப்புகளுடன் (215 இறப்புகள்) அஸ்ஸாம் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநிலங்களிலும் 197 இறப்புகளுடன் இந்த மாநிலங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
  • பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்தில் 43 எண்ணிக்கையுடன் கடைசி இடத்தில் கேரளா உள்ளது.
  • 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய எம்.எம்.ஆரை 70 ஆகக் குறைப்பதே ஐ.நா-வின் குறிக்கோள்.
  • ”Ind-SAT” (Indian Scholastic Assessment Test) என்ற பெயரில், இந்தியாவில் படிக்க விரும்பும் வெளி நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாவது   நுழைவுத் தேர்வு 22-7-2020 அன்று ஆன்லைன் மூலம் தேசிய தேர்வு முகமையின் (National Testing Agency) மூலம் நடத்தப்பட்டது.
  • டிஜிட்டல் வங்கி முறைமைகளில் பயன்படுத்தப்படும் ‘கியூ.ஆர். குறியீடுகளைப்( QR (Quick Response) Code) பற்றி ஆராய தீபக் B பதக் (Deepak B. Phatak) தலைமையில் ரிசர்வ் வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.  இந்த அறிக்கையில் ,  ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக இந்திய அரசின்  Bharat QR மற்றும் UPI QR ஆகியவற்றை பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • கங்கை மற்றும் கோதாவரி நதிகளை தூய்மைப் படுத்துவதற்காக குறைந்த செலவிலான உயிரி-தொழிழ்நுட்பத்தை உருவாக்குவதற்காக இந்திய ஐ.ஐ.டி, கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இணைந்து செயல்படவுள்ளன. இந்த திட்டமானது  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  பயோடெக்னாலஜி துறையினால் அமல்படுத்தப்படும்.

நியமனங்கள்

  • உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச ஆளுநராக பதவியில் இருந்த லால்ஜி டாண்டன்  உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.
  • ’பிரிக்ஸ்’ வர்த்தக மற்றும் தொழில் அமைப்பின் (BRICS (Brazil, Russia, India, China and South Africa) Chamber of Commerce and Industry (CCI)) கவுரவ ஆலோசகராக (honorary advisor) இந்தியாவைச் சேர்ந்த ஷகில் சேத் (Sahil Seth) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2020 முதல் 2030 வரை இப்பதவியில் நீடிப்பார்.

முக்கிய தினங்கள்

  • “ஃபை தோராயமாக்க தினம்” (Pi approximation day) - ஜீலை 22

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “The Endgame” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஹீசைன் ஷெய்டி (Hussain Zaidi)
Share:

Current Affairs for TNPSC Exams 23 - 24 July 2020


தமிழ்நாடு

  • இந்தியாவின் இரண்டாவது பிளாஸ்மா வங்கியை, (தில்லிக்கு அடுத்தபடியாக) சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசு 22-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகா் முதல் நபராக பிளாஸ்மா தானம் அளித்தாா்.

இந்தியா

  • கக்ரபார் அணு மின் திட்டம் (Kakrapar Atomic Power Project) : குஜராத்தில் கட்டப்பட்ட , உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 700 மெகா வாட்   மின் உற்பத்தி திறன் கொண்ட கக்ரபர் அணுமின் திட்டத்தின் (Kakrapar Atomic Power Station) 3-வது உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
  • “பாரத்” (“Bharat” ) என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தானியங்கி டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய இராணுவத்தில், சீன எல்லையைக் கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ளன.
  • ஹெலிகாப்டரில் இருந்து டாங்கிகளை அழிக்கும் "துருவஸ்திரா ஏவுகணை" சோதனை வெற்றி : ”துருவஸ்திரா” ( “Dhruvastra” ) என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்தாக்குதல் “நாக்” ரக ஏவுகணையை (Anti Tank guided Nag Missile) மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) 15-16 ஜீலை 2020 தினங்களில் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
    • எதிரிகளின் ராணுவ டாங்கிகளை தாக்கி அழிக்கும் 3வது தலைமுறை ஏவுகணை அமைப்பான ஹெலினா, இந்திய ராணுவத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும், பகல் மற்றும் இரவிலும் தாக்குதல் நடத்த முடியும். தற்போது அதனை மேம்படுத்தி துருவஸ்திரா என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
    • இதனைக் கொண்டு எதிரிகளின் ராணுவ டாங்கிகள் மீது நேர் எதிராகவும், மேல் நோக்கியபடி இருந்தும் தாக்குதல் நடத்த முடியும். இந்த ஏவுகணை 500 மீட்டர் முதல் 7 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
  • ”விரிக்‌ஷாரோபன் அபியான்” (“Vriksharopan Abhiyan”) என்ற பெயரில் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டு பசுமைமயமாக்குவதற்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 23 ஜீலை 2020 அன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டமானது, மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் அமலாக்கம் செய்யப்படவுள்ளது.
  • பங்கு சந்தை மதிப்பின் படி,  ரூ.13 இலட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய இந்தியாவின் முதல் நிறுவனம்  எனும் பெருமையை  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) பெற்றுள்ளது.  இத்தகைய மதிப்பை எட்டிய உலகின் 48 வது நிறுவனமாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உருவாகியுள்ளது.
  • உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உருவாகியுள்ளார்.   ’ஃபோர்ப்ஸ்   (Forbes Real-Time Billionaires List)  நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
    • இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை முறையே அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஷோஸ் (Jeff Bezos) , பில்கேட்ஸ், பெர்னார்ட் அர்னால்டு மற்றும் மார்க் ஷக்கர்பர்க் ( Mark Zukerberg) ஆகியோர் பிடித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டாக உருவாக்குகின்றன. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன், இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழுவும் ஈடுபட்டுள்ளது.
    • கூ.தக. : தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க இந்தியாவில் ‘ RT-PCR (reverse transcription-polymerase chain reaction)’ முறை பின்பற்றப்படுகிறது. இதில் முடிவு வர சில மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.
  • மாலத்தீவு நாட்டின் தலைநகர் “மாலியில்” ‘அவசர மருத்துவ சேவைகள்’ வழங்குவதில் இந்தியாவின் சார்பில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 22 ஜீலை 2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • சர்வதேச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் (International Solar Alliance Framework Agreement)  87 வது உறுப்பினராக நிகராகுவா (Nicaragua )  நாடு இணைந்துள்ளது.
கூ.தக. : 
  • 2015 ஆம் ஆண்டில், பாரிஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டின் போது (United Nations Climate Change Conference, Paris -2015) பிரதமர் மோடி அவர்களினால் தொடங்கப்பட்டது.
  • இவ்வமைப்பின் தலைமையிடம் ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் உள்ளது.
  • தற்போதைய பொது இயக்குநராக (Director General) உபேந்திர திரிபாதி (Upendra Tripathy) உள்ளார்.
  • பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கும் ரஃபேல் போா் விமானத்தில் ஹேமா் ரக ஏவுகணைகளும் இணைத்து வாங்கப்படவுள்ளன. அவசரகால தேவையின் அடிப்படையில் இந்த ஏவுகணைகள் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளன.
    • நடுத்தர தொலைவு ஏவுகணையான ஹேமா், பிரான்ஸ் விமானப்படை மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணைகள் எத்தகைய பதுங்கு குழிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. மலைப்பாங்கான இடங்களிலும் இவை இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”டினாவென் - 1” (Tianwen-1) என்ற பெயரில், செவ்வாய் கிரக ஆய்வுக்கான  முதல் சுயாதீன ஆளில்லா விண்கலத்தை சீனா  23-7-2020 அன்று  தனது லாங் மார்ச் 5  ராக்கெட் மூலம்வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.இந்த விண்கலம் பிப்ரவரி  2021 மாதத்தில் செவ்வாய் கிரகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு 90 நாட்களுக்கு கிரகத்தை ஆராய ஒரு ரோவரை இறக்கி ஆய்வு நடத்தும்.
கூ.தக. : கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
  • மாலத்தீவு நாட்டின் ’மராதோ’ (Maradhoo) மற்றும் ‘ஹல்குதூ’ (Hulhudhoo) நகரங்களில் அருகாமை மீன் பதப்படுத்தல் நிலையங்களை (Neighborhood Fish Processing Plants) அமைப்பதற்காக இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 22-7-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • உலக வர்த்தக நிறுவனத்தின் (World Trade Organization) 25 வது பார்வையாளர் அந்தஸ்துடைய நாடாக ‘துர்க்மெனிஸ்தான்’ ( Turkmenistan ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : 1 ஜனவரி 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தில் 164 நாடுகள் உறுப்பினர்களாகவும், 25 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன.

விருதுகள்

  • இந்திய வம்சாவளியைச் சோ்ந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) சிங்கப்பூர் நாட்டின் அதிபா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • சர்வதேச இரயில்வே யூனியனின் (International Union of Railways)  பாதுகாப்புத் துறைக்கு (Security Platform) துணைத் தலைவராக  இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச இரயில்வே யூனியனின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது.  இவ்வமைப்பில் 194 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய ஒலி / ஒளிபரப்பு தினம் (National Broadcasting Day) - ஜீலை 23
Share:

Current Affairs Online Test 21-22 July 2020


தமிழ்நாடு
☛ கீழடி அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அங்கு ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் நவீன அகழ்வைப்பகம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-7-2020 அன்று அடிக்கல் நாட்டினார். கீழடியில், 2013-14-ம் ஆண்டு முதல் 6 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் கங்கைச் சமவெளி பகுதியில் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தோன்றிய 2-ம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருதுகோள் இதுவரை அறிஞர்களிடையே நிலவிவந்தது. ஆனால் கீழடி அகழாய்வு கி.மு. 6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.
☛ தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா
☛ மிஷோராம் மாநிலத்தின் முதலாவது மெகா உணவுப் பூங்கா திட்டமான ”ஷோராம் மெகா உணவு பூங்காவை” (Zoram Mega Food Park Ltd) மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்கள் (Ministry of Food Processing Industries) அமைச்சர் ஹஷிம்ரத் கபூர் படால் ( Harsimrat Kaur Badal) 21-7-2020 அன்று தொடங்கி வைத்தார்.
☛ இந்தியாவின் முதலாவது, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான பொது மையம் (public Electric Vehicle charging plaza) புது தில்லியில் 20-7-2020 அன்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
☛ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 (Consumer Protection Act, 2019) 20 ஜீலை 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act, 1986) க்கு மாற்றாக அமையும்.
முக்கிய அம்சங்கள் :
☛ மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்’ (Central Consumer Protection Authority) : நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல்ஆகியவற்றுக்காக, இந்த சட்டத்தின் கீழ் ‘மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்’ (Central Consumer Protection Authority) என்ற அமைப்பு அமைக்கப்பட இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும், நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள் ,வழக்குகளைப் பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருள்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிகநடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல், தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர், அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
  • மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் : மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராகவும், இணையமைச்சரை துணைத்தலைவராகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை, மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது.
☛ உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 (Global Real Estate Transparency Index (GRETI) 2020) ல் இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த Jones Lang LaSalle’s (JLL) நிறுவனம் இரண்டாண்டுகளுக்கொருமுறை வெளியிட்டு வருகிறது.
☛ ”மனோதர்பன்” (MANODARPAN) என்ற பெயரில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை உதவி வளங்குவதற்கான திட்டத்தை மத்திய மனிதவளத்துறை ‘சுய சார்பு இந்தியா திட்டத்தின்’ (Atma Nirbhar Bharat Abhiyan) ஒரு பகுதியாக 21-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
☛ கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ”ChAdOx1 nCoV-19” தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு , பூனேவைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India (SII)) ஒப்பந்தம் செய்திருக்கிறது. மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் வெற்றி கண்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பரில் கிடைத்து விடும்.
☛ இந்தியா ஐடியா உச்சி மாநாடு (INDIA IDEAS SUMMIT) , அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் (U.S.-India Business Council )சார்பில் ‘சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்‘ என்ற பொருளில் 21-22 ஜீலை 2020 தினங்களில் இணையவழியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், 22-7-2020 அன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரும் பேசுகிறார்கள்.
☛ மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் (85) 21-7-2020 அன்று காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பாஜகவின் லால்ஜி தாண்டன் எம்பியாகவும், பிகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
☛ 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 450 ஜிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐநா பொருளாதார மற்றும் சமூக குழுமத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி 18-7-2020 அன்று நடைபெற்ற காணொலிக் காட்சி வாயிலாக உரையில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்த முயற்சியால் கரியமில வாயுவால் ஏற்படும் மாசு குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். பல கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதாலும், 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதாலும், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆறு லட்சம் கிராமங்களுக்கு முழு கழிப்பிட வசதி ஏற்படுத்தியுள்ளதையும், ஐந்தாண்டுகளில் 11 கோடி வீடுகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டதாகவும், அதில் 22 கோடி வங்கிக் கணக்குகள் பெண்களுக்கானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்
☛ ”ஃபாசெக்ஸ்” (“Passex”) என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கிடையேயான ஒத்துழைப்பு இராணுவப் பயிற்சி தென்கிழக்கு கடலுக்கு செல்லும் வழியில் மத்திய கிழக்கு கடலில் 20-7-2020 அன்று நடைபெற்றது.
கூ.தக . : ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனும் ஏற்கனவே இதே பெயரில் (“Passex”) கடற்படை ஒத்திகை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்
☛ கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய ”ChAdOx1 nCoV-19” என்ற தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
☛ அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வரலாறு படைத்துள்ளது . "அல் அமல்” (Al-Amal) அல்லது "ஹோப் (நம்பிக்கை / Hope)” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம் ஜப்பானின் தானேகசிமா தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 20-7-2020 அன்று மிட்சுபிஷி ஹெச்-2ஏ (Mitsubishi H-IIA) என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை நோக்கி 49.50 கோடி கி.மீ. பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த விண்கலம், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்து, அக்கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள விண்கலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றிவந்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஆய்வு செய்கின்றன. ஆனால், இந்த ஹோப் விண்கலமானது ஒரு முழு செவ்வாய் ஆண்டு (இரு பூமி ஆண்டுகளுக்கு இணையானது) செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 மில்லியன் டாலர் (ரூ.1,496 கோடி) மதிப்பீட்டிலான இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
☛ ”ANASIS-II” என்ற பெயரில் தென் கொரியா நாட்டின் முதல் இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக் கோள் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 'Falcon 9’ ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்
☛ முதலாவது, ஐ.நா. உலக செஸ் தினம் (United Nations’(UN) First World Chess Day ) - ஜீலை 20
☛ விண்வெளி ஆய்வுப்பயண தினம் (Space Exploration Day) - ஜீலை 20 (1969 ஆம் ஆண்டு ஜீலை 20 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஃபஷ் ஆகியோர் நிலவின் மேற்பரப்பில் இறங்கிய தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)

விளையாட்டுகள்
☛ ஆஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (International Cricket Council (ICC). டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2020) ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும் இறுதிப் போட்டி, அடுத்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
☛ கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். 
☛ 21-7-2020 அன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசையில் உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (886 புள்ளி) நீடிக்கிறார்கள்.
Share:

Current Affairs Tamil Online Test 19-20 July 2020


தமிழ்நாடு

  • ☛  தமிழகத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-ஆவது பெண் நீதிபதி எனும் பெருமைகளுடைய ஆா். பானுமதி 19-7-2020 அன்று ஓய்வு பெற்றார். 2013 -ல் ஜாா்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். 2014 ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பானுமதி நியமனம் செய்யப்பட்டாா்.
  • ☛ இந்தியாவின் மிகச்சிறந்த கணித மேதைகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.சேஷாத்ரி (88) சென்னையில் 17-7-2020 அன்று காலமானாா்.

இந்தியா

  • ☛ உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ.25 இலட்சம் இலவச ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர்   அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ☛ ”மெடிகேப்” (“MediCAB”) என்ற பெயரில் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லத் தக்க மருத்துவமனையை (portable hospital unit) ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடன் ”மோடுலஸ் ஹவுஷிங்” (Modulus Housing) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவமனை கேரள மாநிலம் வேநாடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயனுக்கு வந்துள்ளது.
  • ☛ “KURMA” மொபைல் செயலி : இந்திய ஆமை இனங்களை பற்றிய விவரங்களை கண்காணித்தல் மற்றும் அறிவித்தலுக்காக KURMA” எனும் மொபைல் செயலியை இந்திய ஆமைகள் பாதுகாப்பு செயல்பாட்டு நெட்வர்க்(Indian Turtle Conservation Action Network (ITCAN)) எனும் அமைப்பு உருவாக்கியுள்ளது.
    • கூ.தக. : உலக ஆமைகள் தினம் - மே 23
  • ☛ ஐக்கிய நாடுகளவையின் பொருளாதார மற்றும் சமூக கவுண்சிலின் (United Nations Economic and Social Council (ECOSOC) ) உயர்மட்ட கூடுகையில் பிரதமர் மோடி அவர்கள் 17-7-2020 அன்று உரையாற்றினார்கள்.
    • கூ.தக. : 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ’ECOSOC’ அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் ராமசாமி முதலியார் எனும் தமிழராவர். நியூயார்க்கில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக, நார்வே நாட்டைச் சேர்ந்த மோனா ஜூல் (Mona Juul) என்பவர் உள்ளார். 

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.
  • ☛ ஐக்கிய நாடுகளவையின் 75 ஆவது ஆண்டு தினம் 21 செப்டம்பர் 2020 அன்று “நாம் விரும்பும் எதிர்காலம், நமக்குத் தேவையான ஐ.நா: பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல்” (The Future We Want, the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism) எனும் மையக்கருத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

பொருளாதாரம்

  • ☛ இந்தியாவில், கடந்த, 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக ஐ.நா., வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி திட்டம் (Oxford Poverty and Human Development Initiative (OPHI)) ஆகியவை இணைந்து வெளியிட்ட புள்ளி விபரத்தில் (UN’s Global Multidimensional Poverty Index) தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ☛ மூன்றாவது ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூடுகை (G20 Finance Ministers and Central Bank Governors meet) இணைய வழியில் 18-7-2020 அன்று நடைபெற்றது. சவுதி அரேபியா நாடு தலைமையேற்று நடத்திய இந்த கூடுகையில் இந்தியாவின் சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். 

விருதுகள்

  • ☛ ஐக்கிய நாடுகளவையின் ”நெல்சன் மண்டேலா பரிசு 2020” (Nelson Mandela Prize 2020) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மரியானா வர்டினோயனிஸ் (Marianna Vardinoyannis) மற்றும் கினியா (Guinea ) நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மோரிஷானா கோயாடே (Morissana Kouyaté) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ஐ.நா. பொது சபையால்( United Nations General Assembly (UNGA) ) 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நெல்சன் மண்டேலா பரிசு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

நியமனங்கள்

  • ☛ உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி யு.யு.லலித் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் புதிய மற்றும் ஐந்தாவது உறுப்பினராகியுள்ளார். இவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2022 நவம்பா் 8-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை, கொலீஜியத்தின் உறுப்பினராக இருப்பாா்.
    • கூ.தக. : தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உறுப்பினா்களாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எப்.நாரிமன் ஆகியோா் உள்ளனா். ஐந்து மூத்த நீதிபதிகளை உறுப்பினா்களாகக் கொண்ட இந்தக் கொலீஜியம்தான், நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களை பரிந்துரை செய்யும்.

முக்கிய தினங்கள்

  • ☛ சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day) - ஜீலை 18

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ☛ ”பிளாக்ராக் மால்வேர்” (Blackrock Malware) என்ற பெயரிலான ‘கணிணி தீம்பொருள்’ ( Malware) ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளிலிருந்து பயனர்களின் கிரடிட் கார்டு தகவல்கள் மற்றும் கடவுச்சொல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Share:

Current Affairs Online Test 17-18 July 2020


தமிழ்நாடு

  • ☛ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இந்திய தேசிய ராணுவப் படையில் (ஐஎன்ஏ) பாலசேனையில் தனது 12 வயதில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப் பெண்மணி காந்திமதி பாய் 15-7-2020 அன்று காலமானார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐஎன்ஏ படையில் பணியாற்றிய ஒரே பெண்மணி காந்திமதி பாய் ஆவார்.

இந்தியா

  • ☛ உலக தயாரிப்பு இடர் குறியீடு 2020 (Global Manufacturing Risk Index) ல் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. Cushman & Wakefield எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா பெற்றுள்ளது.
  • ☛ ”நிஷிதா” (National Initiative for School Heads and Teachers Holistic Advancement (NISHTHA)) என்ற பெயரில் “தேசிய பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முழுமையான மேம்பாட்டு திட்டத்தை” மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் , ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 1200 வல்லுநர்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது.
    • கூ.தக. : ”நிஷிதா” திட்டம் முதன் முதலில் ஆகஸ்டு 2019 ல் தொடங்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 சூழலினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் மறுபடியும் ஆன்லைன் வழியாக இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT (National Council of Educational Research and Training) ) இந்த திட்டத்தில் மாறுதல்களைச் செய்துள்ளது. ஆன்லைன் வழியான இந்த திட்டம் DIKSHA (Digital Infrastructure for Knowledge Sharing) மற்றும் NISHTHA இணையதளங்கள் மூலம் அமல்படுத்தப்படுகிறது.
  • ☛ தெலங்கானாவில் அரசு ஜூனியா் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2020-21 கல்வியாண்டு முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் அந்த மாநில முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் 17-7-2020 அன்று அறிவித்துள்ளார்..
  • ☛ உலகின் முதலாவது, முழுவதும் தானியங்கி மற்றும் மின்சாரத்தால் இயங்கும் கப்பலை (world’s first fully automatic electric vessel) உருவாக்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த ’கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம்’ (Cochin Shipyard Ltd (CSL)) மற்றும் நார்வே நாட்டின் ASKO Maritime நிறுவனத்திற்குமிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ☛ ஆயுதப் படைகள் அவசர தேவைகளுக்காக ரூ. 300 கோடி வரையில் ஆயுதங்களை வாங்கச் செலவிடலாம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (Defence Acquisition Council (DAC)) 15-7-2020 அன்று அனுமதி வழங்கியுள்ளது.
  • ☛ ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அமல்படுத்தப்படும் கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை (Animal Husbandry Infrastructure Development fund (AHIDF)) அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மீன்வளம் கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் 16 7 2020 அன்று வெளியிட்டுள்ளார்.பால் பண்ணை, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான கட்டமைப்பை நிறுவுதல், மற்றும் தனியார் துறையில் கால்நடை தீவன ஆலைகளை நிறுவுதல் ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிக்க இந்த நிதி உதவும் .

வெளிநாட்டு உறவுகள்

  • ☛ இந்தியா - பூட்டான் நாடுகளுக்கிடையே புதிய வர்த்தக பாதை மேற்கு வங்காளத்திலுள்ள ஜெய்கான்( Jaigaon ) மற்றும் பூட்டானின் பாஷகாவிலுள்ள ஆஹ்லே (Ahlay, Pasakha) எனுமிடத்திற்குமிடையே 15-7-2020 அன்று திறக்கப்பட்டுள்ளது.
  • ☛ இந்தியாவின் முதலாவது, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிமோனியா (pneumonia) நோய்க்கான தடுப்பூசியான ”நிமோகோக்கல் பாலிசாக்ரைட் கோஜுகாட் தடுப்பூசிக்கு”(Pneumococcal Polysaccharide Conjugate Vaccine) மத்திய மருந்து கட்டுப்பாட்டகம் (Drug Controller General of India(DCGI)) ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பூனேவிலுள்ள M/s. Serum Institute of India Pvt. Ltd எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
  • ☛ இந்தியா - ஐரோப்பிய யூனியன் (European Union (EU) இடையேயான 15-வது உச்சி மாநாடு 15 ஜூலை 2020 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூடுகையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஐரோப்பிய கவுண்சில் (European Council) தலைவர் சார்லஸ் மைக்கேல் (Charles Michel) மற்றும் ஐரோப்பிய கமிஷனின் (European Commission) தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன் (Ursula von der Leyen) ஆகியோர் இணைந்து தலைமையேற்று நடத்தினர்.
  • ☛ இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர நடவடிக்கைக் குழு (Computer Emergency Response Team-CERT) மற்றும் இஸ்ரேல் தேசிய இணைய பாதுகாப்பு இயக்குநரகம் (Israel National Cyber Directorate (INCD)) ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இஸ்ரேலில் 15-7-2020 அன்று நடைபெற்ற நிகழ்வில் ஐஎன்சிடி தலைவா் ஈகல் உன்னா மற்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதா் சஞ்சீவ் சிங்லா ஆகியோா் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ சர்வதேச ஊடக சுதந்திர விருதுகள் 2020 (International Press Freedom Award 2020) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஷாஹிதுல் ஆலம் (Shahidul Alam), ஈரானைச் சேர்ந்த மொகமது மொஷேட் (Mohammad Mosaed), நைஜீரியாவைச் சேர்ந்த ‘தாபோ ஓலோருன்யோமி (Dapo Olorunyomi) மற்றும் ரஷியாவைச் சேர்ந்த ஸ்வேட்லானா புரோகோப்யேவா (Svetlana Prokopyeva) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’க்வென் இஃபில்ல் ஊடக சுதந்திர விருது 2020’ ( Gwen Ifill Press Freedom Award 2020) அமல் க்ளூனே ( Amal Clooney) எனும் லெபனான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : அமெரிக்காவின் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட ’Committee to Protect Journalists(CPJ)’ எனும் அமைப்பினால் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • ☛ ”சுரினாம்” (Suriname) நாட்டின் அதிபராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ’சான் சந்தோகி’ ( ‘Chan’ Santokhi) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : தென் அமெரிக்க கண்டத்திலுள்ள சுரினாமின் தலைநகரம் - பரமாரிபோ (Paramaribo) | நாணயம் - சுரிநாம் டாலர் (Suriname Dollar)
  • ☛ ‘சிஎச்ஆட்ஆக்ஸ் 1 என்கோவ்-19’ (ChAdOx1 nCoV-1) என்ற பெயரில் கோவிட் -19 நோய்க்கான தடுப்பூசி ஒன்றை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசி, கொரோனா வைரஸ் திரிபுவை அடிப்படையாகக்கொண்டது. ‘ஜைகோவ்-டி’ பிளாஸ்மிட் டி.என்.ஏ.வை ஆதாரமாக கொண்டது. இந்த தடுப்பூசி செப்டம்பர் 2020 ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுகள்

  • ☛ 2019 -ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த வன ஆய்வுக்கான தேசிய விருது கோவையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் முனைவர் கண்ணன் வாரியருக்கு, உயிரிப் பன்மையைக் காப்பதில் ஆய்வு மேற்கொண்டமைக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் இவ்விருதினை வழங்கியுள்ளது.

நியமனங்கள்

  • ☛ ஹெச்.சி.எல்நிறுவனத்தின் தலைவராக (HCL Technologies Limited) ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா (Roshni Nadar Malhotra) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • ☛ சர்வதேச குற்றவியல் நீதி தினம் (Day of International Criminal Justice) - ஜீலை 17
  • ☛ தமிழ் நாட்டில் ‘கல்வி வளர்ச்சி தினம்’ (Educational Development Day) - ஜீலை 15 (பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினம்)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ☛ சூரியனை இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் இருந்து (7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில்) எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் (Solar Orbiter mission) எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுகள்

  • ☛ ’ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2022’ (FIFA World Cup 2022) கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (Federation Internationale de Football Association) அறிவித்துள்ளது.
Share:

TNPSC Current Affairs Online Test 15-16 July 2020


தமிழ்நாடு

  • நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க 14-7-2020 அன்று தமிழ அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசுப் பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
    • கூ.தக : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 10 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரையை முதலமைச்சரிடம் ஏற்கனவே சமர்ப்பித்து இருந்தது. அந்த அறிக்கையை தீர ஆராய்ந்த, தமிழக அரசு, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது.

இந்தியா

  • "இந்தியாவில் தயாரிப்போம்" (Make in India initiative) திட்டத்தின் கீழ், இஸ்ரேல் நாட்டின் அதிநவீன துப்பாக்கி ரகங்களான (Assault Rifles) 'ஆரட்' (Arad) மற்றும் கார்மல்(Carmel) ஆகியவை இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) என்ற நிறுவனத்தின் மூலம் மத்திய பிரதேசத்திலுள்ள ஆலையில் தயாரிக்கப்படவுள்ளன.
    • கூ.தக. : பி எல் ஆர் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (PLR Systems Private Limited) தான் இந்தியாவில், சிறிய ரக ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உரிமம் பெற்றுள்ள முதல் தனியார் நிற்வனம் ஆகும்.
  • கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான 4ஜி/5ஜி போன்களை தயாரிக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை ஜியோ நிறுவனம் துவங்க உள்ளதாகவும் ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகளில் கூகுள் நிறுவனம் 33,737 கோடி முதலீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் தேமாஜி (Dhemaji) மாவட்டத்திலுள்ள ஃபோபா ரிசர்வ் காடுகளை (Poba Reserve Forest) வனவிலங்கு சரணாலயமாக ( wildlife sanctuary) மாற்றுவதற்கு அஸ்ஸாம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
  • உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் முகேஸ் அம்பானி: புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தற்போது ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
    • ஜீலை 2020 ல் உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 6 மற்றும் 7வது இடத்தில் இருந்த கோடீஸ்வரர்களான எலன் மாஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகிய இருவரையும் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
    • இந்த நிலையில் உலகின் முதல் பணக்காரராக அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவர் உள்ளார் என்பதும், இரண்டாவது இடத்தில் பில்கேட்ஸ், மூன்றாமிடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர்.
  • “COROSURE” என்ற பெயரில் உலகின் மிகக் குறைந்த விலையிலான கோவிட் -19 பரிசோதனைக் கருவியை (COVID-19 kit) ஐ.ஐ.டி டெல்லி உருவாக்கியுள்ளது. இதன் பயன்பாட்டை 15-7-2020 அன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • “அஞ்சி காட் பாலம்” (“Anji Khad Bridge”) என்ற பெயரில் இந்தியாவின் முதல் கம்பி வடத்தால் தாங்கப்பட்ட இரயில்வே பாலத்தை (India’s first cable-stayed Indian Railways bridge) இந்திய ரயில்வேயின் கொங்கன் ரயில்வே கார்பரேசன் லிமிடெட் உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சீனாப் ஆற்றின் குறுக்கே (Chenab River) அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் காத்ரா (Katra) மற்றும் ரேசி (Reasi) பகுதிகளை இணைக்கிறது.
  • இந்தியாவில் 14 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு : ஐ.நா. சா்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அறிக்கையின் படி, இந்தியாவில் கடந்த 2004-06 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.7 சதவீதம் போ் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களாக இருந்தனா். இது 2017-19 காலகட்டத்தில் 14 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உடையோா் எண்ணிக்கை சுமாா் 6 கோடி குறைந்துள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக 18.92 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனா். நாட்டில் உள்ள சிறுவா்களில் சிலரே வளா்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
  • மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்து வெளியிட்டுள்ளது.
    • உலக மக்கள் தொகையில் 19 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டிருக்கும் இந்தியா, ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கிறது. தற்போதைய இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 139 கோடியாகும். ஆனால், தற்போதிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சியே தொடர்ந்தால் 2027-ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதல் இடத்தில் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஐக்கிய நாடுகளவையின், சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு 2021 (International Year of Fruits and Vegetables 2021) அனுசரிப்பை நடத்துவதற்காக  ஐ.நா. உணவு மற்றும் வேளான்மை நிறுவனத்துடன் (Food and Agriculture Organization(FAO))  இந்தியா மற்றும் சிலி நாடுகள் இணைந்துள்ளன.
    • கூ.தக. : 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஆண்டுகளின் பட்டியல்
ஐக்கிய நாடுகளவையின் 2021 ஆம் ஆண்டு அனுசரிப்புகள் (International Years Of United Nations - 2021)
☞ சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு (International Year of Peace and Trust) 
 ☞ நீடித்த வளர்ச்சிக்கான  படைப்புத் திறன் பொருளாதாரத்திற்கான ஆண்டு (International Year of Creative Economy for Sustainable Development)
☞ சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு (International Year of Fruits and Vegetables)
☞ சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு (International Year for the Elimination of Child Labour)
ஐக்கிய நாடுகளவையின் 2020 ஆம் ஆண்டு அனுசரிப்புகள் (International Years Of United Nations - 2020)
☞ சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு (International Year of Plant Health)
☞ சர்வதேச செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டு ( International Year of the Nurse and the Midwife)
  • போலந்து அதிபா் தோ்தலில் அந்த நாட்டின் அதிபா் ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) பெரும்பான்மை வாக்குகளுடன் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

நியமனங்கள்

  • ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) துணைத் தலைவராக (vice president) இந்தியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பணியாற்றி வரும் அசோக் லவாசா(Ashok Lavasa) 15-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • உலக இளைஞர் திறன்கள் தினம் (World Youth Skills Day) - ஜீலை 15 | மையக்கருத்து 2020 - நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய இளையோருக்கான திறன்கள் (Skills for a resilient youth)

விளையாட்டுகள்

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : பிசிசிஐ தலைவர் பதவியில் சவுரவ் கங்குலி உள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ” If It Bleeds” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஸ்டீபன் கிங் ( Stephen King)
Share:

TNPSC Tamil Current Affairs Online Test 13-14 July 2020


தமிழ்நாடு

  • பாரதி ஆய்வாளர் இளசை மணியன் எட்டயபுரத்தில் 12-7-2020 அன்று காலமானார். இவர் 1905 ஆம் ஆண்டில் ‘இந்தியா’ ப்த்திரிக்கையில் பாரதியார் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ’பாரதி தரிசனம்’ என்ற நூலை 2 பாகங்களாக வெளியிட்டுள்ளார். இதேபோல் பாரதியும் மத நல்லிணக்கமும், பாரதியும் சோசலிசமும், பாரதியும் ரஷ்யப் புரட்சியும், ஊணர் செய்த சதி (பாரதி வாழ்வில் நடந்த சம்பவம்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில், தினமணி நாளிதழின் ‘பாரதி விருது’ ஆளுநர் பன்வாரிலால் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்தியா

  • ”சுத்” (“Shudh”) என்ற பெயரில் அறை முழுவதையும் புற ஊதாக் கதிர்களைக் கொண்டு சுத்திகரிக்கும் இயந்திரத்தை ஐ.ஐ.டி.கான்பூர் உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் 10*10 சதுர அடி அறையை 15 நிமிடங்களில் சுத்திகரிக்க முடியும்.
  • இந்தியாவை மின்னணுமயமாக்குவதற்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்துக்காக இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை கூகுள் முதலீடு செய்யவுள்ளதாக, கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 13-07-2020 அன்று இணையவழியில் நடைபெற்ற “கூகுள் ஃபார் இந்தியா” நிகழ்வின் போது பிரதமர் மோடி அவர்களுடனான உரையாடலைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • 2019-2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவுடனான வர்த்தகம் செய்த நாடுகளில் முதலிடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி ரஷ்யா வெற்றி : கொரோ‌னா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை நடத்தி வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யாவின் செசோனோவ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் தயாரித்துள்ளது.
  • போலந்து நாட்டின் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ( Andrzej Duda ) மறுபடியும் வெற்றி பெற்றுள்ளார்.

விருதுகள்

  • சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் (International Academy of Astronautics(IAA) ) மிக உயரிய விருதான “வான் கர்மான் விருது 2020” ( Von Karman Award 2020) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்த்தின் ( Indian Space Research Organisation(ISRO)) தலைவர் K சிவன் (Dr. Kailasavadivoo Sivan) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூ.தக. : தியோடர் வான் கர்மான் (Theodore Von Karman) என்பவரால் தொடங்கப்பட்ட சர்வதேச விண்வெளிப் பயணவியல் அகதமியின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது.
  • 10வது ’தாதா சாகேப் பால்கே திரைப்பட விருதுகள் 2020’ (Dada Saheb Phalke Film Festival Awards) ல் சிறந்த ஆவணப் படத்திற்கான விருது, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த கேசங் டி தோங்டோக் (kezang D THongdok) என்பவர் தயாரித்த ”Chi Lupo” என்ற பெயரிலான தேன் வேட்டை பற்றிய ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • இரண்டாவது தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான வாரம் 2020(Counter-Terrorism Week) - ஜிலை 6-10, 2020 | மையக்கருத்து 2020 - உலகளாவிய தொற்று சூழலில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான போர்த்திறஞ்சார்ந்த மற்றும் நடைமுறை சவால்கள்(Strategic and Practical Challenges of Countering Terrorism in a Global Pandemic Environment)
  • ஐ.நா. சர்வதேச ”மலாலா தினம்” (International Malala Day) - ஜீலை 12 (பெண் குழந்தைகள் கல்விக்காக போராடி வரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசாஃப்சாய்(Malala Yousafza) பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி. உயிரிதொழில்நுட்பத்துறையைச் சோ்ந்த பேராசிரியா் ரமா சங்கா் வா்மா தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா். மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ”குா்குமின்” ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • கூகுள் கரண்ட்ஸ் (Google Currents) என்ற பெயரில் கூகுள் பிளஸ் (Google plus) இன் புதுப்பித்த பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    • கூ.தக. : கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் (Google plus) சமூக வலைத்தள செவை கடந்த ஏப்ரல் 2019 ல் அந்நிறுவனத்தினால் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘A Song of India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond)
Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language