Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

Showing posts with label Daily Current Affairs. Show all posts
Showing posts with label Daily Current Affairs. Show all posts

TNPSC Current Affairs Tamil 30 June 2020

TNPSC Current Affairs 30  June 2020

இந்தியா

  • இரண்டாவது தேசிய கங்கை ஆற்று வடிநில திட்டத்திற்கு (Second National Ganga River Basin Project (SNGRBP)) 400 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • ”சங்கல்ப் பர்வா” ( Sankalp Parva) திட்டம் : நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி, தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்காக 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை ‘சங்கல்ப பர்வா’ எனும் மரம் நடு பிரச்சாரம் நாடெங்கிலும் மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடுவதற்கு, பிரதமரால் அடையாளம் காணப்பட்டுள்ள ஐந்து வகையான மரங்கள் (i) “ஆலமரம்” (ii) “Awla” “நெல்லி (iii) “அரசமரம்” (iv) “அசோகா மரம்” (v) “வில்வமரம்” ஆகியவையாகும். இந்த வகை மரக்கன்றுகள் கிடைக்காவிட்டால் மக்கள் தங்கள் விருப்பப்படி வேறு எந்த மரக்கன்றுகளை வேண்டுமானாலும் நடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்துள்ளது. தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் 29-6-2020 அன்று கையெழுத்திட்டன. இதன்படி பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் இந்த அரசு உதவியுடன் அமைக்கப்படவுள்ளது. இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
  • தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து உலக வா்த்தக அமைப்பில் (World Trade Organization (WTO)) தீா்வுக் குழு அமைக்க ஜப்பான், சீன அரசுகள் கோரியுள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஐசிடி சாதனங்கள் யாவும் உலக வா்த்தக அமைப்பின் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான ஒப்பந்தம்-2 ((Information Technology Agreement (ITA) -2))-இன் கீழ் வருவதாகவும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா அங்கம் வகிக்கும் ஒப்பந்தம் “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1)ஆனது இந்தச் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதை தடை செய்யவில்லை என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது.
  • கூ.தக. : “ஐடிஏ-1” (Information Technology Agreement (ITA) -1) 1996 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு , 1 ஜீலை 1997 அன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தமானது 2015 ல் மேலும் பல அம்சங்களுடன் மறுபடியும் நீட்டிக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

  • மாலாவி (Malawi) நாட்டின் புதிய அதிபராக லாசரஸ் சக்வேரா (Lazarus Chakwera) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : மாலாவி நாட்டின் தலைநகரம் ’லிலோங்க்வே’ (Lilongwe) | நாணயம் மாலாவியன் க்வாச்சா (Malawian Kwacha)
  • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (Association of Southeast Asian Nations (ASEAN)) 36 வது கூடுகை, ‘ஒத்திசைவு மற்றூம் பொறுப்புணர்வு கொண்ட ஆசியான்’ (“Cohesive and Responsive ASEAN”) எனும் மையக்கருத்தில் காணொளி வழியாக 26 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இந்த கூடுகைக்கு 2020 ஆம் ஆண்டில் ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் வியட்நாம் நாட்டின் பிரதமர் நூயன் ஜீவான் புக் (Nguyen Xuan Phuc) தலைமையேற்று நடத்தினார்.
  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ( National Aeronautics and Space Administration (NASA) ) வாசிங்க்டனில் அமைந்துள்ள தனது தலைமையக கட்டிடத்திற்கு நாஷா அமைப்பின் முதல் கறுப்பின பெண் பொறியாளரான மேரி வின்ஸ்டன் ஜாக்சன் (Mary Winston Jackson) என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு : கடந்த ஜனவரி 2020 ல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இந்த வழக்கில் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ள ஈரான் அரசு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்துள்ளது.
  • ஐஸ்லாந்து (Iceland) அதிபர் தேர்தலில் குட்னிங் ஜோகன்னசன் (Guðni Thorlacius Jóhannesson) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

நியமனங்கள்

  • மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுனராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆனந்திபென் பட்டேலுக்கு (Anandiben Patel) கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச வெப்பமண்டல தினம் (International Day of the Tropics) - ஜீன் 29
  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

Share:

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 27- 29 ஜீன் 2020

TNPSC Current Affairs 27-29 June 2020

தமிழ்நாடு

  • கொடுமணல் அகழாய்வில் 2,300 ஆண்டு பழமையான ஊது உலைகண்டுபிடிப்பு : திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான 2,300 ஆண்டு பழமையான ஊது உலை கட்டமைப்பு, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை போன்றவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது. இதுவரை கிடைக்காத பெயராக, 'அகூரவன்' என்ற, தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது, ஒரு இனக்குழுவின் தலைவர் பெயராக இருக்கலாம்.

இந்தியா

  • ”ஸ்டார்ஸ்” (Strengthening Teaching-Learning and Results for States Program (STARS)) என்ற பெயரிலான இந்திய மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்றலை வலுப்படுத்துவதற்கான உலக வங்கியின் நிதியுதவியுடன் திட்டத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3700 கோடி) வழங்குவதாக உலக வங்கி 28-6-2020 அன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் ‘சமாக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் ஹிமாச்சல் பிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
    • கூ.தக. : 1994 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் இந்திய அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
  • "நாஷா முக்த் பாரத்” (Nasha Mukt Bharat) திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா 26-6-2020 (சர்வதேச போதைப் பொருள் கடத்தலுக்கெதிரான தினத்தன்று-International Day Against Drug Abuse and Illicit Trafficking) வெளியிட்டுள்ளார். "நாஷா முக்த் பாரத்” திட்டத்தின் முக்கிய நோக்கம் சிறார் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள் அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும்.
  • அஸ்ஸாம் மாநிலத்தின் ஆயில் இந்தியா லிமிடெட் எண்ணைக் கிணறில் 27-5-2020 அன்று ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்தைக் குறித்து ஆராய முன்னாள் கவுகாத்தி உயர்நீத்மன்ற நீதிபதி BP கடாகே (BP Katakey) தலைமையில் உயர்மட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் 25-6-2020 அன்று அமைத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • சுவிஸ் வங்கிக்கணக்குகள் மற்றும் கணக்கு வைத்துள்ள நிறுவனங்களின் பயனாளிகள் தொடா்பாக விரிவான தகவல்களைப் பெறும் நாடுகளில் பட்டியலில் பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வெளிப்படையான வரி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்த சா்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
  • ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் அதிக அளவில் சேமிப்பு வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 77-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஸ்விஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் கொண்ட அறிக்கையின் படி, இந்தியாவைச் சோ்ந்த தனிநபா்களும் நிறுவனங்களும் ஸ்விட்சா்லாந்திலுள்ள வங்கிகளிலும் இந்தியாவிலுள்ள அதன் கிளை வங்கிகளிலும் ரூ.6,625 கோடி சேமிப்பு வைத்துள்ளனா். இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவாகும்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பியானா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு (வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 / Banking Regulation (Amendment) Ordinance, 2020) ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 27-06-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத் திருத்தத்தின் படி,  வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949 )ன்  பிரிவுகள் 45 மற்றும் 56 ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • ”இ-பஞ்சாயத்து புரஸ்கார் 2020” ( e-Panchayat Puraskars 2020) பரிசுகளை மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது . இதன்படி, முதல் பரிசை ஹிமாச்சல் பிரதேச மாநிலமும், இரண்டாம் பரிசை சட்டிஸ்கர் மாநிலமும், மூன்றாவது பரிசை மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களும் பெற்றுள்ளன.

முக்கிய தினங்கள்

  • தேசிய புள்ளியியல் தினம் (National Statistics Day) - ஜீன் 29 (இந்திய புள்ளியியலின் தந்தை என்றழைக்கப்படும் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸ் (PC Mahalanobis)அவர்களின் பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது) | மையக்கருத்து (2020) - நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாலின சமத்துவம் ( Good Health & Well Being and Gender Equality )
    • கூ.தக. : உலக புள்ளியியல் தினம் - அக்டோபர் 20
  • சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் (Micro, Small and Medium Enterprises (MSME) Day) - ஜீன் 27
  • சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவிற்கான சர்வதேச தினம் (International Day in Support of Victims of Torture) - ஜீன் 26 | மையக்கருத்து - சித்திரவதை : மனித குலத்திற்கு எதிரான குற்றம் (Torture: a crime against humanity)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகின் நீளமான மற்றும் அதிக நேரம் மின்னிய மின்னல்கள் : பிரேஸிலில் 4-3-2019 அன்று ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீண்ட நேரம் மின்னிய மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16.73 விநாடிகளுக்கு மின்னிய மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

விளையாட்டுகள்

  • இந்தியாவின் பழுதூக்கும் வீராங்கனை K.சஞ்சிதா சானுவின் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு விலக்கப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டின் காரணமாக, முன்னதாக அவருக்கு வழங்கப்படாதிருந்த அர்ஜீனா விருது 2018 (Arjuna award for 2018) மறுபடியும் வழங்கப்படவுள்ளது.
  • 2023 ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் நடத்தவுள்ளன.

Share:

TNPSC Current Affairs Tamil 25-26 June 2020


    இந்தியா

    • ”இந்திய காசநோய் அறிக்கை 2020” (“India TB (Tuberculosis) Report 2020”) ஐ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பெரிய மாநிலங்களில் காசநோய் தொற்று அதிகமாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச மாநிலங்கள் உள்ளன.
    • ஆன்லைன் வழியாக இரத்தங்களை ஆர்டர் செய்து பெறுவதற்கான ‘eBloodServices‘ என்ற பெயரிலான மொபைல் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி அமைப்பு (Indian Red Cross Society (IRCS)) இணைந்து தொடங்கியுள்ளன.
    • சுயசாா்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நலிவடைந்த நிலையில் காணப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் செயல்பட வைப்பதற்கான ரூ. 20,000 கோடி கடனுதவி வழங்குவதற்காக, கடன் உறுதியளிப்புத் திட்டத்தை (Credit Guarantee Scheme for Sub-ordinate Debt) மத்திய அமைச்சா் நிதின் கட்கரி 24-6-2020 அன்று தொடங்கி வைத்தாா். இந்த திட்டத்தின்படி, நலிவடைந்த நிலையில் இருக்கும் மற்றும் வாராக் கடன் பட்டியலில் இருக்கும் சுமாா் 2 லட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும். மேலும், இந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
    • நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
    • ஐ.நா. சபையின் சார்பில் நியுயார்க் நகரில் உலக பொது சேவை தினத்தையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தலைமையில் நடந்த இணையவழி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பாக கேரளாவில் சுகாதாரத்துறை பொறுப்பை கவனிக் கிற பெண் மந்திரி கே.கே. ஷைலஜா மட்டும் கலந்து கொண்டு ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் கேரளா மாதிரி’ என்ற தலைப்பில் பேசினார்.
      • இந்த கருத்தரங்கில் ஐ.நா. பொதுச்சபை தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே, எத்தியோப்பியா அதிபர் சாஹ்லே வொர்க் ஜீவ்டே, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரங்கள் துணைச்செயலாளர் லியு ஜென்மின், தென்கொரிய உள்துறை மந்திரி சின் யெங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வெளிநாட்டு உறவுகள்

    • இந்தியாவுக்கு வெளியே துவங்கப்பட்டுள்ள முதல் யோகா பல்கலைக்கழகம் எனும் பெருமையை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ள விவேகானந்தா யோகா பல்கலைக்கழகம் (Vivekananda Yoga University) பெற்றுள்ளது.
    • ரஷியா - இந்தியா - சீனா (Russia-India-China (RIC)) வெளியுறவு அமைச்சர்கள் தரப்பு காணொளிக் கூடுகை 23 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. இதனை ரஷியா நடத்தியது. இந்தியாவின் சார்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
    • ஐ.நா. பொதுச் சபையால் தோற்றுவிக்கப்படவுள்ள வறுமை ஒழிப்பு கூட்டமைப்பின் (‘Alliance for Poverty Eradication’) நிறுவன உறுப்பினராக இந்தியா இணைந்துள்ளது. உலக நாடுகளின் அமைதி, மனித உரிமைகள், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வறுமையால் ஏற்படக் கூடிய அபாயங்கள் குறித்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும், வறுமையை ஒழிப்பதற்காகவும் இந்த கூட்டமைப்பை 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் திஜ்ஜானி முகமது பண்டே(Tijjani Muhammad-Bande) 30 ஜீன் 2020-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவ உள்ளாா்.
    • ஐ.நா. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)) வரும் இரண்டு ஆண்டுகளுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.
    • 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75-வது ஆண்டு வெற்றி விழாவை யொட்டி, மாஸ்கோ நகரில் 24-06-2020 அன்று நடைபெற்ற ரஷிய ராணுவ அணிவகுப்பில் இந்திய வீரர்களும் பங்கேற்றனர். இதை ரஷிய அதிபர் புதின், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். 2-ம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் கடந்த மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்து ஜூன் 24-ந் தேதி நடத்தியுள்ளது.

    பொருளாதாரம்

    • வாங்கும் சக்தியை ( purchasing power parity (PPP)) அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி வெளியிட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தரவுகளை அடிப்படையிலான இந்த பட்டியலில் முதலிடத்தை சீனாவும் , இரண்டாம் இடத்தை அமெரிக்காவும் பெற்றுள்ளன.

    முக்கிய தினங்கள்

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (International Day against Drug Abuse and Illicit Trafficking) - ஜீன் 26
    • சர்வதேச மாலுமிகள் தினம் (International Day of the Seafarer) - ஜீன் 25

    அறிவியல் & தொழில்நுட்பம்

    • சென்னை ஐஐடியானது ‘ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) திட்டம் மூலம் பசுமை எரிசக்தியான ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க ஜொ்மனி ஆராய்ச்சியாளா்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
      • கூ.தக . : சா்வதேச ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக’ஸ்பாா்க்’ (Scheme for Promotion of Academic and Research Collaboration (SPARC)) என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த திட்டம் உயா்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் உலகின் சிறந்த நிறுவனங்களுக்கிடையில் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • விண்வெளி ராக்கெட் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் அறிவித்துள்ளார். வணிக ரீதியில் ராக்கெட் உருவாக்குதல், செயற்கைகோள்களை நிறுவுதல், வணிக ரீதியில் செயற்கைகோள்களை ஏவும் சேவையை வழங்க அனுமதி அளித்தல் போன்றவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்படும். இஸ்ரோவின் கோள்களை ஆராய்ச்சி செய்யும் விண்கல திட்டத்திலும் தனியார் துறை பங்கேற்க முடியும்.
      • விண்வெளி துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் ஆணைய மையம் (Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe)) , தனியார் துறைகளின் விண்வெளி நடவடிக்கைகளை அனுமதிப்பது, முறைப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்கொண்டு சுயமாக முடிவு எடுக்கும். தனியார் நிறுவனங்கள் இன்ஸ்பேஸ் (IN-SPACe) அமைப்பு மூலம் நேரடியாக விண்வெளி துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க முடியும். அந்த அமைப்பு அந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும். அந்த அமைப்பு முடிவு எடுத்துவிட்டால், அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதாவது இஸ்ரோ அல்லது தனியார் அமைப்புகளுக்கு பொருந்தும். மத்திய அரசின் பொதுத்துறை அமைப்பான புதிய விண்வெளி இந்திய நிறுவனம் ( NewSpace India Limited (NSIL)), அரசு மேற்கொண்டுள்ள பெரும் முயற்சியில் முக்கிய பங்காற்றி உள்ளது. இந்த நிறுவனம் இஸ்ரோ ஆராய்ச்சி திட்டங்களை மறுசீரமைத்து, மாற்றங்களை ஏற்படுத்தி மிகவும் பயன் தரக்கூடிய அளவில் விண்வெளி சொத்துகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.

    விளையாட்டுகள்

    • ”இந்திய கராத்தே சங்கத்திற்கு” (Karate Association of India) உலக கராத்தே கூட்டமைப்பு (World Karate Federation) வழங்கியிருந்த அங்கீகாரத்தை 21-6-2020 அன்று இரத்து செய்துள்ளது.

    இதர தகவல்கள்

    • திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், 25-6-2020 அன்று தற்கொலை செய்து கொண்டார். 
      • கூ.தக. : திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இதனை, 1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தொடங்கினார். வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.
Share:

TNPSC Current Affairs Tamil 23-24 June 2020


தமிழ்நாடு

  • இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23-06-2020 அன்று தொடங்கி வைத்தார்.
    • கூ.தக. : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐ.ஓ.டி. உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட உயிரி எரிவாயு (பயோ கியாஸ்) உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ கியாசில் இருந்து சி.பி.ஜி. என்ற ‘கம்பிரஸ்ட் பயோ கியாசை தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் சி.பி.ஜி. மற்றும் 20 டன் உயிரி உரங்கள் தயாரிக்கப்படும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும். தமிழ்நாட்டில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் 1,013 மெகாவாட். இதில் மாநிலத்திற்கு 516 மெகாவாட்டும், தனியாருக்கு 497 மெகாவாடும் சொந்தமானதாகும். 

இந்தியா

  • இந்திரா ராசோய் யோஜனா (‘Indira Rasoi Yojna / Indira Kitchen Scheme’) என்ற பெயரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்தை இராஜஸ்தான் அரசு 22-6-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • ”கரோனில்” (Coronil) மற்றும் ”சுவாசரி” (Swasari) எனும் கரோனா தொற்றுக்கான மருந்துகளை பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகள் 3 முதல் 7 நாள்களில் கரோனா நோயை 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் வென்டிலேட்டர்கள் தயாரிக்க பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான நிவாரண நிதியில் இருந்து (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) ) ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசாங்கத்தால் நடத்தப்படும் கோவிட்-19 மருத்துவமனைகளுக்கு 50,000 வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்க இந்த ரூ.2,000 கோடி உதவும்.
  • பொது விநியோக முறைமையின் (Public Distribution System (TPDS) ) கீழ் மாநில அளவில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான செலவு குறைந்த விநியோக சங்கிலி நெட்வொர்க்குகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய அளவிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சியில் இந்தியாவிற்கான ஐ.நா. உலக உணவு திட்டம் (United Nations World Food Programme (WFP) India) மற்றும் ஐ.ஐ.டி,தில்லி (Indian Institute of Technology (IIT) Delhi ) ஆகியவை இணைந்து ஈடுபடுகின்றன.
  • “இந்தியாவில் கார்பன் வெளியேற்றம் இல்லாத போக்குவரத்து“ (Decarbonising Transport in India) என்ற பெயரில், இந்தியாவில் கரியமில வாயு பயன்பாடு குறைவாக உள்ள போக்குவரத்துக்கு வழிவகுக்கக் கூடிய ஆய்வை, நிதிஆயோக் (NITI Aayog) அமைப்பு சர்வதேசப் போக்குவரத்து அமைப்புடன் (International Transport Forum (ITF) ) இணைந்து, 24 ஜுன், 2020 அன்று தொடங்க உள்ளது.
    • கூ.தக. : 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதும், OECD (Organisation for Economic Co-operation and Development) அமைப்பின் கீழ் இயங்குவதுமான சர்வதேச போக்குவரத்து மன்றத்தின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. போக்குவரத்துக் கொள்கை வகுத்தல் தொடர்பான அரசுகளுக்கிடையேயான இவ்வமைப்பில், 2008-ம் ஆண்டு முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.

விருதுகள்

  • ’ஜெர்மன் புத்தக வர்த்தக அமைப்பின்’ (German Book Trade) அமைதி பரிசு 2020 (Peace Prize 2020), நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் (Amartya Kumar Sen) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் (RBI Central board) பகுதி நேர அலுவல் ரீதியில் அல்லாத இயக்குநராக (Part-Time Non-Official Director) 3-3-2020 முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவுள்ள நடராஜன் சந்திரசேகரன் (Natarajan Chandrasekaran) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் 2016-2020 வரையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • ஐ.நா. பொது சேவைகள் தினம் (UNITED NATIONS PUBLIC SERVICE DAY - ஜீன் 23 | மையக்கருத்து - கோவிட் -19 பெருந்தொற்றுப் பணியிலுள்ள பொது சேவகர்களை மரியாதை செய்வோம் (ON THE FRONTLINES: HONOURING PUBLIC SERVANTS IN THE COVID-19 PANDEMIC RESPONSE)
  • சர்வதேச ஒலிம்பிக் தினம் (International Olympic Day) - ஜீன் 23
  • சர்வதேச விதவைப் பெண்கள் தினம் (International Widows’ Day) - ஜீன் 23 | மையக்கருத்து - கட்புலனாகா பெண்கள் , கட்புலனாகாத பிரச்சனைகள் (Invisible Women, Invisible Problems)
  • உலக இசை தினம் (World Music Day) - ஜீன் 21

அறிவியல் & தொழில்நுட்பம்

  • YUKTI 2.0 ( Young India combating COVID with Knowledge, Technology, and Innovation) என்ற பெயரில் கோவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டு படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான இணையதளத்தை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 23-6-2020 அன்று தொடங்கி வைத்தார். YUKTI 1.0 திட்டம் 11 ஏப்ரல் 2020 அன்று தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • ”துருவா” (‘Dhruva’) என்ற பெயரில் இடம் பெயர் தொழில்நுட்ப வழிகாட்டி சிப்பை (Chip) மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘நேவிக்’ (NAVIC (NAVigation with Indian Constellation)) இடம்பெயர் வழிகாட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த சிப்பை, ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இதர ஸ்மார்ட் கருவிகளில் இணைத்து பயன்படுத்தலாம்.
  • சீனாவிற்கு சொந்தமான பெய்டோ எனும் புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்பின் (BeiDou Navigation Satellite System (BDS)) 3ஆவது கட்டத் திட்டத்தின் கடைசி (55ஆவது) செயற்கைக்கோள் பெய்தொவ் -3 (Beidou-3 navigation satellite) லாங்மார்ச் 3-பி (Long March 3B) ஏவூர்தியின் மூலம் 23-6-2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, விரைவில் இந்த புவியிடங்காட்டி அமைப்பின் உலகச் சேவை தொடங்கபடும் என தெரிகிறது.
  • ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது மொபைல் ஃபோன்களுக்கு ஐஒஎஸ் 14 (iOS 14) எனப்படும் புதிய இயங்குதள (Operating System) பதிப்பை 23-6-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்த, விண்வெளி வீரர்களுக்கான, ”நீர்ம குளிர் மற்றும் வெப்ப ஆடை” ( Liquid Cooling and Heating Garment (LCHG)) க்கு பேட்டண்ட் (patent ) உரிமை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

  • புகழ்பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் தி அண்டர்டேக்கர் (The Undertaker) தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி அண்டர்டேக்கரின் இயற்பெயர், மார்க் காலவே.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ”Legend of Suheldev: The King Who Saved India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமிஷ் திரிபாதி (Amish Tripathi) 

Share:

TNPSC Current Affairs Tamil 21-22 June 2020

TNPSC Current Affairs 21-22 June 2020

தமிழ்நாடு

  • தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் குழு : நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) முதன்மை செயல் அலுவலர் அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் கூகிள் , மைக்ரோசாஃப்ட் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
  • ”பிரதம மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான சுய சார்பு நிதி திட்டத்தினை ( Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) அமல்படுத்துவதற்கான வங்கியாக இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI) ) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை அமைச்சகம் மற்றும் அவ்வங்கியிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கூ.தக. : நாடெங்கிலுமுல்ள 50 இல்டசம் தெருவோர வியாபாரிகள் பயனடைவதற்கான ”PM SVANidhi” திட்டமானது 1 ஜீன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஓராண்டில் மாதத்தவணையாக திருப்பிச் செலுத்துவதற்கான ரூ.10,000/- கடனுதவியைப் பெறலாம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
    • நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு ஏற்பது வழக்கமாக உள்ளது.கவுன்சிலின் 15 உறுப்பு நாட்டுப் பெயா்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டம் - முக்கிய தகவல்கள்:
    • புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி செலவிலான ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 20 ஜீன் 2020 அன்று பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் பொதுப்பணிகளின் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமாகும்.
    • 125 நாட்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 25 வகையான வேலைகள் , புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ரூ.1709 கோடி (200 மில்லியன் யூரோக்கள்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் வளர்ச்சி முகமை (French Development Agency) மற்றும் இந்திய அரசிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-ஆவது இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி , (சென்னையைச் சேர்ந்த) சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச யோகா தினம் (International Yoga Day) - ஜீன் 21 | மையக்கருத்து(2020) - ஆரோக்கியத்திற்கான யோகா - வீட்டில் யோகா (Yoga for Health- Yoga at Home)
    • கூ.தக. : சர்வதேச யோகா தினம் ஐ.நா. பொது சபையில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி (ஜீன் 21) 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நீர்நிலையியல் தினம் (World Hydrography Day) - ஜீன் 21
  • தந்தையர் தினம் (Fathers Day) 2020 - ஜீன் 21 (ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் (Solar Eclipse) 21-06-2020 அன்று நிகழ்ந்தது. இவ்வாண்டிற்கான அடுத்த சூரிய கிரஹணம் 14-12-2020 அன்று நடைபெறும்.
    • கூ.தக. : சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.
Share:

TNPSC Current Affairs 19,20 June 2020

TNPSC Current Affairs 19,20  June 2020

தமிழ்நாடு

  • வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” 2020 : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு வீர தீர செயலுக்கான ”முதல்வா் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தமிழக காவல்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு டிஐஜி டாக்டா் கண்ணன், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெ.மகேஷ், மத இயக்கங்களை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், அந்த பிரிவின் கோயம்புத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.பண்டரிநாதன், சென்னை காவல் ஆய்வாளா் எம்.தாமோதரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • 2600 ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

  • 150 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 இலட்சம் கோடி) சந்தை மதிப்பை பெற்ற முதல் இந்திய நிறுவனம் எனும் பெருமையை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்” (Reliance Industries Limited (RIL)) 19-6-2020 அன்று அடைந்துள்ளது.
  • "சத்தியபாமா” (‘Science and Technology Yojana for AtmaNirbhar Bharat in Mining Advancement (SATYABHAMA)’) என்ற பெயரில் இணையதள சேவை மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி, சுரங்க துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதாகும்.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கரோனா ஆய்வகத்தை (I-Lab (Infectious disease diagnostic lab)) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 18-6-2020 அன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.நாட்டில் போக்குவரத்து வசதியே இல்லாத, கிராமங்களுக்குச் சென்று  அங்குள்ள மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்த நடமாடும் கரோனா ஆய்வகங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.தினந்தோறும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் 25 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளும், 300 இஎல்ஐஎஸ்ஏ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • கரிப் கல்யாண் ரோஜ்கார் ( Garib Kalyan Rojgar Abhiyaan) என்ற பெயரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி ஜீன் 20ம் தேதி தொடங்கி வைக்கிறார். ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்க வழிவகுக்கும்

சர்வதேச நிகழ்வுகள்

  • ”ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை” பற்றிய சர்வதேச ஒத்துழைப்புக்கான உயர் நிலைக் கூட்டம் காணொலி மூலம் 18 ஜீன் 2020 அன்று நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இதற்கு தலைமை தாங்கினார்.
  • 75 வது ஐக்கிய நாடுகளவை பொதுச் சபையின் தலைவராக (75th United Nations(UN) General Assembly) துருக்கியைச் சேர்ந்த வோல்கன் போஸ்கிர் (69) (Volkan Bozkir) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர். இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் 178 ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 15, 2020 அன்று துவங்கும் வருடாந்திர அமர்வில் வோல்கன் போஸ்கிர் தலைமையேற்பார்.
    • கூ.தக. : இதற்கு முன்னர் (2019 ஆம் ஆண்டில்) ஐ.நா பொதுச் சபையின் தலைவர் பொறுப்பை நைஜீரியாவைச் சேர்ந்த டிஜ்ஜானி முகமது பாண்டே(Tijjani Muhammad-Bande) வகித்து வந்தார்.
  • கிர்கிஸ்தான் (Kyrgyzstan) நாட்டின் பிரதமராக குபாதேக் போரோனோவ் (Kubatbek Boronov) நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

  • பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation -EPFO) இன் ஊதிய தரவுகளின்படி, இந்தியாவில் முறையான வேலைவாய்ப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் 28.6% அதிகரித்து 78.58 லட்சமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-20 ஆம் நிதியாண்டில் இது 61.12 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

  • மத்திய நிதியமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் பங்குவகிக்கும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(National Institute of Public Finance and Policy (NIPFP)) தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் டாக்டா் உா்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவர் இந்த பதவியில் நான்காண்டுகளுக்கு இருப்பார்.

முக்கிய தினங்கள்

  • நாடுகளுக்கிடையே மோதலின் போது பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (International Day for the Elimination of Sexual Violence in Conflict) - ஜூன் 19
  • ஐ.நா. உலக அகதிகள் தினம் (World Refugee Day) - ஜீன் 20 | மையக்கருத்து 2020 - ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகின்றன (Every Action Counts)
  • உலக அரிவாள்செல் சோகை அல்லது சிக்கில் நோய் (Sickle cell disease day) தினம் - ஜீன் 19
  • கர்நாட அரசு ‘ஜீன் 18’ ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
  • நிலையான சுவையுணவுக்கலை தினம் (Sustainable Gastronomy Day) - ஜீன் 18

விளையாட்டுகள்

  • 4 வது ஆசிய இளையோர் மாற்றுத்திறன் கொண்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Para Games ) 1-10 டிசம்பர் 2021 தினங்களில் பஹரைன் (Bahrain) நாட்டில் நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “A Burning” என்ற புத்தகத்தின் (நாவல்) ஆசிரியர் - மேலா மஜீம்தார் (Megha Majumdar)

Share:

TNPSC Current Affairs 13-15 June 2020

TNPSC Current Affairs 13-15 June 2020

இந்தியா

  • ”I-FLOWS” (Integrated Flood Warning System) என்ற பெயரில் ஒருங்கிணைந்த வெள்ள அபாய முறைமையை   மும்பை நகரில்    மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைந்து தொடங்கி வைத்துள்ளனர். இதனை,  மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், பூனேவைச் சேர்ந்த ’இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐ.ஐ.டி.எம்)’ ( Indian Institute of Tropical Meteorology (IITM))  உருவாக்கியுள்ளது.
  • “ஆரோக்கியபாத்” (Aarogyapath) என்ற பெயரில் ’தேசிய சுகாதார விநியோகச் சங்கிலி இணையதளத்தை (www.aarogyapath.in)’ (National Healthcare Supply Chain Portal)  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
  • கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, 'ரெம்டெசிவிர்'ஐ வழங்க, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், 'டோசிலிசுமாப்' மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • தனியார் வங்கிகளின் உரிமையாளர்களைப் பற்றி ஆராய பி.கே.மொகந்தி (P K Mohanty) தலைமையிலான பணிக்குழுவை ரிசர்வ் வங்கி 12-6-2020 அன்று அமைத்துள்ளது.
  • QS உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் 2021 (QS World University Rankings 2021) ல் முதல் 200 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து மூன்று பல்கலைக்கழகஙக்ள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவையாவன,
    • IIT மும்பை -  172 வது இடம் 
    • IISc பெங்களூரு - 185 வது இடம்
    • IIT டெல்லி - 193 வது இடம்
இப்பட்டியலில் உலகளவில் முதல் மூன்று இடங்களை முறையே  மாசாசூட் பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) (அமெரிக்கா), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) (அமெரிக்கா) மற்றும் Harvard University (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)  (அமெரிக்கா) ஆகியவை பெற்றுள்ளன.
  • ’ஷேகர் மித்ரா’ ( ‘Shakar Mitra’ ) என்ற பெயரில் இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டமானது  தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தின் (National Cooperative Development Corporation  - NCDC) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
  • ”பால ஷ்ராமிக் வித்யா யோஜனா” (Bal Shramik Vidya Yojana) என்ற பெயரில், 8-18 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும்  அனாதைக் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை    உத்தரப்பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.   
  • பழங்குடி பள்ளி மாணவர் தங்குமிடங்களுக்கு   ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் ( ISO (International Organization for Standardization) 9001:2015 ) பெற்ற இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ஒடிஷா பெற்றுள்ளது.
  • ஆதார் அட்டை மூலம் ஆன்லைன் வழியாகவே சேமிப்பு வங்கி கணக்கை தொடங்குவதற்கான சேவையை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லையையொட்டி அமைந்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை தனது நாட்டின் பகுதிகளாக பாவித்துள்ள  புதிய வரைபடத்துக்கு  ஒப்புதல் அளிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 13-6-2020 அன்று நேபாள  நாட்டின் நாடாளுமன்றத்தில்  நிறைவேறியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்ட , அமெரிக்காவின், மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு தலைவராக கேத்தி லூதர்ஸ் ( Kathy Lueders) எனும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டத்தின் படி, 2024–ம் ஆண்டில் ‘ஆர்ட்டிமிஸ் 1’ விண்கலம்  ‘ஓரியன் ராக்கெட்’  மூலம் விண்ணில் ஏவப்பட்டு, முதல் பெண் நிலவில் கால் பதிப்பார்

விருதுகள்

  • விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) (Dr Rattan Lal ) ”சா்வதேச உணவு விருது” (World Food Prize) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்திரேலிய அரசின்’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா பதக்கம்’ (“the Medal of the Order of Australia”) இந்திய இசை  (வீணை)  வல்லுனரும் ’கலாக்ருதி’(Kalakruthi) எனும் அமைப்பின் நிறுவனருமான சோபா சேகருக்கு ( Shobha Sekhar ) அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக முதியோர் நிந்தனை விழிப்புணர்வு தினம் ( World Elder Abuse Awareness Day   )   - ஜீன்  15 
  • உலக இரத்த தானம் செய்வோர் தினம் (World Blood Donor Day) - ஜீன் 14 | மையக்கருத்து 2020 - ‘பாதுகாப்பான இரத்தம் உயிர்களைப் பாதுகாக்கிறது’ (Safe Blood Saves Lives)
  • சர்வதேச அல்ஃபினிஷம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) - ஜீன் 13

விளையாட்டுகள்

  • இந்தியாவின் மூத்த முதல் தர கிரிக்கெட் வீரா் வசந்த் ராய்ஜி (100) 13-6-2020 அன்று தெற்கு மும்பை வால்கேஷ்வரில் முதுமை காரணமாக காலமானாா்.கடந்த 1939-இல் கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அணி சாா்பில் நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுகமானாா். வலது கை பேட்ஸ்மேனான அவா், 1940-இல் 9 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் ஆடினாா். மொத்தம் 277 ரன்களை குவித்தாா். அதில் அதிகபட்சம் 68 ஆகும். விஜய் மொ்ச்சண்ட் தலைமையிலான மும்பை அணி சாா்பில் 1941-இல் அறிமுகமாகி மேற்கு இந்திய அணிக்கு எதிராக ஆடினாா். வசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.
  • சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (Federation Internationale de Football Association) 2020 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 108 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியைல் முதல் ஐந்து இடங்களை முறையே பெலிஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Lockdown Liaisons: Leaving and Other Stories” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஷோபா டே (Shobha De) 
Share:

TNPSC Current Affairs 10-12 June 2020

TNPSC Current Affairs 10-12 June 2020

தமிழ்நாடு

  • சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 11-6-2020 அன்று திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலுள்ள 1018  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து அரசாணையை தமிழ் வளர்ச்சித்துறை 10-6-2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன. இனி அதை விடுத்தது
    • உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் எக்மோர் என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும்.
  • இந்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான தமிழகத்தைச் சேரத முனைவர் ஏ. வைத்தியநாதன் 10-6-2020 அன்று காலமானார். இவர் , 1962 முதல் 72 வரை திட்டக் குழுவில் திட்டமிடுதலுக்கான பிரிவில் வைத்தியநாதன் செயலாற்றியுள்ளார்.
  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக)  ஜெ. அன்பழகன் காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி 10-6-2020 அன்று காலை காலமானார்.
  • 2019-2020 ஆம் கல்வியாண்டின் 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் 11ம் வகுப்பிற்கான நிலுவையில் உள்ள தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% வருகைப்பதிவுக்கு 20% கணக்கில் எடுத்துக் கொள்ளபடும் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • லாக்டவுண் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக https://tnskill.tn.gov.in என்ற இணைய தளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சம்பந்த பட்டோர் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ (Operation Desert Chase) என்ற பெயரில் வேவுபார்த்தலுக்கெதிரான நடவடிக்கையின் (anti-espionage operation) மூலமாக இந்திய இராணுவத்திலிருந்து தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்த முயன்ற இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை பணியாளர்களை இந்திய இராணுவ புலனாய்வுத் துறை அலுவல் இரகசிய சட்டம் 1923 (Official Secrets Act, 1923) இன் கீழ் கைது செய்துள்ளது. இந்த ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
  • ’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’ (Haldwani biodiversity park) உத்தரக்காண்ட் மாநிலத்தில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி (2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ”பாரத்மாலா திட்டத்தை” (Bharatmala Pariyojana) செயல்படுத்தி முடிப்பதற்கான கால இலக்கு 2021-2022 லிருந்து 2025-2026 ஆக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • கூ.தக. : பாரத்மாலா திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டமாகும். இந்த திட்டமானது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப், ஹரியானா செல்லும். பின்னர் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக சென்று சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் வழியாக இந்தியா- மியான்மர் எல்லை வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு ரூ.5.35 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
    • இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 38 ஆயிரம் கி.மீ கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2022ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐசிஆர்ஏ) தெரிவித்துள்ளது.
  • பசுக்களை பாதுகாப்பதற்கான ‘உத்தரப்பிரதேச பசுவதை தடுப்புச் சட்டத்தில்( Uttar Pradesh cow slaughter act, 1955’) உத்தரப்பிரதேச அரசு திருத்தங்களை (Cow Slaughter Prevention (Amendment) Ordinance, 2020) மேற்கொண்டுள்ளது. இதன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ5 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிருஷ்ணன் ரெட்டி (G Kishan Reddy) தலைமையில் 9 சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளடங்கிய புதிய குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
  • இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
  • தேசிய உயர்கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியல் 2020 11-6-2020 அன்று வெளியிடப்பட்டது.
    • இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்க தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில், வெவ்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வி நிறுவனங்களின் விவரம் வருமாறு,
பிரிவு : பொறியியல் கல்லுாரி
  1. சென்னை ஐ.ஐ.டி.,
  2. பெங்களூா் இந்திய அறிவியல் கழகமும்
  3. தில்லி ஐஐடி
பிரிவு: பல்கலைக்கழகங்கள்
1.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பிரிவு: மேலாண்மை
1.இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
2.இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா
பிரிவு: கல்லூரிகள்
1.மிரண்டா ஹவுஸ், புதுதில்லி
2.லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, புதுதில்லி
3.இந்து கல்லூரி, புதுதில்லி
4.புனித ஸ்டீபன் கல்லூரி, புதுதில்லி
5.பிரசிடென்சி கல்லூரி, சென்னை
பிரிவு: கட்டிடக்கலை
1.இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர்
2.இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே
3.இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு
பிரிவு: மருந்தியல்
1.ஜமியா ஹம்தர்த், புதுதில்லி
2.பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
3.தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மொஹாலி
பிரிவு: சட்டம்
1.இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, பெங்களூரு
2.தேசியசட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி
3.நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2020 ல் தமிழகக் கல்வி நிலையங்களின் நிலை
  • பல்கலைக்கழக தரவரிசையிலும் 7-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையிலும் 9-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-ஆவது இடத்தில் இருந்து 41-ஆவது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-இல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜா் பல்கலை., 69-இல் இருந்து 84-ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிா்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூா் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன
  • கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.
  • மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சென்னை மருத்துவ கல்லூரி 12-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 40 இடங்களில் 7 தனியாா் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள், தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi) என்ற பெயரில் நாடுதழுவிய நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme-UNDP) , ஹிந்துஸ்தான் கோகோகோலா நிறுவனம் (Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB)) மற்றும் ஹைதராபாத்தைச் சேரத ‘ரிசைக்கால்’ ("Recykal") ஆகியவை இணைந்து இந்தியாவில் அமல்படுத்தவுள்ளன.
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) ஒரு லட்சத்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி (NCERT) யும், ரோட்டரி இந்தியாவும் (Rotary India) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.இதன் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும்.மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவும், டென்மார்க்கும் மின்சக்தித்துறையில், சமநிலை, மறுபரிசீலனை, இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில், வலுவான, ஆழமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கா ரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 5-6-2020-ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியத் தரப்பில் மின்சக்தித் துறையின் செயலர் திரு சஞ்சீவ் நந்தன் சகாயும், டேனிஷ் தரப்பில் இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் திரு. ஃப்ரெட்டி ஸ்வேனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
    • நீண்டகால எரிசக்தி திட்டமிடல், தொலைநோக்கு, மின்சக்தி விநியோகத்தில் தளர்வு உள்ளிட்ட மின்சக்தித் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
  • லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் : கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை.
பின்னணி : லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா்.

பொருளாதாரம்

  • நடப்பு நிதியாண்டில் (2020-21) இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் 3.2 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வில் (ஜீன் 2020) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகவும், இந்த ஆண்டில் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறையும்பட்சத்தில் அடுத்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பிருப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருதுகள்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ வின் உயரிய விருதான ’நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம்’ (‘NASA Distinguished Public Service Medal’ ) இந்திய வம்சாவளி (கேரளத்தைச் சேர்ந்த) அமெரிக்க தொழிலதிபர் ரஞ்சித் குமாருக்கு ( Renjith Kumar ) வழங்கப்பட்டுள்ளது.
  • "ஆசியாவின் நோபல்" என்றழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது, கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்லாந்து தலைநகா் மணிலாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மகசேசே அறக்கட்டளை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகமே முடங்கிப் போயுள்ளதால் அந்த விருதுக்குரியவா்களைத் தோ்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விருது ரத்து செய்யப்படுவது, கடந்த 60 ஆண்டுகளில் இது முன்றாவது முறையாகும்.
    • கூ.தக. : 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் உட்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் - கீ ஆகியோரும் இந்த விருது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலக அங்கீகாரமளித்தல் தினம் (World Accreditation Day) - ஜீன் 9

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகில் முதல் முறையாக ஒரு கோள் உருவாவதை படம் பிடித்துள்ளதாக பிரான்சு நாட்டை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்கள், பூமியிலிருந்து 520 ஒளியாண்டு தொலைவில் உள்ள ‘ஆரிகா’ (Auriga) பால்வெளித் திரளிலுள்ள ‘AB Aurigae’என்ற நட்சத்திரத்தினருகில் ஒரு புதிய கோள் உருவாவதைப் European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்கள்.
  • கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை போலந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.
  • சூரியன் மற்றும் பூமியை ஒத்த, கெப்ளர் - 160 (Kepler-160) எனும் நட்சத்திரம் மற்றும் ”KOI-456” எனும் கோளையும் ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck Institute for Solar System Research (MPS) , University of Göttingen, அமெரிக்காவின் University of California, மற்றும் NASA வின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வின் படி, இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற ”பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள்” மற்றும் ”தெற்காசிய பிராந்தியங்களில்” தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.
  • "அனன்யா” (ANANYA) என்ற பெயரில் கிருமி நாசினி ஸ்பிரேயை (disinfectant spray)   பூனேவிலுள்ள  அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.

Share:

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language