Study Material, Model test questions, Tips and Tricks, Job Notification

TNPSC Current Affairs 1-10 மே 2020

TNPSC Current Affairs 1-10 மே 2020

தமிழ்நாடு

  • சி.ரங்கராஜன் குழு  நியமனம் :  கொரோனா நோய்த் தாக்குதலால்  பாதிப்படைந்துள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரத்தில் எப்படி மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும். 24 பேர் கொண்ட இக்குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் இடம்பெற்றுள்ளனர்.
  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் 2-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் , தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை (Dalit Ezhilmalai)   6-5-2020 அன்று காலமானார்.

இந்தியா

  • “NSafe” என்ற பெயரில் மறுபடியும் பயன்படுத்தக் கூடிய  நுண்ணுயிர்க் கொல்லி  மாஸ்க்கை (antimicrobial mask) ஐ.ஐ.டி .டெல்லி  ஆராய்ச்சிக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.
  • ” பிரவாசி ராகத் மித்ரா“ (Pravasi Raahat Mitra) என்ற பெயரில் தமது மாநிலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு  அரசின் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கான மொபைல் செயலியை  உத்தரப்பிடதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • ”மதிய உணவு ரேசன் திட்டத்தை” (Mid-Day Meal ration) அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.  இத்திட்டத்தின் மூலம், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் அவர்களுக்கான மதிய உணவிற்கான செலவுத் தொகை மாநில அரசினால் அனுப்பி வைக்கப்பட்டது.
  • இந்தியாவின் முதல் நடமாடும் கோவிட்-19 சோதனை பேருந்து ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் குழுவின் மூலம்  தயாரிக்கப்பட்டு மும்பையில்  பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
  • அறிவியல் ஆராய்ச்சி வெளியீடுகளில் 2018 ஆம் ஆண்டில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தகவல் மேலாண்மை முறைமை (National Science and Technology Management Information Sysytem (NSTMIS)) தெரிவித்துள்ளது.
  • ”கோவிட் கதா” ( “COVID KATHA- A Multimedia Guide for Mass Awareness”) எனும்  பல்லூடக  கோவிட்-19 விழிப்புணர்வு  கையேட்டை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ்வர்த்தன் வெளியிட்டுள்ளார்.
  • காஷ்மீர் குங்குமப்பூ (Kashmir saffron) விற்கு புவிசார் குறியீடு   வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் குங்குமப்பூ ஜம்மு காஷ்மீரின்   கரீவா (Karewa) உயர்நிலப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.  மேலும்,  மணிப்பூரின் கருப்பு அரிசி (Manipur black rice) மற்றும் கோரக்பூரின்  டெரகோட்டா (Gorakhpur terracotta) ஆகியவற்றிற்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
    • கூ.தக. : 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் புவிசார் குறியீடு  டார்ஜிலீங் தேயிலைக்கு (Darjeeling Tea) வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ’தேசிய உட்கட்டமைப்பு திட்டத்திற்கான” (National Infrastructure Pipeline (NIP))  உயர்மட்டக் குழு தனது இறுதி அறிக்கையை  மத்திய நிதியமைச்சரிடம்  29 ஏப்ரல் 2020 அன்று சமர்ப்பித்தது.   மத்திய பொருளாதார விவகார  துறை செயலர் அதானு சக்ரவர்த்தி (Atanu Chakraborty) தலைமையில்  கடந்த டிசம்பர் 2019 ல் அமைக்கப்பட்ட இந்த உயர்மட்ட குழுவின் நோக்கம்,  இந்திய அரசின் இலக்கான 2025 ஆம் ஆண்டிற்குள்  இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக   உயரத்துவதற்கான  உட்கட்டமைப்பு  வசதிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு   ரூ.102 இலட்சம் கோடி செலவி ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுப்பதாகும். தேசிய நில மேலாண்மை நிறுவனம் (National Land Management Corporation) எனும் அமைப்பை உருவாக்க இந்த குழு  பரிந்துரை செய்துள்ளது. 
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (Mahatma Gandhi National Rural Employment GuaranteeScheme (MGNREGS))  அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கி சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் முதலிடத்தை சட்டிஷ்கர் மாநிலம் பெற்றுள்ளது.  2,34 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.
  • 2019 ஆம் காலண்டர் ஆண்டில்   மொத்தம் 7.3 ஜிகா வாட் சூரிய ஆற்றலை நிறுவி  உலகளவில் இந்தியா மூன்றாவது சூரிய ஆற்றல் சந்தையாக உருவெடுத்துள்ளது.   Mercom India Research எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் உள்ளன.
  • ”ஜனாசாதி சுகம் செயலி” (Janaushadhi Sugam app) என்ற பெயரில் ஜெனரிக் மருந்து கடைகள் அமைந்திருக்கும் இடங்களை பொதுமக்கள் எளிதாக கண்டறிவதற்கான மொபைல் செயலியை  மத்திய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • ”கிசான் சபா செயலி” (Kisan Sabha App) : விநியோகச் சங்கிலி மற்றும் சரக்குப் போக்குவரத்து மேலாண்மை முறையுடன் விவசாயிகளை இணைக்கும் கிசான் சபா செயலியை புதுதில்லி அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் சிஎஸ்ஐஆர்- மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம்(CSIR-Central Road Research Institute (CSIR-CRRI))  உருவாக்கியுள்ளது.

பயன்பாடுகள் : 

  • விவசாயிகள், போக்குவரத்து நிறுவனங்கள், சேவை வழங்குவோர் பூச்சி மருந்துகள், விற்பனையாளர்கள், பதனக் கிடங்குகள் மற்றும் சேமிப்புக் கிடங்கு உரிமையாளர்கள், மண்டி விற்பனையாளர்கள், நுகர்வோர் பெரிய சில்லரை விற்பனை கடைகள், ஆன்லைன் கடைகள், நிறுவன வாங்குவோர் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களை இந்தச் செயலி இணைக்கிறது.
  • தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை தேவைப்படும் விவசாயிகள் அல்லது அதிக விவசாயிகளின் தொடர்பை விரும்பும் மண்டி விற்பனையாளர்கள் அல்லது பல நேரங்களில் காலியாகவே மண்டிக்குச் செல்லும் லாரி உரிமையாளர்கள் என விவசாயத்துடன் தொடர்புள்ள யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒற்றைத் தளமாக இது செயல்படுகிறது.
  • உரங்கள், பூச்சி மருந்து விற்பனையாளர்கள் போன்ற விவசாய சேவைகள் துறைச் சேர்ந்தவர்கள், தங்கள் சேவைக்கு அதிக விவசாயிகளை அடையக்கூடிய வகையில் கிசான் சபா செயலி பயன்படுகிறது.
  • பதனப்படுத்தும் கிடங்குகள் அல்லது சேமிப்பு கிடங்குகளுடன் தொடர்புடையவர்களுக்கும் இது பயனுடையதாக இருக்கும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கும் கிசான் சபா செயலி ஒரு தளமாக விளங்குகிறது.
  • ” ஆயுஷ் சஞ்சீவனி செயலி” ("Ayush Sanjivani") என்ற பெயரில் பொது மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வுகள் மற்றும் கோவிட்-19 பற்றிய தகவல்களடங்கிய செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 7-5-2020 அன்று வெளியிட்டுள்ளது.
  • “நமது நாட்டை தெரிந்து கொள்ளுங்கள்” (Dekho Apna Desh) என்ற பெயரில்  15 வது இணையதள காட்சி தொடரை  'பஞ்சாப்- கையேட்டுக்கு அப்பால்' என்ற பெயரில்  சுற்றுலா அமைச்சகம்  வெளியிட்டுள்ளது.
  • “ஆபரேஷன் சமுத்திர சேது” (Operation Samudra Setu) : வெளிநாடுகளிலிருந்து இந்திய குடிமக்களை அழைத்துவருவதற்காக தேசிய அளவிலான முயற்சியின் ஒரு அங்கமாக “சமுத்ர சேது”, அதாவது கடல் பாலம் செயல்பாட்டை இந்திய கடற்படை தொடங்கியுள்ளது.  முதற்கட்டமாக  ஐ.என்.எஸ். ஜலஸ்வா (INS Jalashwa) மற்றும் ஐ.என்.எஸ். மாகர் (INS Magar) ஆகிய  இந்திய கடற்படை கப்பல்கள் மூலம் மாலத்தீவிலுள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
  • GARUD - Government Authorisation for Relief Using Drones
  • ‘CMAPP (Comprehensive Monitoring of Agriculture, Price, and Procurement)’ என்ற பெயரில் விவசாயிகளின் தேவைகளை கண்காணிப்பதற்கான  மொபைல் செயலியை ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • ஆயுா்வேத மருந்தான அஸ்வகந்தாவை கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.
  • ஆந்திரப்பிரதேச மாநிலம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில்   7-5-2020 அன்று அதிகாலை விஷ வாயு கசிவு ஏற்பட்டதில்  10 க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பலியாகினர்.நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் விபத்திற்கு காரணமான வாயுவின் பெயர் ஸ்டைரீன் (styrene)  என்பதாகும். இவ்வாயு  எத்தனைல் பென்சீன் எனவும் அழைக்கப்படுகிறது.   கூ.தக. :  இந்த  விபத்திற்கு அபராதமாக, எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • ஹிஸ்புல் முஜாஹிதீன் பங்கரவாத அமைப்பின் தலைவர் ரெயாஸ் நைக்கூ -வை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவனது கிராமத்தில் பாதுகாப்பு படையினா் 6-5-2020 அன்று  சுட்டுக் கொன்றனா்.
  • ”வந்தே பாரத் திட்டம்” (Vande Bharat Mission) என்ற பெயரில் கரோனா நோய்த்தொற்று சூழலில் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வரும் நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
  • 2020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்களில் முதலிடத்தை தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பட்டியல் வெளியிட்டுள்ளது.அமெரி்க்காவின் முன்னணி பத்திரிகையான போர்ப்ஸ், 2020ம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 36.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில் முதலிடத்தையும், தொழிலதிபர் ராதாகிருஷ்ணன் தமனி, 13.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாம் இடத்திலும், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், 11.9 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் மூன்றாம் இடத்திலும், உதய் கோட்டாக், 10.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பில் நான்காம் இடத்திலும், கௌதம் அதானி 8.9 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 5 வது இடத்திலும் உள்ளனர்.மேலும், பார்தி ஏர்டெல் சுனில் மிட்டல் 6 வது இடத்திலும், சைரஸ் பொன்னவாலா, 7-வது இடத்திலும், குமார் பிர்லா, 8-ம் இடத்திலும், லஷ்மி மிட்டல்,9-ம் இடத்திலும், அசிம் பிரேம்ஜி, 10-வது இடம் என 10 பேர் பணக்கார இந்தியராக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
  • கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லோக்பால் உறுப்பினரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான அஜய்குமாா் திரிபாதி (62) 2-5-2020 அன்று  மாரடைப்பால் காலமானார்.
  • உலகிலேயே அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை ராமாயணம்  தொடா் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் 7.7 கோடி மக்கள் இந்தத் தொடரைப் பாா்த்துள்ளனா்.
  • "மிஷன் சாகர்” (“Mission Sagar”) என்ற பெயரில் கோவிட்-19 பேராபத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு    நாடுகளான மாலத்தீவு, மடகாஸ்கர், செஷல்ஸ் மற்றும் காமரோஸ் ஆகியவற்றிற்கு  உணவுப் பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள், HCQ மாத்திரைகள்  ஆகியவற்றை கடல்வழியாக  இந்திய கடற்படைக் கப்பல்  ஐ.என்.எஸ். கேசரி  (Indian Naval Ship Kesari) மூலம்  அனுப்பி வைப்பதற்கான திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட செகாதர் குழுவின் (Shekatar Committee) பரிந்துரையின் படி இந்திய இராணுவ பொறியியல் சேவைகளிலுள்ள  9,304 பதவிகளை ஒழிப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நிதி அயோக் மற்றும்  பிரிமால் பவுண்டேசன் (Primal Foundation) இணைந்து   தாத்தா - பாட்டி திட்டம்(Surakshit Dada-Dadi and Nana-Nani Abhiyan)   எனும் திட்டத்தை 5-5-2020 அன்று தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்  நாடு முழுவதிலுமுள்ள  மூத்த குடிமக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களைக் குறித்த பெருமளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • ”யாஷ்” (YASH - Year of Awareness on Science & Health) என்ற பெயரில் கோவிட் -19 பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கான திட்டத்தை   தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  தகவல் தொடர்பு கவுண்சில் (National Council for Science & Technology Communication (NCSTC) )  மற்றும்  மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை ( Department of Science & Technology (DST)) இணைந்து தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

  • இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற 75-ஆவது தினத்தையொட்டி, ஆங்கிலேய ராணுவத்துக்காகப் போரிட்டு உயிா்த்தியாகம் செய்த 87,000 இந்திய வீரா்களுக்கு பிரிட்டனில் 8-5-2020 அன்று மரியாதை செலுத்தப்பட்டது.
  • ” தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” எனும் புதிய பயங்கரவாத அமைப்பை  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் , பாகிஸ்தான் தொடங்கி உள்ளது.பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின்  மூன்று உயர் தலைவர்களால் இந்த அமைப்பு கட்டுப்படுத்தப்படுகிறது  என உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு உதவிடும் வகையில் இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஈராக் நாட்டின் 6வது பிரதமராக முஸ்தஃபா அல் காதிமி (Mustafa Al Kadhimi) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய வம்சாவழி அமெரிக்க பெண்மணி மனிஷா சிங் (Manisha Singh) பொருளாதார ஒத்துழைப்பு மற்றூம் வளர்ச்சிற்கான அமைப்பின் (Organization for Economic Cooperation and Development(OECD)) அமெரிக்க பிரதிநிதியாக ( US envoy) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உலக வங்கியின் சர்வதேச மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கிக்கான ( International Bank for Reconstruction and Development (IBRD)) அமெரிக்க பிரதிநிதியாக  இந்திய அமெரிக்க வழக்கறிஞர்  அசோக் மைக்கேல் பிண்டோ (Ashok Michael Pinto) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் (President of the European Council) -  E. சார்லஸ் மைக்கேல்  (H.E. Charles Michel)
  • இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் பெஞ்சமின் காண்ட் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சீனாவின் லாங் மார்ச் 5-பி ஏவூர்தி 5-5-2020  அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 2-ம் உலகப்போர் வெற்றியின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு ரஷியா பதக்கம் வழங்கியுள்ளது
  • கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ரூ.61,500 கோடி வழங்க சம்மதித்து உள்ளன. கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் 5-5-2020 அன்று நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.61 ஆயி ரத்து 500 கோடி) வழங்க முன் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தேவையான நிதி திரட்டும் இந்தக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய அமெரிக்கரான சரிதா கோமட்டிரெட்டியை அதிபா் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
  • முதல்முறையாக பாகிஸ்தான் விமானப்படையில் தேர்வு செய்யப்பட்ட ‘இந்து’ விமானி எனும் பெருமையை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின்  இந்து இளைஞரான ராகுல் தேவ் பெற்றுள்ளார்.
  • கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது.இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 
  • இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது தனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயர்களை  தன்னுடைய மகனுக்கு   (வில்ஃபிரெட் லாரி நிக்கோலஸ் என) சூட்டியுள்ளார் .
  • பிரிட்டன் ராயல் சொஸைட்டியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட   விக்ரம் தேஷ்பாண்டே சோ்க்கப்பட்டுள்ளாா்.  மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்ற விக்ரம் தேஷ்பாண்டே, தனது ஆராய்ச்சிகள் மூலம் இயந்திரப் பொறியியலுக்குப் பல்வேறு முக்கியப் பங்களிப்புகளை நல்கியுள்ளாா்.
    • கூ.தக. : அறிவியல் சாா்ந்த பயன்பாடுகளை ஊக்குவிப்பதற்கான கூட்டமைப்பான பிரிட்டன் ராயல் சொஸைட்டி 1660-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • பிரிட்டன் மற்றும் அந்நாட்டின் ஆளுகையின் கீழிருந்த காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழில்நுட்பவியலாளா்கள் ஆகியோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்களாக உள்ளனா்.
    • புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன், சாா்லஸ் டாா்வின், ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்ரீநிவாச ராமானுஜன் உள்ளிட்டோா் ராயல் சொஸைட்டியின் உறுப்பினா்கள் ஆவா்.
  • கொரோனாவுக்கான சிகிச்சைக்கு அமெரிக்காவின் கைலீட் சயன்சஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ (remdesivir) மருந்தை பயன்படுத்தலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
  • அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை ரஷ்யா வடிவமைத்துள்ளது.
  • ஈரான் நாட்டில் ‘தோமான்’ (Toman) என்ற புது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தோமானின் மதிப்பு  10,000 ஈரானிய ரியால் (Rial) ஆக இருக்கும்.

பொருளாதாரம்

  • 2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை மூடிஸ் நிறுவனம் (Moody's)   தனது முந்தைய கணிப்பான 2.6% த்திலிருந்து  பூஜ்ஜியமாக குறைத்து கணித்துள்ளது.
  • ”பாரத்மார்க்கெட்” (‘bharatmarket’) என்ற பெயரில் இந்தியாவிலுள்ள அனைத்து வியாபாரிகளுக்குமான மின் வணிக சந்தை (e-commerce marketplace)  வசதியை  bharatemarket.in எனும் இணையதளத்தின் மூலமாக  ஏற்படுத்துவதாக   அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT) )  அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் ’ENCORE’ எனப்படும்  கடலோர மற்றும் கடல் வள திறன் மேம்பாட்டு’ (‘ Enhancing Coastal and Ocean Resource Efficiency  - ENCORE ) திட்டத்திற்கு  உலக வங்கி  400 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டின் ’ஓபன் பட்ஜெட் சர்வே 2019’ (Open Budget Survey 2019) எனப்படும் நிதியறிக்கை வெளிப்படைத்தன்மை கொண்ட நாடுகளின் பட்டியலில்   இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது.  International Budget Partnership (IBP) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல்  மூன்று இடங்களை முறையே  நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.
  • கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு உதவும் 500 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்திய அரசு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) 8-5-2020 அன்று கையெழுத்திட்டுள்ளன.

விருதுகள்

  • புலிட்சர் பரிசு 2020 (Pulitzer Prize) ல் தனிசிறப்பு புகைப்படப் பிரிவில்  (feature photography)  இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த   தார் யாசின், முக்தர் கான் மற்றும் சன்னி ஆனந்த் ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ஜப்பான் நாட்டின் ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’ (‘Order of Rising Sun’ ) விருது மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் தன்ஞம் தபாலி சிங்கிற்கு (Thangjam Dhabali Singh) வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • ”ஐ.நா. சுற்றுசூழல் திட்டத்தின்” ( United Nations Environment Programme (UNEP) ) அடுத்த இரண்டாண்டுகளுக்கான  தேசிய  நல்லெண்ண தூதுவராக  (National Goodwill Ambassador)   பாலிவுட் நடிகை  ‘தியா மிர்ஷா” (Dia Mirza) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : 5 ஜீன் 1972 ல் தொடங்கப்பட்ட ஐ.நா.  சுற்றுசூழல் திட்டத்தின் (United Nations Environment Programme)  தலைமையிடம் கென்யா நாட்டிலுள்ள நைரோபி (           Nairobi )  நகரில் உள்ளது.  இவ்வமைப்பின் தற்போதைய  செயல்  இயக்குநராக டென்மார்க்கை சேர்ந்த இங்கர் ஆண்டர்ஸன் (Inger Andersen) உள்ளார்.
  • பாராளுமன்ற பொது கணக்கு குழுவின் (Parliament’s Public Accounts Committee(PAC)) தலைவராக  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ( Adhir Ranjan Chowdhury) மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ரிசர்வ் வங்கியின் மைய வாரியத்தின் (Central Board of the Reserve Bank of India(RBI)) இயக்குநராக தருண் பஜாஜ் (Tarun Bajaj) 6-5-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • தேசிய தொழில்நுட்ப தினம் (National Technology Day ) - மே 11
  • சர்வதேச அன்னையர் தினம் - மே 10
  • இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோரின் சர்வதேச நினைவு தினம் (Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives during World War II)  - மே 8,9
  • உலக வலசை போகும் பறவைகள் தினம் (World Migratory Bird Day) - மே 9 | மையக்கருத்து 2020 - ‘பறவைகளே, எங்கள் உலகை இணையுங்கள்’ (“Birds Connect Our World”)
  • உலக ரெட் கிராஸ் / ரெட் கிரசண்ட் தினம் (World Red Cross and Red Crescent Day) - மே 8
    • கூ.தக. : 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்வதேச ரெட் கிராஸ் குழுவின் (International Committee of the Red Cross(ICRC))  தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
  • உலக தாலசீமியா நோய் தினம் (World Thalassaemia day)  - மே 8
  • உலக தடகள தினம் (World Athletics Day) - மே 7
  • உலக கை சுகாதார தினம் (World Hand Hygiene)  - மே 5
  • உலக ஆஸ்துமா நோய் தினம் (World Asthma Day) - மே 5 | மையக்கருத்து 2020 - போதும், ஆஸ்துமா இறப்புகள் (Enough Asthma Deaths)
  • சர்வதேச மருத்துவச்சிகள் தினம் (International Day of the Midwife) - மே 5
  • உலக தீயணைப்புப்படை வீரர்கள் தினம் (International Firefighters’ Day) - மே 4
  • உலக ஊடக சுதந்திர தினம் (World Press Freedom Day ) - மே  3
  • உலக சிரிப்பு தினம் (World Laughter Day) - மே 3
  • உலக சூரைமீன் தினம் (World Tuna Day) - மே 2
  • சர்வதேச வானியல் தினம் (International Astronomy Day) - மே 2
  • சர்வதேச தொழிலாளர் தினம் (International Labour Day) - மே 1
  • ஆயுஷ்மான் பாரத் தினம் (Ayushman Bharat Diwas) - ஏப்ரல்  30

அறிவியல் & தொழில்நுட்பம்

  • “ Luhman 16A” என்று பெயரிடப்பட்டுள்ள வியாழன் கோளையொத்த  குறுங்கோள் (dwarf) புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • “UV blaster” என்ற பெயரில் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமி ஒழிப்பு கோபரத்தை (Ultraviolet Disinfection Tower)  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி  மற்றும் வளர்ச்சி நிறுவனம் (Defence Research and Development Organisation(DRDO)) உருவாக்கியுள்ளது.
  • ”ஆர்க்டிகா-எம்” ( ‘Arktika-M’ ) என்ற பெயரில்  ஆர்டிக்  பருவநிலை மற்றும் சுற்றுசூழல் ஆராய்ச்சிக்கான ரஷியாவின்  முதல் செயற்கைக் கோள் Soyuz-2.1b  ராக்கெட்டின் மூலம் டிசம்பர் 2020 ல் அனுப்பப்படவுள்ளது.
  • “eCovSens” என்ற பெயரில்  கோவிட்-19  கொரோனா வைரஸை 30 நொடிகளில் கண்டறிவதற்கான  ‘உயிரி உணர்வி’ (biosensor)  தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியை  ஹைதராபாத்திலுள்ள, தேசிய  விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Animal Biotechnology(NIAB))  உருவாக்கியுள்ளது.
  • முதல் முறையாக “ஸ்பைனோசரஸ் ஆகிப்டியாகஸ்” ( ‘Spinosaurus aegyptiacus’)  ‘நீரில் வாழும் தகவமைப்புடைய  , இறைச்சி உண்ணும் டைனோசர் (meat-eating aquatic Dinosaur) வகை  வாழ்ந்ததற்கான ஆதாரங்களை   வட ஆப்பிரிக்காவின் மொரோக்கா சகாரா பகுதியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  இந்த டைனோசர்கள் வகை  வாழ்ந்த காலம் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • “அதுல்யா” ( ‘Atulya’ ) என்ற பெயரில் , கொரோனா வைரஸ் கிருமியை 30 நொடிகளில் ஒழிக்கவல்ல, மைக்ரோ வேவ் தொற்றுநீக்கியை ( microwave steriliser)  பூனேவைச் சார்ந்த   அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT))  தயாரித்துள்ளது.
  • நாசாவின் முதல் செவ்வாய் கிரக ஹெலிகாப்டருக்கு   இந்திய வம்சாவளி இந்திய சிறுமி வனீஷா ரூபானி    (Vaneeza Rupani) பரிந்துரைத்த “இஞ்செனிட்டி” (Ingenuity)  என்ற பெயரி சூட்டப்பட்டுள்ளது.
  • ”HCARD - Hospital Care Assistive Robotic Device” என்ற பெயரில் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிபுரியும் ரோபோவை  மேற்குவங்க மாநிலம் துர்க்காப்பூரிலுள்ள  சி.எஸ்.ஐ.ஆர். - மத்திய எந்திரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR- Central Mechanical Engineering Research Institute (CMERI)) உருவாக்கியுள்ளது.
  • "நோட்ஸ்கிளீன்” (NOTESCLEAN) என்ற பெயரில் ரூபாய் நோட்டுகளிலுள்ள தொற்றுக் கிரிமிகளை அகற்றுவதற்கான  கருவியை   ஹைதராபாத்திலுள்ள  மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI))  உருவாக்கியுள்ளது.
  • ”துருவ்ஸ்” (Defence Research Ultraviolet Sanitiser (DRUVS)) என்ற பெயரில் புற ஊதாக்கதிர்கள் மூலம்  செயல்படும்  கிருமி நாசினி  கருவியை  ஹைதராபாத்திலுள்ள   மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் (Defence Research and Development Organisation (DRDO)) இம்ராட் ஆராய்ச்சி மையம்  (Research Centre Imarat (RCI)) உருவாக்கியுள்ளது.
  • கோவிட் கவாச் எலைஷா” (COVID KAVACH ELISA) என்ற பெயரில் கோவிட்-19 க்கு எதிரான உடலிலுள்ள நோயெதிர்ப்பு ஆண்டிபாடியை சோதனை செய்வதற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட   எலைஷா ( IgG ELISA test)   சோதனைக் கருவியை   பூனேவிலுள்ள     தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Council of Medical Research (ICMR)-National Institute)  தயாரித்துள்ளது.
  • பூமியின் வட துருவத்தில் ஏற்பட்டிருந்த 620,000 சதுர மைல்கள்  பரப்புள்ள மிகப்பெரிய ஓஷோன்  ஓட்டை அடைபட்டுள்ளதாக   ஐரோப்பிய ஒன்றியத்தின்   கோப்பர்நிக்கஸ்  வானியல் ஆராய்ச்சி சேவைகள் மையம் (Copernicus Atmosphere Monitoring Service (CAMS)) அறிவித்துள்ளது.

விளையாட்டுகள்

  • 2020 ஆம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் (Badminton World Championship) போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு,    29 நவம்பர் 2021 முதல் 5 டிசம்பர் 2021 வரை ஸ்பெயின் நாட்டின் ஹீல்வா எனுமிடத்தில் நடைபெறவுள்ளதாக  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் இளையோர் விளையாட்டுகள் (Commonwealth Youth Games)   2023 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • டென்னிஸ் விளையாட்டிற்கான ‘ஃபெட் கோப்பை இதய விருது’ (Fed Cup Heart Award) பெறும்  முதல் இந்தியர் எனும் பெருமையை  சானியா மிர்ஷா பெற்றுள்ளார்.  இந்த விருதை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (International Tennis Federation(ITF) ) வழங்கியுள்ளது.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது . சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை முறையே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Shivaji in South Block: The Unwritten History of a Proud People” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - கிரிஷ் கூபர் (Girish Kuber)
  • “The Room Where It Happened: A White House Memoir” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஜான் போல்டன் (John Bolton)
  • ’Vijyant at Kargil: The Life of a Kargil War Hero’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்கள் - வி.என்.தாபர், நேகா திவேதி

  Download as PDF

Share:

0 கருத்துகள்:

Post a Comment

Join with us

Labels

Blog Archive

Blog Archive

Recent Posts

Contact Form

Name

Email *

Message *

Search This Blog

See your own Language