Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label June Current Affairs. Show all posts
Showing posts with label June Current Affairs. Show all posts

TNPSC Monthly Current Affairs June 2021 | நடப்பு நிகழ்வுகள் ஜீன் 2021

 TNPSC Monthly Current Affairs June 2021 | நடப்பு நிகழ்வுகள் ஜீன் 2021

Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

TNPSC Monthly Current affairs – June 2021

English

Tamil



Share:

TNPSC Monthly Current affairs – June 2020

 நடப்பு நிகழ்வுகள் - ஜீன் 2020

Students can get Monthly current affairs in English, Tamil, Current affairs for TNPSC, TNPSC Monthly current affairs Pdf, TNPSC Current affairs in Tamil pdf, English pdf.

TNPSC Monthly Current affairs – June 2020

English

Tamil


Read Online

Share:

TNPSC Current Affairs Tamil 30 June 2020

TNPSC Current Affairs 30  June 2020

இந்தியா

  • இரண்டாவது தேசிய கங்கை ஆற்று வடிநில திட்டத்திற்கு (Second National Ganga River Basin Project (SNGRBP)) 400 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ”சங்கல்ப் பர்வா” ( Sankalp Parva) திட்டம் : நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி, தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை ‘சங்கல்ப பர்வா’ எனும் மரம் நடு பிரச்சாரம் நாடெங்கிலும் மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடுவதற்கு, பிரதமரால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வகையான மரங்கள் (i) “ஆலமரம்” (ii) “Awla” “நெல்லி (iii) “அரசமரம்” (iv) “அசோகா மரம்” (v) “வில்வமரம்” ஆகியவையாகும். இந்த வகை மரக்கன்றுகள் கிடைக்காவிட்டால் மக்கள் தங்கள் விருப்பப்படி வேறு எந்த மரக்கன்றுகளை வேண்டுமானாலும் நடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது. தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 29-6-2020 அன்று கையெழுத்திட்டன. இதன்படி பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் இந்த அரசு உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
  • தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உலக வா்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) தீா்வுக் குழு அமைக்க ஜப்பான், சீன அரசுகள் கோரியுள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஐசிடி சாதனங்கள் யாவும் உலக வா்த்தக அமைப்பின் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான ஒப்பந்தம்-2 ((Information Technology Agreement (ITA) -2))-இன் கீழ் வருவதாகவும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா அங்கம் வகிக்கும் ஒப்பந்தம் “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1)ஆனது இந்தச் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதை தடை செய்யவில்லை என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது.
  • கூ.தக. : “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1) 1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு , 1 ஜீலை 1997 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தமானது 2015 ல் மேலும் பல அம்சங்களுடன் மறுபடியும் நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • மாலாவி (Malawi) நாட்டின் புதிய அதிபராக லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : மாலாவி நாட்டின் தலைநகரம் ’லிலோங்க்வே’ (Lilongwe) | நாணயம் மாலாவியன் க்வாச்சா (Malawian Kwacha)
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) 36 வது கூடுகை, ‘ஒத்திசைவு மற்றூம் பொறுப்புணர்வு கொண்ட ஆசியான்’ (“Cohesive and Responsive ASEAN”) எனும் மையக்கருத்தில் காணொளி வழியாக 26 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இந்த கூடுகைக்கு 2020 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வியட்நாம் நாட்டின் பிரதமர் நூயன் ஜீவான் புக் (Nguyen Xuan Phuc) தலைமையேற்று நடத்தினார்.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ( National Aeronautics and Space Administration (NASA) ) வாசிங்க்டனில் அமைந்துள்ள தனது தலைமையக கட்டிடத்திற்கு நாஷா அமைப்பின் முதல் கறுப்பின பெண் பொறியாளரான மேரி வின்ஸ்டன் ஜாக்சன் (Mary Winston Jackson) என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு : கடந்த ஜனவரி 2020 ல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
  • ஐஸ்லாந்து (Iceland) அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் (Guðni Thorlacius Jóhannesson) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நியமனங்கள்

  • மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுனராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு (Anandiben Patel) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச வெப்பமண்டல தினம் (International Day of the Tropics) - ஜீன் 29
  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

Share:

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020

TNPSC Current Affairs 27-29 June 2020

தமிழ்நாடு

  • கொடுமணல் அகழாய்வில் 2,300 ஆண்டு பழமையான ஊது உலைகண்டுபிடிப்பு : திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது. இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.

இந்தியா

  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • "நாஷா முக்த் பாரத்” (Nasha Mukt Bharat) திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா 26-6-2020 (சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான தினத்தன்று-International Day Against Drug Abuse and Illicit Trafficking) வெளியிட்டுள்ளார். "நாஷா முக்த் பாரத்” திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறார் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் ஆயில் இந்தியா லிமிடெட் எண்ணைக் கிணறில் 27-5-2020 அன்று ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்தைக் குறித்து ஆராய முன்னாள் கவுகாத்தி உயர்நீத்மன்ற நீதிபதி BP கடாகே (BP Katakey) தலைமையில் உயர்மட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 25-6-2020 அன்று அமைத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையின் படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு (வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 / Banking Regulation (Amendment) Ordinance, 2020) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 27-06-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத் திருத்தத்தின் படி,  வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949 )ன்  பிரிவுகள் 45 மற்றும் 56 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • ”இ-பஞ்சாயத்து புரஸ்கார் 2020” ( e-Panchayat Puraskars 2020) பரிசுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது . இதன்படி, முதல் பரிசை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20
  • சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium Enterprises (MSME) Day) - ஜீன் 27
  • சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவிற்கான சர்வதேச தினம் (International Day in Support of Victims of Torture) - ஜீன் 26 | மையக்கருத்து - சித்திரவதை : மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Torture: a crime against humanity)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகின் நீளமான மற்றும் அதிக நேரம் மின்னிய மின்னல்கள் : பிரேஸிலில் 4-3-2019 அன்று ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீண்ட நேரம் மின்னிய மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16.73 விநாடிகளுக்கு மின்னிய மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

விளையாட்டுகள்

  • இந்தியாவின் பழுதூக்கும் வீராங்கனை K.சஞ்சிதா சானுவின் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு விலக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டின் காரணமாக, முன்னதாக அவருக்கு வழங்கப்படாதிருந்த அர்ஜீனா விருது 2018 (Arjuna award for 2018) மறுபடியும் வழங்கப்படவுள்ளது.
  • 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் நடத்தவுள்ளன.

Share:

TNPSC Current Affairs Tamil 25-26 June 2020


    இந்தியா

    • ”இந்திய காசநோய் அறிக்கை 2020” (“India TB (Tuberculosis) Report 2020”) ஐ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்களில் காசநோய் தொற்று அதிகமாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.
    • ஆன்லைன் வழியாக இரத்தங்களை ஆர்டர் செய்து பெறுவதற்கான ‘eBloodServices‘ என்ற பெயரிலான மொபைல் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பு (Indian Red Cross Society (IRCS)) இணைந்து தொடங்கியுள்ளன.
    • சுயசாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நலிவடைந்த நிலையில் காணப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ரூ. 20,000 கோடி கடனுதவி வழங்குவதற்காக, கடன் உறுதியளிப்புத் திட்டத்தை (Credit Guarantee Scheme for Sub-ordinate Debt) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி 24-6-2020 அன்று தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின்படி, நலிவடைந்த நிலையில் இருக்கும் மற்றும் வாராக் கடன் பட்டியலில் இருக்கும் சுமாா் 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். மேலும், இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
    • நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
    • ஐ.நா. சபையின் சார்பில் நியுயார்க் நகரில் உலக பொது சேவை தினத்தையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தலைமையில் நடந்த இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பாக கேரளாவில் சுகாதாரத்துறை பொறுப்பை கவனிக் கிற பெண் மந்திரி கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டு ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் கேரளா மாதிரி’ என்ற தலைப்பில் பேசினார்.
      • இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே வொர்க் ஜீவ்டே, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரங்கள் துணைச்செயலாளர் லியு ஜென்மின், தென்கொரிய உள்துறை மந்திரி சின் யெங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாட்டு உறவுகள்

    • இந்தியாவுக்கு வெளியே துவங்கப்பட்டுள்ள முதல் யோகா பல்கலைக்கழகம் எனும் பெருமையை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ள விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் (Vivekananda Yoga University) பெற்றுள்ளது.
    • ரஷியா - இந்தியா - சீனா (Russia-India-China (RIC)) வெளியுறவு அமைச்சர்கள் தரப்பு காணொளிக் கூடுகை 23 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இதனை ரஷியா நடத்தியது. இந்தியாவின் சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
    • ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் (‘Alliance for Poverty Eradication’) நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வறுமையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் இந்த கூட்டமைப்பை 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே(Tijjani Muhammad-Bande) 30 ஜீன் 2020-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா்.
    • ஐ.நா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)) வரும் இரண்டு ஆண்டுகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
    • 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் 24-06-2020 அன்று நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். 2-ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் கடந்த மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்து ஜூன் 24-ந் தேதி நடத்தியுள்ளது.

    பொருளாதாரம்

    • வாங்கும் சக்தியை ( purchasing power parity (PPP)) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தரவுகளை அடிப்படையிலான இந்த பட்டியலில் முதலிடத்தை சீனாவும் , இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.

    முக்கிய தினங்கள்

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse and Illicit Trafficking) - ஜீன் 26
    • சர்வதேச மாலுமிகள் தினம் (International Day of the Seafarer) - ஜீன் 25

    அறிவியல் & தொழில்நுட்பம்

    • சென்னை ஐஐடியானது ‘ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) திட்டம் மூலம் பசுமை எரிசக்தியான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஜொ்மனி ஆராய்ச்சியாளா்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
      • கூ.தக . : சா்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக’ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகின் சிறந்த நிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார். வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
      • விண்வெளி துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) , தனியார் துறைகளின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிப்பது, முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கொண்டு சுயமாக முடிவு எடுக்கும். தனியார் நிறுவனங்கள் இன்ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பு மூலம் நேரடியாக விண்வெளி துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும். அந்த அமைப்பு அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். அந்த அமைப்பு முடிவு எடுத்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதாவது இஸ்ரோ அல்லது தனியார் அமைப்புகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் ( NewSpace India Limited (NSIL)), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.

    விளையாட்டுகள்

    • ”இந்திய கராத்தே சங்கத்திற்கு” (Karate Association of India) உலக கராத்தே கூட்டமைப்பு (World Karate Federation) வழங்கியிருந்த அங்கீகாரத்தை 21-6-2020 அன்று இரத்து செய்துள்ளது.

    இதர தகவல்கள்

    • திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், 25-6-2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். 
      • கூ.தக. : திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இதனை, 1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தொடங்கினார். வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.
Share:

TNPSC Current Affairs Tamil 23-24 June 2020


தமிழ்நாடு

  • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23-06-2020 அன்று தொடங்கி வைத்தார்.
    • கூ.தக. : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐ.ஓ.டி. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கியாசில் இருந்து சி.பி.ஜி. என்ற ‘கம்பிரஸ்ட் பயோ கியாசை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் சி.பி.ஜி. மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும். 

இந்தியா

  • இந்திரா ராசோய் யோஜனா (‘Indira Rasoi Yojna / Indira Kitchen Scheme’) என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை இராஜஸ்தான் அரசு 22-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • ”கரோனில்” (Coronil) மற்றும் ”சுவாசரி” (Swasari) எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகள் 3 முதல் 7 நாள்களில் கரோனா நோயை 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியில் இருந்து (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) ) ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க இந்த ரூ.2,000 கோடி உதவும்.
  • பொது விநியோக முறைமையின் (Public Distribution System (TPDS) ) கீழ் மாநில அளவில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான செலவு குறைந்த விநியோக சங்கிலி நெட்வொர்க்குகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவிற்கான ஐ.நா. உலக உணவு திட்டம் (United Nations World Food Programme (WFP) India) மற்றும் ஐ.ஐ.டி,தில்லி (Indian Institute of Technology (IIT) Delhi ) ஆகியவை இணைந்து ஈடுபடுகின்றன.
  • “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“ (Decarbonising Transport in India) என்ற பெயரில், இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஆய்வை, நிதிஆயோக் (NITI Aayog) அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் (International Transport Forum (ITF) ) இணைந்து, 24 ஜுன், 2020 அன்று தொடங்க உள்ளது.
    • கூ.தக. : 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதும், OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பின் கீழ் இயங்குவதுமான சர்வதேச போக்குவரத்து மன்றத்தின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான இவ்வமைப்பில், 2008-ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.

விருதுகள்

  • ’ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின்’ (German Book Trade) அமைதி பரிசு 2020 (Peace Prize 2020), நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் (Amartya Kumar Sen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் (RBI Central board) பகுதி நேர அலுவல் ரீதியில் அல்லாத இயக்குநராக (Part-Time Non-Official Director) 3-3-2020 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவுள்ள நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் 2016-2020 வரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • ஐ.நா. பொது சேவைகள் தினம் (UNITED NATIONS PUBLIC SERVICE DAY - ஜீன் 23 | மையக்கருத்து - கோவிட் -19 பெருந்தொற்றுப் பணியிலுள்ள பொது சேவகர்களை மரியாதை செய்வோம் (ON THE FRONTLINES: HONOURING PUBLIC SERVANTS IN THE COVID-19 PANDEMIC RESPONSE)
  • சர்வதேச ஒலிம்பிக் தினம் (International Olympic Day) - ஜீன் 23
  • சர்வதேச விதவைப் பெண்கள் தினம் (International Widows’ Day) - ஜீன் 23 | மையக்கருத்து - கட்புலனாகா பெண்கள் , கட்புலனாகாத பிரச்சனைகள் (Invisible Women, Invisible Problems)
  • உலக இசை தினம் (World Music Day) - ஜீன் 21

அறிவியல் & தொழில்நுட்பம்

  • YUKTI 2.0 ( Young India combating COVID with Knowledge, Technology, and Innovation) என்ற பெயரில் கோவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டு படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான இணையதளத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 23-6-2020 அன்று தொடங்கி வைத்தார். YUKTI 1.0 திட்டம் 11 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ”துருவா” (‘Dhruva’) என்ற பெயரில் இடம் பெயர் தொழில்நுட்ப வழிகாட்டி சிப்பை (Chip) மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘நேவிக்’ (NAVIC (NAVigation with Indian Constellation)) இடம்பெயர் வழிகாட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த சிப்பை, ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இதர ஸ்மார்ட் கருவிகளில் இணைத்து பயன்படுத்தலாம்.
  • சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் (BeiDou Navigation Satellite System (BDS)) 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி (55ஆவது) செயற்கைக்கோள் பெய்தொவ் -3 (Beidou-3 navigation satellite) லாங்மார்ச் 3-பி (Long March 3B) ஏவூர்தியின் மூலம் 23-6-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.
  • ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது மொபைல் ஃபோன்களுக்கு ஐஒஎஸ் 14 (iOS 14) எனப்படும் புதிய இயங்குதள (Operating System) பதிப்பை 23-6-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்த, விண்வெளி வீரர்களுக்கான, ”நீர்ம குளிர் மற்றும் வெப்ப ஆடை” ( Liquid Cooling and Heating Garment (LCHG)) க்கு பேட்டண்ட் (patent ) உரிமை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

  • புகழ்பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் தி அண்டர்டேக்கர் (The Undertaker) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி அண்டர்டேக்கரின் இயற்பெயர், மார்க் காலவே.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ”Legend of Suheldev: The King Who Saved India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமிஷ் திரிபாதி (Amish Tripathi) 

Share:

TNPSC Current Affairs Tamil 21-22 June 2020

TNPSC Current Affairs 21-22 June 2020

தமிழ்நாடு

  • தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் குழு : நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) முதன்மை செயல் அலுவலர் அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் கூகிள் , மைக்ரோசாஃப்ட் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
  • ”பிரதம மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான சுய சார்பு நிதி திட்டத்தினை ( Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) அமல்படுத்துவதற்கான வங்கியாக இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI) ) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை அமைச்சகம் மற்றும் அவ்வங்கியிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கூ.தக. : நாடெங்கிலுமுல்ள 50 இல்டசம் தெருவோர வியாபாரிகள் பயனடைவதற்கான ”PM SVANidhi” திட்டமானது 1 ஜீன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஓராண்டில் மாதத்தவணையாக திருப்பிச் செலுத்துவதற்கான ரூ.10,000/- கடனுதவியைப் பெறலாம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
    • நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு ஏற்பது வழக்கமாக உள்ளது.கவுன்சிலின் 15 உறுப்பு நாட்டுப் பெயா்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டம் - முக்கிய தகவல்கள்:
    • புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி செலவிலான ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 20 ஜீன் 2020 அன்று பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் பொதுப்பணிகளின் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமாகும்.
    • 125 நாட்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 25 வகையான வேலைகள் , புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ரூ.1709 கோடி (200 மில்லியன் யூரோக்கள்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் வளர்ச்சி முகமை (French Development Agency) மற்றும் இந்திய அரசிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-ஆவது இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி , (சென்னையைச் சேர்ந்த) சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச யோகா தினம் (International Yoga Day) - ஜீன் 21 | மையக்கருத்து(2020) - ஆரோக்கியத்திற்கான யோகா - வீட்டில் யோகா (Yoga for Health- Yoga at Home)
    • கூ.தக. : சர்வதேச யோகா தினம் ஐ.நா. பொது சபையில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி (ஜீன் 21) 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நீர்நிலையியல் தினம் (World Hydrography Day) - ஜீன் 21
  • தந்தையர் தினம் (Fathers Day) 2020 - ஜீன் 21 (ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் (Solar Eclipse) 21-06-2020 அன்று நிகழ்ந்தது. இவ்வாண்டிற்கான அடுத்த சூரிய கிரஹணம் 14-12-2020 அன்று நடைபெறும்.
    • கூ.தக. : சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.
Share:

TNPSC Current Affairs 19,20 June 2020

TNPSC Current Affairs 19,20  June 2020

தமிழ்நாடு

  • வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” 2020 : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

  • 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 இலட்சம் கோடி) சந்தை மதிப்பை பெற்ற முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” (Reliance Industries Limited (RIL)) 19-6-2020 அன்று அடைந்துள்ளது.
  • "சத்தியபாமா” (‘Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement (SATYABHAMA)’) என்ற பெயரில் இணையதள சேவை மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி, சுரங்க துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும்.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை (I-Lab (Infectious disease diagnostic lab)) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 18-6-2020 அன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று  அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • கரிப் கல்யாண் ரோஜ்கார் ( Garib Kalyan Rojgar Abhiyaan) என்ற பெயரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி ஜீன் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக்கான உயர் நிலைக் கூட்டம் காணொலி மூலம் 18 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதற்கு தலைமை தாங்கினார்.
  • 75 வது ஐக்கிய நாடுகளவை பொதுச் சபையின் தலைவராக (75th United Nations(UN) General Assembly) துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர் (69) (Volkan Bozkir) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர். இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் 178 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15, 2020 அன்று துவங்கும் வருடாந்திர அமர்வில் வோல்கன் போஸ்கிர் தலைமையேற்பார்.
    • கூ.தக. : இதற்கு முன்னர் (2019 ஆம் ஆண்டில்) ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை நைஜீரியாவைச் சேர்ந்த டிஜ்ஜானி முகமது பாண்டே(Tijjani Muhammad-Bande) வகித்து வந்தார்.
  • கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் பிரதமராக குபாதேக் போரோனோவ் (Kubatbek Boronov) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation -EPFO) இன் ஊதிய தரவுகளின்படி, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் 28.6% அதிகரித்து 78.58 லட்சமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-20 ஆம் நிதியாண்டில் இது 61.12 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(National Institute of Public Finance and Policy (NIPFP)) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவர் இந்த பதவியில் நான்காண்டுகளுக்கு இருப்பார்.

முக்கிய தினங்கள்

  • நாடுகளுக்கிடையே மோதலின் போது பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) - ஜூன் 19
  • ஐ.நா. உலக அகதிகள் தினம் (World Refugee Day) - ஜீன் 20 | மையக்கருத்து 2020 - ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகின்றன (Every Action Counts)
  • உலக அரிவாள்செல் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease day) தினம் - ஜீன் 19
  • கர்நாட அரசு ‘ஜீன் 18’ ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day) - ஜீன் 18

விளையாட்டுகள்

  • 4 வது ஆசிய இளையோர் மாற்றுத்திறன் கொண்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Para Games ) 1-10 டிசம்பர் 2021 தினங்களில் பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “A Burning” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர் - மேலா மஜீம்தார் (Megha Majumdar)

Share:

TNPSC Current Affairs 16-18 June 2020

TNPSC Current Affairs 16-18 June 2020

தமிழ்நாடு

  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரம் பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.
  • தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "TamilNadu Private Job portal" tnprivatejobs.tn.gov.in இணையதளத்தினை மாண்பு மிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைப்பதற்கும், நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும், அல்லாள இளைய நாயகருக்கு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைப்பதற்கும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கும் , எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்குமான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16-6-2020 அன்று நாட்டினார்கள்.
  • அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட ”சிவகளையில்” நடைபெற்றுவரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் 15-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டன.

இந்தியா

  • உலக போட்டி குறியீடு 2020 (World Competitiveness Index) ல் இந்தியா 43 வது இடத்தைப் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் லஷானே ( Lausanne ) நகரிலுள்ள மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (Institute for Management Development (IMD)) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தாக்கத்தை எதிர்த்து போராடுவதில் உதவும் வகையில் இந்தியாவிற்கு 750 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 17-6-2020 அன்று அறிவித்துள்ளது.
    • கூ.தக.: 16 ஜனவரி 2016 ல் தொடங்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைமையிடம் சீனாவின் பீஜிங் நகரில் உள்ளது. இவ்வமைப்பில் தற்போது 102 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவின் முதல் வாயு பரிமாற்ற அமைப்பு (Indian Gas Exchange (IGX) ) 15-6-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை வாயுவை வர்த்தகர்கள் கொள்முதல் மற்றும் விற்பதற்கான டிஜிட்டல் சந்தையாக இருக்கும். மேலும் , ஏற்கனவே இருக்கும் ’இந்திய ஆற்றல் பரிமாற்ற அமைப்பின்’ (India Energy Exchange (IEX)) கீழ் இந்த புதிய அமைப்பு செயல்படும்.
  • அதிக அளவில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளவில் இந்தியா 150 அணு ஆயுதங்களுடன் 6 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Stockholm International Peace Research Institute (SIPRI)) மூலம் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச சிந்தனை குழுவின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • கூ.தக. : இந்த பட்டியலின் படி, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையில் இந்தியாவை விட சீனா (360 அணு ஆயுதங்கள்) மற்றும் பாகிஸ்தான் (160அணு ஆயுதங்கள்) நாடுகள் அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
      கரோனா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருவோரின் உயிரைக் காக்க மலிவு விலையில், பரவலாகக் கிடைக்கும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) எனும் ஸ்டீராய்டு மாத்திரை உதவலாம் என பிரிட்டனைச் சார்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள்

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில்(United Nations Security Council), 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை 17-6-2020 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டன.ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
    • கூ.தக. :15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது. ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • நேபாள நாட்டிலுள்ள பசுபதிநாத் கோயில் வளாகத்தை (Pashupatinath temple) மேம்படுத்தும் பணிகளுக்காக இந்தியாவின் சார்பாக ரூ.2.33 கோடி நிதியுதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா - நேபாள் இடையே 15-6-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
  • லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தின் இராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கூ.தக. : இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான், இந்திய ராணுவ வீரா்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு அருணாசல பிரதேசத்தில் உள்ள துலுங் லா பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
  • ’செயற்கை நுண்ணறிவிற்கான உலக கூட்டாண்மை (Global Partnership on Artificial Intelligence) அமைப்பின் நிறுவனர் உறுப்பினராக இந்தியா 15-6-2020 அன்று இணைந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கஷகஸ்தான் நாட்டின் பிரதமர் முகமது கால்யி அபில்காஷியேவ் ( Mukhammedkalyi Abylgaziyev ) ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
  • “வெரிஃபைடு”(Verified) என்ற பெயரில் கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களைப் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்பை இந்திய உள்ளிட்ட 12 நாடுகளின் உதவியுடன் ஐக்கிய நாடுகளவை 21-5-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூன்று கருப்பொருட்கள் ( themes) வருமாறு,
    • அறிவியல் - உயிர்களைக் காப்பாற்ற; (science – to save lives)
    • ஒற்றுமை - உள்ளூர் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்க; (solidarity – to promote local and global cooperation)
    • தீர்வுகள் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை ஆதரிக்க.(solutions – to advocate support for impacted populations.)
  • பிரிட்டனில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் அதிக அளவில் நேரடி வெளிநாட்டு முதலீடு பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா (51 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீட்டுடன்) 9 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. உலக முதலீடுகள் அறிக்கை 2020 (UN-World Investment Report 2020) ன் படி, இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா (246 பில்லியன் டாலர்), சீனா (141 பில்லியன் டாலர்) மற்றும் சிங்கப்பூர் (92 பில்லியன் டாலர்) ஆகியவைப் பெற்றுள்ளன.
  • இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் ஐந்தாவது பொருளாதார மந்தத்தை கோவிட்-19 நெருக்கடி உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில், பொருளாதார மந்த நிலைகள் ஏற்பட்ட ஆண்டுகள் மற்றும் அவற்றிற்கான காரணங்கள் வருமாறு,
    • 1958 - பருவ மழைப்பொழிவு பொய்த்து விவசாய உற்பத்தி வீழ்ச்சியினால் ஏற்பட்ட வரவுச்செலவு சமநிலை பிரச்சனை (balance of payments crisis)
    • 1966 - சீனாவுடன் போர் (1962) மற்றும் பாகிஸ்தானுடன் போர்(1965) மற்றும் வறட்சி (Drought)
    • 1973 - ஆற்றல் பிரச்சனை( Energy Crisis ) - OAPEC (Organisation of Arab Petroleum Exporting Countries) நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறைவினால் ஏற்பட்டது.
    • 1980: ஈரான் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் ஏற்பட்ட எண்ணெய் இறக்குமதி பிரச்சினை (Oil Shock)
  • 40 ஜி.எஸ்.டி. கவுண்சில் கூடுகை (காணொளி) 12-6-2020 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
    • கூ.தக. : ஜி.எஸ்.டி. கவுண்சில் (GST Council) 15 செப்டம்பர் 2016 ல் அரசியலமைப்புச் சட்டம் 279A பிரிவின் கீழ் அமைக்கப்பட்டது.
    • ஜி.எஸ்.டி வரி முறை 1 ஜீலை 2017 முதல் இந்தியா முழுவதும் (ஜம்மு காஷ்மீர் தவிர்த்து) அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் 7 ஜீலை 2017 ல் நிறைவேறியது.

முக்கிய தினங்கள்

  • உலக காற்று தினம் (Global Wind Day 2020) - ஜீன் 15
  • உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் (World Day to Combat Desertification and Drought) - ஜீன் 17 | மையக்கருத்து 2020 - உணவு, உணவளி, நாரிழை - நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு (Food, Feed Fibre-The links between consumption and land)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஜாக்ஸா ( Japan Aerospace Exploration Agency (JAXA)) உடன் இணைந்து 2023-ம் ஆண்டில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்க இருக்கிறது. இதன்படி, இஸ்ரோவும், ஜாக்ஸாவும் சேர்ந்து முதல் முறையாக நிலவின் மேற்பரப்பில் ஒரு லேண்டர் மற்றும் ரோவரை தரையிறக்க உள்ளன. இந்த பணி 2023-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்க இருக்கிறது.லேண்டர் அமைப்பை இஸ்ரோ உருவாக்க இருக்கிறது. லேண்டர் மற்றும் ரோவரை ஜப்பானின் ஜாக்ஸா உருவாக்கும் எச்-3 ராக்கெட்டில் பொருத்தி, ஜப்பானில் இருந்து வெற்றிகரமாக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
  • "கேப்டன் அர்ஜீன்” ( 'Captain Arjun - Always be Responsible and Just Use to be Nice) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை ரோபோவை இந்திய இரயில்வேயின் மத்திய இரயில்வே மண்டலம் ( Central Railway zone ) அறிமுகப்படுத்தியுள்ளது.

விளையாட்டுகள்
  • ’விளையாடு இந்தியா’ திட்டத்தின் (Khelo India Scheme) கீழ் ”கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள்” (Khelo India State Centres of Excellence) அருணாச்சல பிரதேசம், கேரளா, கர்நாடகா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிஷா, தெலுங்கானா மற்றும் மிஷோராம் ஆகிய எட்டு மாநிலங்களில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் முக்கிய நோக்கம், ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்க செய்வதாகும்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ‘Klara and the Sun’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நோபல் பரிசு (2017) பெற்ற ஜப்பான் - பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகுரோ(Kazuo Ishiguro)
  • "Naoroji: Pioneer of Indian Nationalism" என்ற பெயரில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ’தாதாபாய் நெளரோஜி’ (Dadabhai Naoroji) அவர்களின் வாழ்க்கை வரலாறை தின்யார் பட்டேல் (Dinyar Patel) எழுதியுள்ளார்.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language